Saturday, October 27, 2007

அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்"

அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்"
[வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2007, 05:18 PM ஈழம்] [பி.கெளரி]
அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார்.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

கிழக்கு மாகாணத்தை விடுவித்து விட்டோம், விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழித்து விட்டோம், விடுதலைப் புலிகளை வன்னிக்குள் முடக்கி விட்டோம், வடக்கு - கிழக்கிற்கு வெளியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிறுத்தி விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களை 21 கரும்புலிகளும், இரட்டை இயந்திரங்களை கொண்ட இரு வானூர்திகளும் ஒரு இரவினில் மாற்றி விட்டன.

மிகவும் பாதுகாப்பான அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை மிகவும் அதிர்ச்சிகரமான தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர். கொமோண்டோத் தாக்குதல் பாணியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

வான் படைத்தளத்தை 7 மணிநேரம் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன், தளத்தில் இருந்த 80 விழுக்காடு வான் கலங்களையும் அழித்துள்ளனர். இதில் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பீச்கிராஃப் கண்காணிப்பு வானூர்தியும் அடங்கும்.

வட களமுனையில் அனுராதபுர தளமே பிரதான பங்கை ஆற்றி வந்தது. அனுராதபுரம் நகரில் இருந்து 4 கி.மீ தொலைவில் நுவரேவேவா குளத்திற்கு அருகில் வான்தளம் அமைந்துள்ளது. வட போர்முனையின் வழங்கல்களில் இத்தளம் பிரதான பங்கை வகித்து வருகின்றது. சிறிலங்காவில் உள்ள மிகவும் பலப்படுத்தப்பட்ட தளங்களில் இதுவும் ஒன்று.

சிறிலங்கா வான் படையின் பிரதான பயிற்சி கல்லூரி அங்கு அமைந்துள்ளது. 9 ஆவது தாக்குதல் உலங்குவானூர்தி பிரிவு (ஸ்குவாட்றன்), 6 ஆவது உலங்குவானூர்தி பிரிவு, 1 ஆவது பயிற்சி வானூர்திப் பிரிவு, 7 ஆவது உலங்குவானூர்திப் பிரிவு, 11 ஆவது ஆளில்லாத உளவு வானூர்திப்பிரிவு என்பவற்றின் தளமும் அதுவாகும்.

ஆளில்லாத உளவு வானூர்தி, பீச்கிராஃப் எனப்படும் கண்காணிப்பு வானூர்தி போன்றவற்றில் உள்ள நவீன புகைப்பட மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் உதவியுடன் புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்படுவதனால் இத்தளம் வான் படை மற்றும் கடற்படையினருக்கான புலனாய்வுத் தகவல்களை வழங்கும் மையமாக செயற்பட்டு வந்தது.

புதிய உத்திகளை உடைய பயிற்சிகளை வழங்கும் பொருட்டு இத்தளத்திற்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் வந்து செல்வது வழக்கம்.

"கஜபா சுப்பர் குறஸ் - 2007" எனப்படும் விழா தாக்குதலுக்கு முன்னைய இரவு நடைபெற்றது. சாலியபுர விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த விழாவில் படைத்துறையில் உள்ள பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். சாலியபுர இராணுவ முகாம் அனுராதபுரம் வான் படைத்தளத்திற்கு அண்மையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தளத்தில் இருந்த பெரும்பாலான படையினர் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். ஏனையோர் அதனை கேட்டுக்கொண்டிருந்தனர். இக் கவனக்குறைவுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானினால் அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் முகாமிற்கு அருகில் உள்ள தென்னந்தோப்பில் தங்கியிருந்தனர்.

அவர்கள் கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் உத்தரவுக்காக காத்திருந்தனர். ஆனால் முகாமின் செயற்பாடுகள் அமைதியாகவே இருந்தன.

இந்த அணியினர் ரி-56 ரக துப்பாக்கிகள், கைக்குண்டுகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், 7 செய்மதி தொலைபேசிகள், கத்திகள் என்பவற்றை வைத்திருந்தனர். இந்த அணியில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததுடன், 3 பெண் புலிகளும் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம் - நெலுங்குளம் வீதியைக் கடந்த பின்னர் தளத்தின் வடக்குப் பகுதியினூடாக உள்நுழைந்துள்ளது. அதிகாலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த முதலாவது முட்கம்பி வேலியை வெட்டி தளத்தின் வெளிப்பகுதிக்குள் நுழைந்தனர். இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில் மற்றுமொரு கம்பி வேலி சமாந்தரமாக போடப்பட்டிருந்தது.

இந்த இரு வேலிகளுக்கும் இடையில் மின்சார வேலி ஒன்று சிறிதாக அமைக்கப்பட்டிருந்த போதும் அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே விடுதலைப் புலிகள் இலகுவாக உள்நுளைய அது அனுகூலமாக இருந்தது. தற்போதைய முக்கிய கேள்விகள் என்ன எனில், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன? யார் இதற்கு பொறுப்பு? இது சில நோக்கங்களோடு செய்யப்பட்டதா? என்பவை தான்.

விடுதலைப் புலிகளின் அணி உள்நுழைந்ததும், வானூர்தி ஓடுபாதைக்கும் வேலிக்கும் இடையில் புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். அருகில் இருந்த பதுங்குகுழிகளுக்கு குறுக்காக இக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆனால் பாதையின் இருபுறமும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் மிகவும் நேர்த்தியாக சத்த வெடிகளை அகற்றியதுடன், முதலாவது பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை அடைந்திருந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர். பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி சத்தமின்றி ஊர்ந்து செல்ல தொடங்கினர்.

இரண்டாவது குழுவினர் பதுங்குகுழியின் மற்றய முனையை அடைந்து இரு பதுங்குகுழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக நகரத் தொடங்கினர். எனினும் 3 விடுதலைப் புலிகள் பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர்.

நகர்ந்து செல்லும் விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத் தாக்குவதே அவர்களின் திட்டம். இதில் ஆச்சரியம் என்னவெனில் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை. தற்போதைய விசாரணைகளில் அவர்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

முதலாவது அணியில் 14 விடுதலைப் புலிகள் இருந்தனர். அவர்களின் பணி உலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை அழிப்பதுவே.

இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை அழிப்பதற்கு காத்திருந்தது.

முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி "வீ பகுதி" யை நோக்கி நகரத்தொடங்கியது.

அங்கு தான் எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும் பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்து 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர். பதுங்குகுழிக்குள் இருந்த படையினரை கொன்ற பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து கொண்டனர்.

அப்போது நேரம் அதிகாலை 3:20 மணி.

துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் தாக்குதலுக்கு உட்படுவதை அறிந்த படையினர் முகாமை முழுமையான உசார் நிலைக்கு கொண்டுவந்தனர்.

தாக்குதல் தொடங்கியதும் வானூர்தி ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து விட்டனர். எனவே வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக இருந்து வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை.

கோபுரத்திற்கு அருகில் 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலை இருந்தது. சில நிமிடம் நடைபெற்ற கடும் தாக்குதலுக்கு பின்னர் அதனைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத்தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

இதற்கு முன்னர் அவர்கள் வான் பாதுகாப்பு பொறுப்பதிகாரியான பிளைட் லெப். றுவான் விஜரட்ன உள்ளிட்ட பல வான் படையினரை சுட்டுக்கொன்றனர்.

விஜயரட்ன கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அருகில் வீழ்ந்து கிடந்தார். அவர் தனது துப்பாக்கி நிலையை அடைய முற்பட்ட போது வயிற்றில் சுடப்பட்டார். பின்னர் அதிக இரத்தப் போக்கினால் அவர் மரணமடைந்தார்.

இதனிடையே வவுனியா மற்றும் கட்டுநாயக்க வான் படைத்தளங்களில் உள்ள ராடாரில் வவுனியாவை நோக்கி இரு பொருட்கள் செல்வது அவதானிக்கப்பட்டது. அது விடுதலைப் புலிகளின் வானூர்திகள்தான் என உறுதிப்படுத்தப்பட்டதும் வவுனியா, அனுராதபுரம், கொழும்பு பகுதிகளின் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதிகாலை 4:10 மணியளவில் அந்த இரு வானூர்திகளும் வவுனியாவுக்கு மேலாக அனுராதபுரம் நோக்கிச் சென்றன.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் இயங்கிய போதும் வானூர்தி அனுராதபுரம் தளத்தை அடைந்து 3 குண்டுகளை வீசின. அவற்றில் ஒரு குண்டு உலங்குவானூர்திகளின் தரிப்பிடத்திற்கு அருகிலும், இரண்டாவது குண்டு சாலியபுர இராணுவ முகாமிற்கு அருகிலும், மற்றைய குண்டு விவசாயப் பண்ணையிலும் வீழ்ந்தன. பண்ணையில் வீழ்ந்த குண்டினால் அங்கு நின்ற 12 எருமை மாடுகள் உயிரிழந்தன.

கொழும்பில் வான் படைத்தளபதி றொசான் குணதிலக்கவும், நடவடிக்கை பணியகப் பணிப்பாளர் ஏயர் கொமோடோர் கர்சா அபயவிக்கிரமாவும் வான் படைத் தலைமையகத்தின் நடவடிக்கை அறையில் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டதும் அவற்றைத் தாக்கும் படி வவுனியா வான் படைத்தளத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.

ஸ்குவாட்றன் லீடர் அமிலா மொகொரி, பைலட் அதிகாரி ஏ.பி.எம் டி சில்வா ஆகியோர் இரு துப்பாக்கிதாரிகளுடன் பெல்-212 ரக உலங்குவானூர்தியில் புறப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளைத் தாக்குவதே அவர்களின் பிரதான நோக்கம். பெல்-212 ரக உலங்குவானூர்தி அனுராதபுரம் நோக்கிச் சென்ற போது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அனுராதபுரம் வான் பிதேசத்தில் பிரவேசித்து விட்டன.

அப்போது வவுனியா மற்றும் அனுராதபுரம் படைத்தளங்களின் படையினருக்கும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை சுட்டு வீழ்த்துமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அதிகாலை 4:30 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள டொரமடலாவப் பகுதியில் பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது.

பெல்-212 ரக உலங்குவானூர்தி தரையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தான் சிக்கியுள்ளதாக பின்னர் அறியப்பட்டுள்ளது.

படையினர் அதனை விடுதலைப் புலிகளின் வானூர்தி என தவறாக எண்ணியுள்ளனர். உலங்குவானூர்தி தாக்கப்பட்டதும் வவுனியா வான் படைத்தளத்திற்கு அது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்துள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரண்டும் வவுனியாவினூடாக சென்று ராடார் திரையில் இருந்து மறைந்து விட்டன.

தரையில் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை கைப்பற்றிய விடுதலைப் புலிகள் வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கி தாக்குதலை நடத்தினர். அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும் அவர்கள் தாக்கியழித்தனர்.

கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அனுராதபுரம் தளத்தின் தளபதி குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க வவுனியாவில் நிலைகொண்டிருந்த சிறப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் உபால் எதிரிசிங்காவை தொடர்புகொண்டு உடனடியாக சிறப்புப் படையினரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார்.

இதனிடையே அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர். அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். எனினும் சமர் தொடர்ந்தது.

பீச்கிராஃப், சில உலங்குவானூர்திகள் ஆகியவற்றை அழிப்பதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டுவிட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.

காலை 7:00 மணியளவில் மேஜர் சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் 11:00 மணியளவில் மோதல்கள் முடிவுக்கு வந்தன.

21 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் குண்டை வெடிக்க வைத்திருந்தனர்.

செய்மதி தொலைபேசி ஊடாக முற்பல் 10:30 மணிவரையிலும் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி தலைமையுடன் தொடர்புகளை பேணி வந்திருந்தனர். அவர்கள் இரண்டு தமிழீழக் கொடிகளையும் கொண்டு வந்திருந்தனர்.

இத்தாக்குதலில் 4 அதிகாரிகள் உட்பட 13 வான் படையினரும், இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார்.

எம்ஐ-24 - 02

எம்ஐ-17 - 01

கே-8 - 01

பிரி-6 - 01

செஸ்னா-150 - 01

பீச்கிராஃப் - 01

பெல்-212 - 01

ஆளில்லாத வானூர்திகள் - 02

என 8 வான்கலங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன.

பிரி-6 - 03

கே-8 - 01

செஸ்னா வானூர்திகள் - 01

உள்ளிட்ட மேலும் 10 வானூர்திகள் சேதமடைந்தன.

தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் விடுதலைப் புலிகள் அதற்கு உரிமை கோரியிருந்தனர்.

அவர்கள் தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் பெயர்களையும் பதவிகளையும் வெளியிட்டிருந்தனர்.

தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீதான வான் தாக்குதல்கள் மற்றும் விநியோக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாகவே அவர்கள் இத்தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபையை மகிந்த கூட்டியிருந்தார். அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எனினும் இராணுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் நாட்டில் இருக்கவில்லை. வான் படைத்தளபதியையும் அவரது படையினரையும் கடுமையாக சாடிய மகிந்த, கோத்தபாயாவை உடனடியாக அனுராதபுரம் செல்லுமாறும் பணித்திருந்தார்.

அன்று மாலை காவல்துறை மா அதிபர், வான் படைத்தளபதி ஆகியோருடன் அனுராதபுரம் சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச தளத்தின் அழிவுகளை பார்வையிட்டதுடன் தளத்தின் பொறுப்பையும் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் இது தொடர்பாக இராணுவத் தளபதிக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது.

அனுராதபுரம் பகுதிக்கான கட்டளைத் தளபதியாக பனாங்கொடவில் அமைந்துள்ள 11 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ன மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டார்.

தளமானது அவசரமான நிலைமைகளை எதிர்கொள்ளும் தன்மையில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. முகாமை பாதுகாப்பதற்கான எந்தப் பயிற்சிகளும், ஒத்திகைகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை. தாக்குதல் நடைபெற்ற சமயம் காவலில் இருந்த வான் படையினருக்கு அவசர நிலைமைகளை எதிர்கொள்ளும் பயிற்சிகளும் வழங்கப்படிருக்கவில்லை.

முகாம் வெளிப்பகுதியில் வேலிகளை கொண்டிருக்கவில்லை என்பதும் முக்கியமானது. அங்கு பொதுமக்களின் நடமாட்டம் சுதந்திரமாக இருந்தது. தளத்தின் புலனாய்வு பிரிவும் தரம் வாய்ந்தது அல்ல.

இராணுவத்தின் அண்மைய தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் பலத்தை சிதைத்து விடவில்லை. இத்தாக்குதல் தமிழ் மக்களினதும் விடுதலைப் புலிகளினதும் உளவுரனை அதிகரிக்கும் என்பது உண்மை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/full.php?2eVQqZ00bvhYU2edPI7t3acf8Aw4d4HYi3cc2bsC3d434OA3a02vPS2e

அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்"

அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்"
[வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2007, 05:18 PM ஈழம்] [பி.கெளரி]
அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார்.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

கிழக்கு மாகாணத்தை விடுவித்து விட்டோம், விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழித்து விட்டோம், விடுதலைப் புலிகளை வன்னிக்குள் முடக்கி விட்டோம், வடக்கு - கிழக்கிற்கு வெளியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிறுத்தி விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களை 21 கரும்புலிகளும், இரட்டை இயந்திரங்களை கொண்ட இரு வானூர்திகளும் ஒரு இரவினில் மாற்றி விட்டன.

மிகவும் பாதுகாப்பான அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை மிகவும் அதிர்ச்சிகரமான தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர். கொமோண்டோத் தாக்குதல் பாணியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

வான் படைத்தளத்தை 7 மணிநேரம் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன், தளத்தில் இருந்த 80 விழுக்காடு வான் கலங்களையும் அழித்துள்ளனர். இதில் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பீச்கிராஃப் கண்காணிப்பு வானூர்தியும் அடங்கும்.

வட களமுனையில் அனுராதபுர தளமே பிரதான பங்கை ஆற்றி வந்தது. அனுராதபுரம் நகரில் இருந்து 4 கி.மீ தொலைவில் நுவரேவேவா குளத்திற்கு அருகில் வான்தளம் அமைந்துள்ளது. வட போர்முனையின் வழங்கல்களில் இத்தளம் பிரதான பங்கை வகித்து வருகின்றது. சிறிலங்காவில் உள்ள மிகவும் பலப்படுத்தப்பட்ட தளங்களில் இதுவும் ஒன்று.

சிறிலங்கா வான் படையின் பிரதான பயிற்சி கல்லூரி அங்கு அமைந்துள்ளது. 9 ஆவது தாக்குதல் உலங்குவானூர்தி பிரிவு (ஸ்குவாட்றன்), 6 ஆவது உலங்குவானூர்தி பிரிவு, 1 ஆவது பயிற்சி வானூர்திப் பிரிவு, 7 ஆவது உலங்குவானூர்திப் பிரிவு, 11 ஆவது ஆளில்லாத உளவு வானூர்திப்பிரிவு என்பவற்றின் தளமும் அதுவாகும்.

ஆளில்லாத உளவு வானூர்தி, பீச்கிராஃப் எனப்படும் கண்காணிப்பு வானூர்தி போன்றவற்றில் உள்ள நவீன புகைப்பட மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் உதவியுடன் புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்படுவதனால் இத்தளம் வான் படை மற்றும் கடற்படையினருக்கான புலனாய்வுத் தகவல்களை வழங்கும் மையமாக செயற்பட்டு வந்தது.

புதிய உத்திகளை உடைய பயிற்சிகளை வழங்கும் பொருட்டு இத்தளத்திற்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் வந்து செல்வது வழக்கம்.

"கஜபா சுப்பர் குறஸ் - 2007" எனப்படும் விழா தாக்குதலுக்கு முன்னைய இரவு நடைபெற்றது. சாலியபுர விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த விழாவில் படைத்துறையில் உள்ள பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். சாலியபுர இராணுவ முகாம் அனுராதபுரம் வான் படைத்தளத்திற்கு அண்மையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தளத்தில் இருந்த பெரும்பாலான படையினர் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். ஏனையோர் அதனை கேட்டுக்கொண்டிருந்தனர். இக் கவனக்குறைவுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானினால் அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் முகாமிற்கு அருகில் உள்ள தென்னந்தோப்பில் தங்கியிருந்தனர்.

அவர்கள் கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் உத்தரவுக்காக காத்திருந்தனர். ஆனால் முகாமின் செயற்பாடுகள் அமைதியாகவே இருந்தன.

இந்த அணியினர் ரி-56 ரக துப்பாக்கிகள், கைக்குண்டுகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், 7 செய்மதி தொலைபேசிகள், கத்திகள் என்பவற்றை வைத்திருந்தனர். இந்த அணியில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததுடன், 3 பெண் புலிகளும் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம் - நெலுங்குளம் வீதியைக் கடந்த பின்னர் தளத்தின் வடக்குப் பகுதியினூடாக உள்நுழைந்துள்ளது. அதிகாலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த முதலாவது முட்கம்பி வேலியை வெட்டி தளத்தின் வெளிப்பகுதிக்குள் நுழைந்தனர். இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில் மற்றுமொரு கம்பி வேலி சமாந்தரமாக போடப்பட்டிருந்தது.

இந்த இரு வேலிகளுக்கும் இடையில் மின்சார வேலி ஒன்று சிறிதாக அமைக்கப்பட்டிருந்த போதும் அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே விடுதலைப் புலிகள் இலகுவாக உள்நுளைய அது அனுகூலமாக இருந்தது. தற்போதைய முக்கிய கேள்விகள் என்ன எனில், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன? யார் இதற்கு பொறுப்பு? இது சில நோக்கங்களோடு செய்யப்பட்டதா? என்பவை தான்.

விடுதலைப் புலிகளின் அணி உள்நுழைந்ததும், வானூர்தி ஓடுபாதைக்கும் வேலிக்கும் இடையில் புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். அருகில் இருந்த பதுங்குகுழிகளுக்கு குறுக்காக இக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆனால் பாதையின் இருபுறமும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் மிகவும் நேர்த்தியாக சத்த வெடிகளை அகற்றியதுடன், முதலாவது பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை அடைந்திருந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர். பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி சத்தமின்றி ஊர்ந்து செல்ல தொடங்கினர்.

இரண்டாவது குழுவினர் பதுங்குகுழியின் மற்றய முனையை அடைந்து இரு பதுங்குகுழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக நகரத் தொடங்கினர். எனினும் 3 விடுதலைப் புலிகள் பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர்.

நகர்ந்து செல்லும் விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத் தாக்குவதே அவர்களின் திட்டம். இதில் ஆச்சரியம் என்னவெனில் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை. தற்போதைய விசாரணைகளில் அவர்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

முதலாவது அணியில் 14 விடுதலைப் புலிகள் இருந்தனர். அவர்களின் பணி உலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை அழிப்பதுவே.

இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை அழிப்பதற்கு காத்திருந்தது.

முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி "வீ பகுதி" யை நோக்கி நகரத்தொடங்கியது.

அங்கு தான் எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும் பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்து 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர். பதுங்குகுழிக்குள் இருந்த படையினரை கொன்ற பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து கொண்டனர்.

அப்போது நேரம் அதிகாலை 3:20 மணி.

துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் தாக்குதலுக்கு உட்படுவதை அறிந்த படையினர் முகாமை முழுமையான உசார் நிலைக்கு கொண்டுவந்தனர்.

தாக்குதல் தொடங்கியதும் வானூர்தி ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து விட்டனர். எனவே வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக இருந்து வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை.

கோபுரத்திற்கு அருகில் 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலை இருந்தது. சில நிமிடம் நடைபெற்ற கடும் தாக்குதலுக்கு பின்னர் அதனைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத்தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

இதற்கு முன்னர் அவர்கள் வான் பாதுகாப்பு பொறுப்பதிகாரியான பிளைட் லெப். றுவான் விஜரட்ன உள்ளிட்ட பல வான் படையினரை சுட்டுக்கொன்றனர்.

விஜயரட்ன கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அருகில் வீழ்ந்து கிடந்தார். அவர் தனது துப்பாக்கி நிலையை அடைய முற்பட்ட போது வயிற்றில் சுடப்பட்டார். பின்னர் அதிக இரத்தப் போக்கினால் அவர் மரணமடைந்தார்.

இதனிடையே வவுனியா மற்றும் கட்டுநாயக்க வான் படைத்தளங்களில் உள்ள ராடாரில் வவுனியாவை நோக்கி இரு பொருட்கள் செல்வது அவதானிக்கப்பட்டது. அது விடுதலைப் புலிகளின் வானூர்திகள்தான் என உறுதிப்படுத்தப்பட்டதும் வவுனியா, அனுராதபுரம், கொழும்பு பகுதிகளின் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதிகாலை 4:10 மணியளவில் அந்த இரு வானூர்திகளும் வவுனியாவுக்கு மேலாக அனுராதபுரம் நோக்கிச் சென்றன.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் இயங்கிய போதும் வானூர்தி அனுராதபுரம் தளத்தை அடைந்து 3 குண்டுகளை வீசின. அவற்றில் ஒரு குண்டு உலங்குவானூர்திகளின் தரிப்பிடத்திற்கு அருகிலும், இரண்டாவது குண்டு சாலியபுர இராணுவ முகாமிற்கு அருகிலும், மற்றைய குண்டு விவசாயப் பண்ணையிலும் வீழ்ந்தன. பண்ணையில் வீழ்ந்த குண்டினால் அங்கு நின்ற 12 எருமை மாடுகள் உயிரிழந்தன.

கொழும்பில் வான் படைத்தளபதி றொசான் குணதிலக்கவும், நடவடிக்கை பணியகப் பணிப்பாளர் ஏயர் கொமோடோர் கர்சா அபயவிக்கிரமாவும் வான் படைத் தலைமையகத்தின் நடவடிக்கை அறையில் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டதும் அவற்றைத் தாக்கும் படி வவுனியா வான் படைத்தளத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.

ஸ்குவாட்றன் லீடர் அமிலா மொகொரி, பைலட் அதிகாரி ஏ.பி.எம் டி சில்வா ஆகியோர் இரு துப்பாக்கிதாரிகளுடன் பெல்-212 ரக உலங்குவானூர்தியில் புறப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளைத் தாக்குவதே அவர்களின் பிரதான நோக்கம். பெல்-212 ரக உலங்குவானூர்தி அனுராதபுரம் நோக்கிச் சென்ற போது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அனுராதபுரம் வான் பிதேசத்தில் பிரவேசித்து விட்டன.

அப்போது வவுனியா மற்றும் அனுராதபுரம் படைத்தளங்களின் படையினருக்கும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை சுட்டு வீழ்த்துமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அதிகாலை 4:30 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள டொரமடலாவப் பகுதியில் பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது.

பெல்-212 ரக உலங்குவானூர்தி தரையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தான் சிக்கியுள்ளதாக பின்னர் அறியப்பட்டுள்ளது.

படையினர் அதனை விடுதலைப் புலிகளின் வானூர்தி என தவறாக எண்ணியுள்ளனர். உலங்குவானூர்தி தாக்கப்பட்டதும் வவுனியா வான் படைத்தளத்திற்கு அது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்துள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரண்டும் வவுனியாவினூடாக சென்று ராடார் திரையில் இருந்து மறைந்து விட்டன.

தரையில் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை கைப்பற்றிய விடுதலைப் புலிகள் வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கி தாக்குதலை நடத்தினர். அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும் அவர்கள் தாக்கியழித்தனர்.

கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அனுராதபுரம் தளத்தின் தளபதி குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க வவுனியாவில் நிலைகொண்டிருந்த சிறப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் உபால் எதிரிசிங்காவை தொடர்புகொண்டு உடனடியாக சிறப்புப் படையினரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார்.

இதனிடையே அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர். அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். எனினும் சமர் தொடர்ந்தது.

பீச்கிராஃப், சில உலங்குவானூர்திகள் ஆகியவற்றை அழிப்பதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டுவிட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.

காலை 7:00 மணியளவில் மேஜர் சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் 11:00 மணியளவில் மோதல்கள் முடிவுக்கு வந்தன.

21 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் குண்டை வெடிக்க வைத்திருந்தனர்.

செய்மதி தொலைபேசி ஊடாக முற்பல் 10:30 மணிவரையிலும் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி தலைமையுடன் தொடர்புகளை பேணி வந்திருந்தனர். அவர்கள் இரண்டு தமிழீழக் கொடிகளையும் கொண்டு வந்திருந்தனர்.

இத்தாக்குதலில் 4 அதிகாரிகள் உட்பட 13 வான் படையினரும், இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார்.

எம்ஐ-24 - 02

எம்ஐ-17 - 01

கே-8 - 01

பிரி-6 - 01

செஸ்னா-150 - 01

பீச்கிராஃப் - 01

பெல்-212 - 01

ஆளில்லாத வானூர்திகள் - 02

என 8 வான்கலங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன.

பிரி-6 - 03

கே-8 - 01

செஸ்னா வானூர்திகள் - 01

உள்ளிட்ட மேலும் 10 வானூர்திகள் சேதமடைந்தன.

தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் விடுதலைப் புலிகள் அதற்கு உரிமை கோரியிருந்தனர்.

அவர்கள் தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் பெயர்களையும் பதவிகளையும் வெளியிட்டிருந்தனர்.

தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீதான வான் தாக்குதல்கள் மற்றும் விநியோக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாகவே அவர்கள் இத்தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபையை மகிந்த கூட்டியிருந்தார். அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எனினும் இராணுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் நாட்டில் இருக்கவில்லை. வான் படைத்தளபதியையும் அவரது படையினரையும் கடுமையாக சாடிய மகிந்த, கோத்தபாயாவை உடனடியாக அனுராதபுரம் செல்லுமாறும் பணித்திருந்தார்.

அன்று மாலை காவல்துறை மா அதிபர், வான் படைத்தளபதி ஆகியோருடன் அனுராதபுரம் சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச தளத்தின் அழிவுகளை பார்வையிட்டதுடன் தளத்தின் பொறுப்பையும் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் இது தொடர்பாக இராணுவத் தளபதிக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது.

அனுராதபுரம் பகுதிக்கான கட்டளைத் தளபதியாக பனாங்கொடவில் அமைந்துள்ள 11 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ன மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டார்.

தளமானது அவசரமான நிலைமைகளை எதிர்கொள்ளும் தன்மையில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. முகாமை பாதுகாப்பதற்கான எந்தப் பயிற்சிகளும், ஒத்திகைகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை. தாக்குதல் நடைபெற்ற சமயம் காவலில் இருந்த வான் படையினருக்கு அவசர நிலைமைகளை எதிர்கொள்ளும் பயிற்சிகளும் வழங்கப்படிருக்கவில்லை.

முகாம் வெளிப்பகுதியில் வேலிகளை கொண்டிருக்கவில்லை என்பதும் முக்கியமானது. அங்கு பொதுமக்களின் நடமாட்டம் சுதந்திரமாக இருந்தது. தளத்தின் புலனாய்வு பிரிவும் தரம் வாய்ந்தது அல்ல.

இராணுவத்தின் அண்மைய தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் பலத்தை சிதைத்து விடவில்லை. இத்தாக்குதல் தமிழ் மக்களினதும் விடுதலைப் புலிகளினதும் உளவுரனை அதிகரிக்கும் என்பது உண்மை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/full.php?2eVQqZ00bvhYU2edPI7t3acf8Aw4d4HYi3cc2bsC3d434OA3a02vPS2e

Wednesday, October 24, 2007

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேற பிரபாகரன் அனுமதிக்க வேண்டும்- பாஸிஸத்திடம் பாசம்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேற பிரபாகரன் அனுமதிக்க வேண்டும்
[24 - October - 2007] [Font Size - A - A - A]
* அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள்

டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் கடந்த 17 வருடங்களுக்கு அதிகமாக புத்தளத்தில் அகதி முகாம்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில், அம்மக்கள் மீண்டும் வடக்கில் குடியேற பிரபாகரன் அனுமதி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கும் மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அம்மக்கள் குடியேற இடமொன்றை ஒதுக்கி தந்து தொந்தரவுகள் எதுவும் வராதென உறுதியளித்தால் மட்டும் போதும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கான உள்ளூராட்சி மன்ற விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும்போதே அமைச்சர் பதியுதீன் இவ்வாறு கூறினார்:

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இந்த பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சிகள் எப்போதும் அரசாங்கத்துக்கு எதிராக பேசும் சூழ்நிலையே நிலவுகிறது. நாட்டின் பிரச்சினைக்கு உண்மையாக முடிவு காண வேண்டுமென இரு தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் இது இவ்வளவு தூரம் பெருத்திருக்காது.

ஆனால், இரு தரப்பினரும் பிரச்சினையை இருவேறு கோணங்களில் நோக்கும் நிலைமை இங்கு இன்னும் காணப்படுகிறது. இதனால் பிரச்சினையும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

மக்களின் அகதிமுகாம் வாழ்க்கையென்பது மிக கொடுமையானது. இந்த நிலைமை மாற வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. அகதி முகாம்களிலுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது அம்மக்கள் அடையும் சந்தோஷம் கொஞ்சநஞ்சமல்ல.

இந்தப் பிரச்சினையை ஒருபோதும் யுத்தம் மூலம் தீர்க்க முடியாதென்பதே அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தெளிவான நிலைப்பாடாக இருக்கிறது. இம்மாதிரியான பிரச்சினைகள் யுத்தத்தின்மூலம் தீர்க்கப்பட்டதாக வரலாறு கிடையாது. ஆனால், இங்கு ஒவ்வொரு கட்சிகளும் தங்களது சுயநலத்துக்காக சிங்கள பேரினவாதத்தை தூண்டி அதன்மூலம் மக்களை ஒன்றுபடுத்திப் பார்க்கிறது.

எனவே, இவ்வாறான குறுகிய நோக்கங்களை விடுத்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர அனைவரும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதை செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு இங்குள்ள அனைத்து கட்சிகளுக்கும் உண்டு.

இதேநேரம், வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் கடந்த 17 வருடங்களாக புத்தளத்தில் இன்னும் அகதிமுகாம்களிலேயே தங்கியிருக்கின்றனர். அம்மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சிலர் அப்பிரதேசத்தை ஆக்கிரமிக்க வந்ததுபோல் தவறான கோணத்தில் கண்ணாடிபோட்டு பார்க்கின்றனர்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் புத்தளத்தில் 17 வருடங்கள் முடிவடைந்து 18 ஆவது வருடமாக அகதிமுகாம் வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இதுபோதாதென்று "வந்தா வரத்தான்", "வந்து குடியேற்றிவர்கள்" என்றும் அம்மக்கள் சிலரால் நிந்திக்கப்படுகின்றனர்.

எனவே, இவ்வளவு இன்னல்களை சந்திக்கும் அம்மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோ அல்லது அவர்களின் சமாதான செயலகமோ ஆவன செய்ய வேண்டும். எமது சொந்த மண்ணில் குடியேற இடமளிக்குமாறு நாம் கேட்கிறோம். ஏனெனில், புலிகளும் மண்ணுக்காக தான் போராடுகின்றனர். இதில் நாம் ஒருபோதும் தமிழ் மக்களை தவறாக நினைக்கவில்லை.

வடக்கில் ஏதாவதொரு பகுதியை எமது மக்கள் குடியேறுவதற்காக ஒதுக்கித் தருமாறு கேட்கிறோம். விடுதலைப் புலிகளோ அல்லது அவர்களின் சமாதான செயலகமோ அவ்வாறானதொரு இடத்தை ஒதுக்கித் தந்து எந்தத் தொந்தரவும் இருக்காது என்று கூறினால் போதும்.

அத்துடன், இவ்வளவு காலம் எம்மக்களுக்காக பல உதவிகளை புரிந்த புத்தளம் மக்களுக்கும் புத்தளம் அரசியல்வாதிகளுக்கும் சமூகத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Monday, October 22, 2007

புலிகள் தரை, ஆகாய மார்க்கத்தில் தாக்குதல்

அநுராதபுர படைத்தளத்தில் 20 புலிகள், 17 படையினர் பலி 3 வானூர்திகள் சேதமடைந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு

அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது நேற்று திங்கட்கிழமை அதிகாலை விடுதலைப்புலிகள் பாரிய தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மூன்று வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன், தேடுதல் நடத்தச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து நொருங்கியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதிலும், தங்களால் எட்டு வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் நகரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் விமான நிலைய வீதியிலுள்ள விமானப் படைத்தளம் மீதே நேற்று அதிகாலை 3.15 மணியளவில் இந்தப் பாரிய தாக்குதல் இடம்பெற்றது.

தரைவழியாக அதிகாலை 3.15 மணியளவில் விமானப் படைத்தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்த அதேவேளை, சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் விடுதலைப்புலிகளின் இரு விமானங்கள் இந்தத் தளத்தின் மீது பலத்த குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவிய கரும்புலிகள் அணி நாலாபுறத்திலிருந்தும் கடும் தாக்குதல் தொடுக்கவே இரு தரப்புக்குமிடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி.க்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்கள் சகிதமே புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக விமானப் படையினர் தெரிவிக்கின்றனர்.

கரும் புலிகளின் அணி விமானப்படைத் தளத்தினுள் ஊடுவியதையடுத்து உள்ளே பாரிய வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. கரும்புலிகள் ஆர்.பி.ஜி.க்களால் தாக்குதல்களை நடத்தியதுடன், கைக்குண்டுகளையும் வீசித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

படைத்தளத்தினுள் முன்னேற முற்பட்ட கரும்புலிகளை படையினர் தடுத்துநிறுத்த முற்பட்டபோது, கடும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அதிகாலை 4.15 மணியளவில் விமானப்படைத்தளத்திற்கு வந்த புலிகளின் இரு விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளன.இந்தக் குண்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்து பாரிய சத்தத்துடன் வெடித்தபோது, அங்கு பெரும் சேதங்களேற்பட்டன. புலிகளின் இரு விமானங்களும் இரு குண்டுகளையே வீசித் தாக்கியதாக படையினர் கூறுகின்ற போதும், அவை நான்கிற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலை நடத்திய புலிகளின் இரு விமானங்களும் உடனடியாக அங்கிருந்து அகன்ற அதேநேரம், கரும்புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விமானப்படைத்தளத்தின் உட்புறத்தே கடும் தாக்குதலை நடத்தியதாகப் தெரிவிக்கப்படுகிறது.

கடும் நேரடி மோதலாலும் புலிகளின் வான்வழித் தாக்குதல்களாலும் விமானப்படைத் தளத்தினுள் நீண்டநேரம் பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.

இந்தச் சத்தங்களால் அநுராதபுரம் நகரும் அதனை அண்டிய பல கிலோமீற்றர் தூரமும் நீண்டநேரம் அதிர்ந்து கொண்டிருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

விமானப்படைத்தளத்தினுள் பாரிய மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அநுராதபுரம் இராணுவ படைத்தளத்திலிருந்து பெருமளவு படையினர் விமானப்படைத்தளம் நோக்கி விரைந்து சென்றதுடன், உள்ளே தாக்குதல் நடத்திய புலிகள் தப்பிச் செல்லாதவாறு விமானப்படை முகாமைச் சூழ்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோதல்கள் மற்றும் புலிகளின் விமானத் தாக்குதல்களையடுத்து அநுராதபுரம் மாவட்டம் முழுவதும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இந்த உக்கிரச் சமர் அதிகாலை 5 மணிவரை நீடித்ததாகவும் அதன் பின்னரும் சில மணிநேரம் முகாமினுள் ஆங்காங்கே பலத்த வெடிச்சத்தங்களும் குண்டுச் சத்தங்களும் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

21 கரும்புலிகள்

மூன்று பெண் கரும்புலிகள் உட்பட 21 கரும்புலிகளைக் கொண்ட படையணியே தரைவழித் தாக்குதலை நடத்தியதாகவும் நேற்றுக் காலை பத்து மணிக்கும் மேலாக இவர்கள் படைத்தளத்தினுள்ளேயிருந்தவாறு தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்ததால் அதன் பின்னரே மேலதிக மீட்புப் படையணிகளால் முகாமினுள் நுழைய முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹெலி வீழ்ந்து நொருங்கியது

முகாம் மீது வான் புலிகள் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிச் சென்ற நிலையில், வவுனியா விமானப் படை முகாமிலிருந்து அநுராதபுரம் நோக்கி வந்த விமானப்படையின் பெல்-212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, அநுராதபுரத்துக்கு கிழக்கே சுமார் 13 கிலோமீற்றர் தூரத்தில் மிகிந்தலையின் துரமடலாவ என்ற இடத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதன் இரு விமானிகளும் இரு துப்பாக்கி சுடுநர்களும் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்தது.

இந்த ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியான போதும், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அதனைத் தரையிறக்க முற்பட்டபோது அது வீழ்ந்து நொருங்கியதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம், விமானப்படைத் தளத்தினுள் இடம்பெற்ற தாக்குதலில், வான் புலிகள் வீசிய குண்டுகளால், விமானங்கள் நிறுத்தப்படுமிடத்தில் தரித்து நின்ற இரு எம்.ஐ.-24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்களும் கே-8 ரக (சீனத் தயாரிப்பு) பயிற்சி விமானமொன்றும் பலத்த சேதமடைந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

2 அதிகாரிகளுட்பட 13 படையினர் பலி

அத்துடன், இரு அதிகாரிகள் உட்பட 13 படையினர் கொல்லப்பட்டதாகவும் 22 படையினர் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பலர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதே விமானப் படைத்தளம் மீதான தாக்குதலில் எட்டு வானூர்திகள் கரும் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில்;

நேற்று அதிகாலை 3.20 மணியளவில் 21 பேர் கொண்ட விசேட கரும்புலி அணி அநுராதபுரம் விமானப்படைத்தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, அதிகாலை 4.30 மணியளவில் புலிகளின் வான் படையினர் விமானத் தளம் மீது குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தினர்.

இத் தாக்குதல்களில் விமானப்படையின் பயிற்சி விமானம் -1, எம்.ஐ-24 ரக ஹெலிகொப்டர்கள்-2, எம்.ஐ.-17 ரக ஹெலிகொப்டர் -1, பி.ரி-6 ரக விமானம் -1, பெல் 212 ரக ஹெலிகொப்டர் -1, உளவு விமானம் - 1, சி.ரி.எச். -74 ரக விமானம்-1 என எட்டு வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. இதைவிட படையினர் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

மேலும், வவுனியாவிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பெல் 212 ரக ஹெலி ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு `ஒபரேஷன் எல்லாளன்' என விடுதலைப்புலிகள் பெயரிட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று முற்பகல் மீண்டும் விமானப் படைத்தளத்தை தங்கள் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த படையினர் விமானப் படைத்தளத்தினுள் பல்வேறு பகுதிகளிலுமிருந்து புலிகளின் 20 உடல்களைக் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்புகள் தெரிவித்தன.

புலிகளின் இந்தத் தாக்குதலில் 12 முதல் 18 வானூர்திகள் பலத்த சேதமடைந்திருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாமெனத் தான் கருதுவதாக பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் `இந்துஸ்தான் ரைம்ஸ்' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

விமானப்படையினரின் கே.-8 பயிற்சி விமானமும் கடற் கண்காணிப்பு வானூர்தியான `பீச் கிராவ்ற்' ரும் அழிக்கப்பட்டதால் கடற்படையினரின் ஆழ்கடல் நடவடிக்கை பாதிக்கப்படலாமெனவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம், படகுகள் மூலம் நுவரவெவ பகுதி ஊடாக வந்த புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாமெனக் கூறப்படுகின்ற போதும் வில்பத்து காட்டினூடாக வந்த புலிகளே தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இத் தாக்குதலையடுத்து அநுராதபுரம், வவுனியா, மணலாறு, வில்பத்து காட்டுப்பகுதியில் படையினர் தீவிர தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிகிந்தலை துரமடல்லவ பகுதியில் வீழ்ந்து நொருங்கிய ஹெலிகொப்டரின் சிதைவுகளும் அதில் சென்ற நான்கு விமானப்படையினரின் கருகிய சடலங்களும் நேற்றுக்காலை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டன.

அடையாளம் காண முடியாதளவுக்கு நான்கு சடலங்களும் கருகிப்போன நிலையில் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.

வன்னியில் தேடுதல்

வான் புலிகளின் தாக்குதலையடுத்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஆறு மிக் மற்றும் கிபிர் விமானங்கள் வன்னிக்குச் சென்றன.

பராவெளிச்சக் குண்டுகளை வீசி இந்த விமானங்கள் கண்காணிப்பை மேற்கொண்டன. தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.

20 நிமிடத்திற்கும் மேலாக இந்த ஆறு விமானங்களும் கண்காணிப்பை மேற்கொண்டு விட்டு திரும்பிச் சென்றுவிட்டன.

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு

இந்தத் தாக்குதலையடுத்து அநுராதபுரம் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு பாரிய தேடுதல்கள் ஆரம்பமாகின.

இந்தத் தாக்குதலால் அநுராதபுரம் நகரும் அதனை அண்டிய பகுதிகளும் சுமார் இரண்டு மணிநேரம் அதிர்ந்து கொண்டிருந்தது. தொடர்ச்சியாக பாரிய குண்டுச் சத்தங்கள் பலமைல் தூரத்திற்கு கேட்டுக்கொண்டிருந்தது.

விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் ஆரம்பமானதையடுத்து படைத்தளத்தை சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெருமளவு மக்கள் வீடு, வாசல்களை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடத் தொடங்கினர்.

இந்தத் தாக்குதல் மற்றும் விமானப் படைத்தளத்தினுள் நீண்டநேரம் இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளால் முகாமுக்கு அருகிலிருந்த வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

விமானப் படைத்தளத்திற்குள் பாரிய மோதல் ஆரம்பமானதையடுத்து மேலதிக படைகள் அப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு முகாமைச் சூழ முழுத் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

விமானப் படைத்தளத்தை அண்டிய பகுதிகளிலும் நகரிலும் புறநகர்ப்பகுதியிலும் உடனடியாக வீதித் தடைகள் போடப்பட்டு தீவிர சோதனைகள் ஆரம்பமாகின.

அநுராதபுரம் நகருக்கு வருவோரும் நகரைவிட்டு வெளியேறுவோரும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டனர். வாகனங்களில் வந்தவர்கள் அனைவரும் அவற்றிலிருந்து இறக்கப்பட்டு விசாரணைகளுக்கும் தீவிர சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

காலை 8 மணிக்குப் பின்னர் அநுராதபுரம் நகரிலும் புறநகர்ப் பகுதியிலும் பொலிஸ் ஜீப்களில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு பற்றி அறிவிக்கப்பட்டது. மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலிலிருக்குமெனவும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறாது வீடுகளினுள் இருக்குமாறும் கேட்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலால் அநுராதபுரம் நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிலையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவையடுத்து காலை 10 மணியுடன் நகரும் புறநகர்ப் பகுதிகளும் முற்றாக வெறிச்சோடிப் போயின.

எனினும், வவுனியாவுக்கான, வெளியிடங்களிலிருந்தான வாகனப் போக்குவரத்துகள் நடைபெற்றன.

தாக்குதலையடுத்து, அநுராதபுரம் ஆஸ்பத்திரி முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கடமையிலிருந்த டாக்டர்களை விட மேலதிக டாக்டர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டதுடன், ஆஸ்பத்திரி வார்ட்டுகளிலிருந்த நோயாளர்களும் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டும் வெளியேற்றப்பட்டும் ஆஸ்பத்திரி முழு அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலால் அநுராதபுரம் முழுவதும் பெரும் அச்சமும் பதற்றமும் நிலவுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டு எங்கும் குவிக்கப்பட்டுள்ளன.