மகிந்த ராஜபகச அரசாங்கம் வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது.
ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காத காரணத்தால் மகிந்த ராஜபக்ச வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியபோது கட்சிகள் நிலவரம்:
அரசாங்கத் தரப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சி - 56
எம்.ஈ.பி. - 02
எல்.எஸ்.எஸ்.பி. - 01
சி.பி. - 02
நுவ - 02
இ.தொ.கா. - 07
என்.எம்.சி. - 01
ஐ.தே.க. (அதிருப்தி) - 24
முஸ்லிம் காங்கிரஸ் - 02
ஏ.சி.எம்.சி. - 04
ஈ.பி.டி.பி. - 01
யு.சி.பி.எஃப். - 02
ஜாதிக ஹெல உறுமய - 08
ஜே.வி.பி.(அதிருப்தி) - 01
மொத்தம் - 113
எதிர்க்கட்சிகள்:
ஐ.தே.க. - 42
ஜே.வி.பி. - 37
மேலக மக்கள் முன்னணி - 01
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 22
சுதந்திரக் கட்சி (அதிருப்தி) - 02
முஸ்லிம் காங்கிரஸ் - 04
எந்தத் தரப்பும் சாராதோர்
ஜாதிக ஹெல உறுமய - 01
இ.தொ.கா. - 01
சு.க. - 01
சபாநாயகர் - 01
மொத்தம் - 04
என்ற நிலை இருந்தது.
நாடாளுமன்றம் தொடங்கியதும் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க, எதிர்க்கட்சி வரிசையில் சென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அருகே அமர்ந்தார்.
இருப்பினும் அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்.
வாக்கெடுப்பில் ஜே.வி.பி. கலந்து கொள்ளாமல் வெளியேறியது.
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் தமது உறவினர்கள் கடத்தப்பட்டமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, தங்கேஸ்வரி, பி.அரியநேந்திரன் ஆகியோர் நாடாளுமன்றுக்கு வரவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அவரது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
உடுவே தம்மாலோக்க தேரர் மற்றும் நந்தன குணதிலக்க ஆகியோர் மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் மகிந்தவுக்கு ஆதரவாக 114 வாக்குகள் கிடைத்தன. எதிராக 67 வாக்குகளும் வாக்களிக்கப்பட்டன. 47 வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
No comments:
Post a Comment