Tuesday, December 18, 2007

ஊடகவியலாளர்கள் அதிகமாக படுகொலை செய்யப்படும் நாடுகளில் சிறிலங்காவுக்கு 3 ஆவது இடம்

அனைத்துலக அளவில் ஊடகவியலாளர்கள் அதிகமாக படுகொலை செய்யப்படும் பட்டியலில் சிறிலங்கா 3 ஆவது நாடாக உள்ளது என்று அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் Press Emblem Campaign (PEC) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரே ஆண்டில் பல ஊடகவியலாளர்கள் முன்னெப்போதும் கொல்லப்பட்டதில்லை. 2005 ஆம் ஆண்டில் உலகம் முழுமையும் 68 ஊடகவியலாளர்களும் 2006 ஆம் ஆண்டில் உலகம் முழுமையும் 96 ஊடகவியலாளர்களும் 2007 ஆம் ஆண்டு 110 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே ஆண்டில் ஈராக்கில் மட்டும் 50 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்காவில் 7 ஊடகவியலாலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஈராக்கிய தலையீட்டுக்குப் பின்னர் அதாவது மார்ச் 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 250 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 27 நாடுகளில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 14 விழுக்காடு அதிகமாகும்.

சோமாலியாவில் இந்த ஆண்டில் 8 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் 5- ஆப்கன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் 4 ஊடகவியலாள்ர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கெய்ட்டி கொலம்பியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் 6,7,8 ஆம் இடங்களை வகிக்கின்றன.

நேபாளம், காங்கோ குடியரசு, எரித்திரியா, இந்தியா, கௌதமாலா ஆகிய நாடுகளில் தலா 2 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹோண்டுராஸ், உஸ்பெஸ்கிஸ்தான், சல்வடோர், மியான்மர், அமெரிக்கா, பராகுவே, காசா, ஜிம்பாப்வே ரஸ்யா, பெரு, பிரேசில், கானா மற்றும் துருக்கியில் தலா 1 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: