Saturday, July 21, 2007

மீண்டும் பல்லாயிரம் தமிழ்மக்களை பலிகொடுக்க வன்னியில் தயாராகும் பாஸிஸப் புலிகள

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இளைஞர்கள் பலவந்தமாக படைகளில் இணைக்கப்படுவதால் இளைஞர்கள் ஒளிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களிடம் அப்பிரதேசவாசிகள் பலர் உரையாடியுள்ளனர் . அமெரிக்கா, பிரித்தானியா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடை செய்யபட்ட புலிகள் அமைப்பிற்கு குடும்பத்தில் ஒருவரை வழங்க வேண்டுமென புலிகள் வலியுறுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்.

உங்கள் குடும்பத்தில் புலிப்போராளிகள் யாரும் இல்லை எனவே நீ கட்டாயமாக அமைப்பில் இணைய வேண்டுமென புலிகள் வலியுறுத்தினர் எனினும் நான் அதற்கு உடன்படவில்லை என்னை அவர்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் அவர்கள் என்னை போராளியாக்க முயற்சித்தனர் .

அழைத்துச் சென்று பயிற்சிகள் மற்றும் மோதல் தொடர்பாக விளக்கமளித்தனர் . எனினும் எனது குடும்பம் என்னில் தங்கியிருப்பதால் இதற்கு நான் உடன்படவில்லை என 20 வயதுடைய இளைஞனான ராஜதுரை பொன்னம்பலம் (உண்மையான பெயர் குறிப்பிட விரும்பாது பெயர் மாற்றி கூறியுள்ளார்)

இவர் தப்பியுள்ளார் எனினும் பலருக்கு இவ்வாறான வாய்ப்பு இல்லை பலர் அடுத்து தாங்களே என்ற அச்சத்துடன் வாழ்கின்றனர் எனினும் புலிகள் தாங்கள் பலவந்தமாக படைகளில் ஆட்களை சேர்ப்பது தொடர்பாக வெளியான கருத்துக்களை மறுத்துள்ளனர் தொண்டு நிறுவன பணியாளர்கள் புலிகள் இவ்வருட ஆரம்பத்தில் அவ்வாறு செய்தனர் எனினும் பின்னர் தொண்டர்களை விதிவிலக்காக்கியிருந்தனர் என தெரிவித்துள்ளதாக ரொய்டஸ் தெரிவித்துள்ளது

எனினும் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொருவரை போராட்டத்தில் அர்பணிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை சில குடும்பத்திலிருந்து ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் இணைத்துகொள்ளவில்லை என்பதனை உறுதிப்படுத்தவே நாம் முயல்கின்றோம் என புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

வடக்கே புலிகளின் பகுதிகளில் உள்ள குடும்பங்களிற்கு புலிகளிடமிருந்து யார் அமைப்பில் இணையவேண்டுமென கோடிட்டு கடிதங்கள் அனுப்படுகின்றன. . சில சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தமது உள்ளுர் பணியாளர்களை அனுப்பாது தடுத்துள்ளது சில அரசார்பற்ற நிறுவனங்களும் இவ் ஆட்சேர்பு தொடர்பாக கவலையடந்துள்ளது.
அதாவது சில பணியாளர்கள் கடத்தப்படுகின்றனர். காரணம் இவ் ஆட்சேர்பிற்காக புலிகளின் அரசியில் துறைப் பொறுப்பாளர் மனிதாபிமான தொண்டர்கள் ஆட்சேர்ப்பில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என உறிதியளித்துள்ளார் . எனினும் அப்படி தற்போது இல்லை என தெரியவருகிறது என நோர்வே தன்னார்வ தொண்டு நிறுவனமான போரூட்டின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரத்தில் ஆட்சேர்ப்பு தொடர்பான விளம்பரங்கள் போஸ்டர்கள் ஒட்டப்படுள்ளன கரும்புலிகளின் படங்கள் கடைகள், பஸ் தரிப்பிடங்களில் ஒட்டப்பட்டுள்ளன இவற்றில் எம்முடன் இணையுங்கள் எங்கள் மண்னை சிங்கள இராணுத்திடமிருந்து காப்போம் எனற வசனங்களுடன் துப்பாக்கி ஏற்றியவாறு நிற்கும் புலி போராளியின் படத்துடன் காணப்படுகிறது.

கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுவரின் கயிற்றுடன் தூக்கியவாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிற்கும் படம் பெரிதாக கிளிநொச்சி நகர்புறத்தில் காணப்படுவதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எனது ஒரு மகன் 63 நாட்களிற்கு முதல் புலிகளுடன் இணைந்துகொண்டார் எனினும் அவர் சுய விருப்புடன் இணையவில்லை அவரது தாயார் சுகவீன மடைந்துள்ளார் எனவே மகன் சென்றவுடன் தாயின் உடல் நிலை மோசமடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இன்னொருவர் புலிகள் அமைப்பில் இணைந்துள்ள தனது மூத்தமகன் செல்வத்தைத் தடுக்கவே மகன் இணைந்தார் என தெரிவித்தார் . இப்பகுதிகளில் 70 சதவீதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். (பிரதான புலிப் பயங்கரவாதிகளை தவிர) இவர்களின் நாளந்த வருமானம் 1 டொலரினையும் விட குறைவு என தெரியவருகிறது.

இவ்வாறான நிலை இரு தசாப்தங்களாக தொடர்கின்றது 1983 வரையான உள்நாட்டு மோதலில் 70.000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.ஜக்கிய நாடுகளின் சிறுவர்களக்கான யுனிசெப் அமைப்பு தற்போதும் புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்ந்துக்கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளது.

1.591 முறைப்பாடுகளை வயது குறைந்தோர் படையில் சேர்ப்பது தொடர்ப்பில் யுனிசெப் பதிவு செய்துள்ளது. இவற்றுள் ஒரு சிறுவன் 9 வயதுடைவன் என்று குறிப்பிடத்தக்கது. அதே வேளை ஜ.நாவின் தூதுவர்கள் இராணுவத்தினர் சிறிவர்களை படையில் சேர்ப்பதற்கு கருணா குழுவினரிற்கு உதவுவதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் தாம் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக ஜ.நா தெரிவித்துள்ள கருத்தினை மறுத்துள்ளது அதே வேளை 18 வயதிற்கு மேற்பட்டோரையே தாம் படையில் சேர்ப்பதாகவும் சிலர் படையில் சேரவிரும்பும்போது தமது உண்மையான வயதினை சொல்வதில்லையென புலிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகள் பெரும் படை நடவடிக்கை ஒன்றினை செயல்படுத்தும் முகமாக ஆட்சேர்ப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் என ரொய்ட்டர் தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளது

No comments: