Tuesday, July 10, 2007

கிழக்கு மாகாணம் இல்லாத ஈழம் பிரபாகரனுக்கு தேவையே இல்லை

கிழக்கு மாகாணம் இல்லாத ஈழம் பிரபாகரனுக்கு தேவையே இல்லை
11 July 2007

* செய்திகள்

Trinco_Full_Map_0.jpgPrepakarad_Lower.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் கிழக்கு மாகாணத்துடனான ஈழத்தை பெற்றுக்கொள்வதற்கே கனவு கண்டு கொண்டிருக்கின்றார் அந்த கனவு பலிக்காது என்பதுடன் சகல வசதிகளையும் கொண்டுள்ள கிழக்கு மாகாணம் இல்லாத ஈழம் பிரபாகரனுக்கு தேவையே இல்லை அங்குள்ள மூலவழங்களைச் சுரண்டி வன்னியை வழம்படுத்துவதே பிரபாகரனின் தமிழீழப் போராட்டத்தின் குறிக்கோளென தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கடந்த கால வரலாற்றை எடுத்து பார்க்கின்ற போது எந்த அரசாங்கம் இருந்தால் என்ன புலிகள் கிழக்கு மாகாணத்தையே தங்களது யுத்ததளமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கும் படையினருக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தினர். கடந்த காலங்களில் புலிகளின் யுத்த பலம் கிழக்கிலேயே வெளிப்படுத்தப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; பெறுமதியில்லாத கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் கைப்பற்ற முயற்சிக்கின்றது அது முன்னரே படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதி என்று கூறி கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் படைநடவடிக்கைகளை வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கான முயற்சிகள் தேசவிரோதக் கும்பல்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணம் எட்டு மாவட்டங்களை எல்லைகளாக கொண்டிருக்கின்றது இந்த மாகாணத்தில் தான் சிங்கள, தமிழ், முஸ்லிம், ஆகிய மூன்று இனங்களை சேர்ந்தவர்களும் சமமாக வீதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மாகாணத்தில் தான் கலை காலாசாரம் பொருளாதாரம் அரசியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கு முக்கியதுவம் பெற்ற இடங்களும் இருக்கின்றன. கடந்த கால வரலாற்றை எடுத்து பார்க்கின்ற போது எந்த அரசாங்கம் இருந்தால் என்ன புலிகள் கிழக்கு மாகாணத்தையே யுத்ததளமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கும் படையினருக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தினர்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ ஆட்சி காலத்தில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுக்கொண்டிருந்த போது கிழக்கில் 400ற்கு மேற்பட்ட பொலிசாரை கைதுசெய்து இரத்தத்தை எடுத்துக்கொண்டு பின்னர் சுட்டுக்கொலை செய்திருந்தனர். அறந்தலாவ தாக்குதல் முஸ்லிம்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்திலேயே மேற்கொள்ளப்பட்டன.

புலிகளின் பாரிய தாக்குதல்கள் கிளிநொச்சியிலோ முல்லைத்தீவிலோ மேற்கொள்ளப்படவில்லை கிழக்கை படையினர் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அரசியில் கட்சிகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரநடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சித்து வருகின்றன.

புலிகள் தங்களது யுத்தபலத்தை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் காண்பிப்பதற்கு கிழக்கு மாகாணத்தையே பயன்படுத்தினர். கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மையங்கள், வெளிநாட்டு முதலீடு செய்வதற்கான இடங்கள், சுற்றுலாத்துறை, கடற்படையினரின் முகாம் மற்றும் வடக்கிற்கு உணவு வழங்குவதற்கான முக்கிய பாதைகள் இருக்கின்றன

அத்துடன் மாவிலாறு, சம்பூர், பவுள்பொயின்ட் ஆகிய இடங்களிலிருந்தே புலிகள் கடற்படையினர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டனர். எனினும் அரசாங்கம் கிழக்கை முழுமையாக மீட்டு அந்த மாகாணத்திற்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் வகையில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. இந்நிலையில் சிலர் கிழக்கு மாகாண படை நடவடிக்கைகளை தங்களது அரசியல் இலாபத்திற்கான பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் திருகோணமலை துறைமுகம், பொருளாதார மையங்கள் இல்லாத ஈழம் குறித்து சிந்திக்கவே மாட்டார். ஆனால் அவரது அந்த கனவு பலிக்காது 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாணத்தை முற்றுப்புள்ளி வைப்பதற்கான முதல் படி ஆரம்பமாகியுள்ளது.

கிழக்கு இல்லாத ஈழம் பிரபாகரனுக்கு தேவையில்லை இந்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியலை பயன்படுத்துவது சாதாரணமானதல்ல என்பதுடன் அரசியல் இலாபம் பெற்றுக்கொள்வதற்காக தொழில்வாய்ப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றங்கள் இருக்கின்றன. புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களுக்கான திட்டங்கள் முறியடிக்கப்படுகின்றன புலிகளிலிடமிருந்து தப்பி வந்தவர்களும் படையினருக்கு தகவல்களை வழங்குகின்றனர். தகவல்களை யார் கொடுக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல தகவலே முக்கியமானதாகும் அவ்வாறான தகவல்களின் பிரகாரம் படையினர் செயற்பட்டமையினால் பாரிய தாக்குதல்களுக்கான திட்டங்கள் முறியடிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் ஒடுக்குவதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைத்து வருகின்றது அதன்பிரகாரம் புலிகள் இயக்கத்திற்கு வெளிநாடுகளின் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் புலிகளுக்கு நிதிசேகரிக்கும் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார் இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: