17 July 2007
herath__abeyweera.jpgInne_harbour_Road.jpg1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கைக்கமைய உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பு கடந்த வருடம் செல்லுபடியற்றது என இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான நிர்வாகக் கட்டமைப்புக்கள் தனித்தனியாக உருவாக்கப்பட்டன. இந்நிலையில் கிழக்கு மாகாண நிர்வாகத்திற்கென நியமிக்கப்பட்ட அரச தலைமைச் செயலாளர் எச். எம். ஹெரத் அபேவீர என்பவர் புலிப்பயங்கரவாதிகளினால் நேற்று திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணம் கடந்த ஜனவரி மாதத்தில் இரு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாக வடக்கு, கிழக்கு என இரு மாகாணங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
நேற்று மாலை திருகோணமலையின் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண செயலக அலுவலகத்தில் புலிப்பயங்கரவாதிகளின் ஆயுததாரியினால் இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது சடலம் தற்போது திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்தப் பகுதியின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment