Sunday, December 9, 2007

புலிப்பயங்கரவாதிகளுக்கு படகுகள் வாங்க வந்த பயங்கரவாதிகள் 2 பேர் சென்னையில் கைது



10 December 2007

* கட்டுரைகள்

Jejakumar.jpgகடற்புலிகளின் சூசைக்கு அடுத்த இரண்டாவது நிலைப் பயங்கரவாதியான கெளரி சங்கர் என்று அழைக்கப்படும் ஜெயக்குமார்் சென்னையில் கைது. பயங்கரவாத அமைப்பான புலிகளுக்கு இயந்திர படகுகள் கடத்த முயன்ற புலிகள் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிய சென்னை பிரமுகரும் கைது செய்யப்பட்டார்.தமிழகத்தில் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் இயக்கங்களை கியூ' பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டதை அடுத்து புலிகளுக்கு தமிழகத்தில் இருந்து பொருட்கள் வாங்கி வினியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகளுக்கு உதவும் இந்த செயலில் ஈடுபட்ட ஜேம்ஸ், ஜெயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இவர்களுக்கு உதவி புரிந்த சூளைமேட்டைச் சேர்ந்த ரவிகுமாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கியூ' பிரிவு போலீசாரிடம் ஜேம்ஸ் அளித்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு: இலங்கையில் வியாபாரியாக இருந்த நான் புலிகளுக்கு உதவி செய்தேன். அவர்கள் இயக்கத்தில் என்னையும் இணைத்துக் கொண்டேன். சென்னைக்கு அக்டோபர் மாதம் வந்த நான், புலிகளுக்கு வேண்டிய பொருட்களை பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் பீடி பண்டல்களுடன் சேர்த்து இலங்கைக்கு அனுப்பினேன்.இலங்கையில் புலிகள் கடல் பகுதியில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயர் அலி என்பவன் மூலம், நான் அனுப்பிய பொருட்கள் புலிகள் இயக்கத்திற்கு சென்றடைந்துள்ளது. இவனது கூட்டாளி தான் ராமேஸ்வரத்தில் உள்ள புஷ்பதன்ராஜ். இலங்கை யாழ்ப்பாணம் வல் வட்டித்துறையை சேர்ந்தவர் ஜெயக்குமார் என்ற கவுரிசங்கர்(34). கடல் புலிகள் இயக்கத்தில் 95ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பணியாற்றியவர். கடல் புலிகள் தலைவர் சூசை என்பவரது உத்தரவின் பேரில் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார் இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தஞ்சாவூர் வந்து தங்கினார். லண்டனில் உள்ள புலி உறுப்பினர் கருப்பையா என்ற கடால்பி என்பவர், தஞ்சாவூரில் உள்ள ஜெயக்குமாருக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தை அனுப்பினார். அப்பணத்தில் புதிய படகு ஒன்றை விலைக்கு வாங்கினார் ஜெயக்குமார். புதிய படகை அபிராமபட்டினம் வரை ஓட்டிச் சென்றதால் படகில் தண்ணீர் புகுந்தது.படகை விற்றவரிடம் சென்ற ஜெயக்குமார், கூடுதலாக பணம் கொடுத்து படகை பழுது பார்த்து தருமாறு கூறினார்.

படகை பழுது பார்ப்பதற்கு ஆறு மாதம் தாமதம் ஆகியுள்ளது. அப்படகினை தஞ்சாவூர் அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் ஜேம்ஸ் நிறுத்தி வைத்துள்ளார். அந்த படகை என்னிடம் ஒப்படைக்கும் படி புலிகளின் தலைமை அவருக்கு உத்தரவிட்டுள்ளது. இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையேயான போர் உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. ராணுவத்தினரின் ராக்கெட் தாக்குதலில் புலிகளின் கடல் பிரிவு பலத்த சேதமடைந்துள்ளது. தாக்குதலினால் பல படகுகள் கடலில் மூழ்கி விட்டன. அதனால், புலிகள் கடல் பிரிவை பலப்படுத்த புதிய படகுகளை வாங்கி வருகின்றனர். இலங்கை ராணுவத்தினருக்கு தெரியாமல் கடலில் ஊடுருவி செல்ல, கடலில் நின்றவாறு நீந்திச் செல்ல பிளாஸ்டிக் கால் துடுப்புகளை புலிகள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு வாக்குமூலத்தில் ஜேம்ஸ் கூறியுள்ளார்.

கியூ பிரிவு எஸ்.பி., அசோக்குமார் தலைமையில், புலிகளுக்கு இரும்பு உருளைகள்(பால்ரஸ்), அலுமினியப் பொருட்கள் கடத்திய 81 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று கைதானவர்களுடன் சேர்த்து 84 பேர் இந்தாண்டில் கைது செய்யப்பட்டனர். இதில் 36 பேர் தேசிய பாதுகாப்பு (என்.எஸ்.ஏ) சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரூ.10 லட்சம் பறிமுதல் :தமிழக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., சேகர் உத்தரவின் பேரில் கியூ பிரிவு எஸ்.பி., அசோக்குமார், டி.எஸ்.பி., மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் கலியன் தலைமையிலான போலீசார் மல்லிப்பட்டினத்திற்கு சென்றனர். படகை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், ஜெயக்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ. நான்கு லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். புலிகளுக்கு உதவிய சென்னையைச் சேர்ந்த ரவிக்குமாரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் நேற்று மாலை ஆலந்துார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒன்பது லட்சத்து 48 ஆயிரத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.புலிகளுக்கு உதவிய வழக்கில் தப்பியோடிய ராமேஸ்வரத்தைச் சேர்ந்த புஷ்பதன்ராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புலிகள் கைதானது எப்படி: முழு விவரம் கடற்புலிகளுக்காக படகுகள் வாங்கி சென்னையில் முகாமிட்டிருந்த புலிகள் இருவர், சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் போலீசாரிடம் எப்படி சிக்கினார்கள் என்பது பற்றிய முழு விவரம் வருமாறு: இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் என்ற ராஜா(46). இவரது மகன் பியூஸ்லெஸ்' என்ற பெயரில் இலங்கையில் கடை ஒன்றை நடத்தி வந்தார். மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு வேண்டிய உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தார். அத்துடன், ஏழு படகுகளை வைத்து கடலில் மீன் பிடித்து, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து ஏற்றுமதி செய்து வந்தார்.இவரது படகில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்து வந்தனர். ஜேம்சிற்கு சொந்தமான படகுகளை சிறை பிடித்த கடற்புலிகள், அதிலிருந்த டீசலை திருடி வந்தனர். இப்பிரச்னையை கடல் புலிகள் தலைவர் தம்பி அண்ணா என்பவரின் கவனத்திற்கு ஜேம்ஸ் கொண்டு சென்றார். இதில் ஜேம்சிற்கும், கடல் புலி தலைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஜேம்ஸ் அவரது ஒரிஜினல் பாஸ் போர்ட்டில் அடிக்கடி சென்னைக்கு வந்து சென்றார். இதை பயன்படுத்திக் கொள்ள கடல் புலிகள் திட்டம் தீட்டினர். அதன்படி, அக்.10ல் ஜேம்ஸ் சென்னை வந்தார். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் ரவிக்குமார்(45). இவர், ரியல் எஸ்டேட் புரோக்கர். இவருக்கும், புலிகள் கடல் பிரிவு தலைவர் தம்பி அண்ணாவுக்கும் முன்னரே தொடர்பு இருந்தது.சென்னை வந்த ஜேம்சிற்கு, ரவிக்குமார் என்பவர் அரும்பாக்கத்தில் வாடகை வீடு பிடித்து தங்க வைத்தார்.

இலங்கையில் உள்ள புலிகளின் கடல் பிரிவு தலைவர் தம்பி அண்ணா, சென்னையில் இருந்த ஜேம்சிடம், படகின் பின்புறம் கட்டப்பட்டுள்ள கயிற்றை பிடித்துக் கொண்டு தண்ணீரில் வழுக்கிச் செல்லும் பிளாஸ்டிக் கால் பட்டைகள் வாங்க வேண்டும். அதி வேகமாக தண்ணீரில் நின்ற நிலையில் வழுக்கிச் செல்லும் போது முகத்தில் தண்ணீர் பட்டால், அதனை சமாளிக்க கண்ணாடியுடன் கூடிய தலைக் கவசம் வாங்க வேண்டும். பத்திற்கும் மேற்பட்ட கால் பட்டை மற்றும் தலைக்கவசத்தை சென்னையில் வாங்குங்கள்' என உத்தரவிட்டார். சென்னையில் நீச்சல் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்ற ஜேம்ஸ், புலிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கினார். நீங்கள் கூறிய பொருட்களையெல்லாம் வாங்கி விட்டேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்' என புலிகளின் கடல் பிரிவு தலைவரை தொடர்பு கொண்டு கேட்டார் ஜேம்ஸ். நீங்கள் வாங்கிய பொருட்களுடன் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்படுங்கள். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்குங்கள். உங்களை புலி உறுப்பினர் ஒருவர் வந்து சந்தித்து பேசுவார்' என தம்பி அண்ணா கூறினார். சென்னையில் இருந்து ஜேம்ஸ் மதுரை சென்றார். மருத்துவமனையில் தங்கியிருந்த அவரை புலி உறுப்பினர் ஒருவர் சந்தித்தார். அவர், கறுப்புப் பணம் மூலம் மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட லட்கணக்கான ரூபாய் பணத்தை ஜேம்சிடம் கொடுத்தார். பெயர் தெரியாத அந்த புலி உறுப்பினர் பின்னர் தலைமறைவானார்.மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய ஜேம்ஸ், மதுரையில் உள்ள வணிக வளாகங்களுக்கு சென்றார்.

புலிகள் கேட்ட ஜி.பி.எஸ்.,' என்ற கடலில் படகுகளுக்கு வழிகாட்டும் கருவிகளை வாங்கினார்.இந்த பொருட்களை மூடையாக கட்டிய ஜேம்ஸ், ராமேஸ்வரத்தை சேர்ந்த புஷ்பதன்ராஜ் என்பவரை சந்தித்தார். ராமேஸ்வரத்தில் இருந்து கடத்தல் பொருட்களை படகு மூலம் இலங்கைக்கு அனுப்பி வருபவர் தான் புஷ்பதன்ராஜ். புலிகளுக்கு அனுப்ப வேண்டிய மூடையின் மேல் பீடி பண்டல்' பார்சல் என புஷ்பதன்ராஜ் எழுதினார்.அவற்றை கள்ள படகு மூலம் இலங்கைக்கு அனுப்பினார். புலிகள் கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்த ஜேம்ஸ், மீண்டும் சென்னை வந்து தங்கினார். சென்னை விமான நிலையத்திற்கு சென்று, இலங்கைக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்தார்.கடல் புலிகள் தலைவர் தம்பி அண்ணா, ஜேம்சை தொடர்பு கொண்டு, நீங்கள் சென்னையில் இருந்து இலங்கைக்கு இப்போது வர வேண்டாம். எங்கள் இயக்கத்திற்கு புதிய படகு ஒன்று வாங்குவது தொடர்பாக உங்களை ராஜ் என்பவர் விமான நிலையத்தில் சந்திப்பார். அவரிடம் பணத்தை பெற்று புதிய படகு வாங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

அதனால், இலங்கைக்கு செல்ல எடுத்த விமான டிக்கெட்டை கேன்சல்' செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு விமான நிலையம் சென்றார் ஜேம்ஸ். ராஜ் என்பவருக்காக காத்திருந்தார். கியூ பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ், விமான நிலையத்தில் பழைய குற்றவாளிகளை தேடிச்சென்றார்.வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் நின்றிருந்த ஜேம்ஸ், போலீசாரிடம் சிக்கினார். புலிகளுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என்று கூறினார். போலீசாரின் புலன் விசாரணையில் புலிகளுக்கு உதவியதை ஜேம்ஸ் ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்த நான்கு லட்சத்து 78 ஆயிரம், நான்கு மொபைல் போன்கள், பாஸ் போர்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

No comments: