Friday, December 7, 2007

இரத்த வெறிகொண்ட கொலைவெறியன் பிரபாகரனின் மனிதவேட்டை

தனிநாட்டுக் கோஷங்களுடன் ஆரம்பித்த புலிப்பயங்கரவாதிகளின் போராட்டம் திசை மாறித் தடம் புரண்டு அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்யும் கையாலாகாத நிலையின் உச்சத்துக்குப் போயுள்ள நிலைகுறித்து கவலைப்படுகின்றனர் மனித நேயம் கொண்டவர்கள். இந்த கையாலாகாத் தனத்தின் அண்மைய நிகழ்வு கெப்பிற்றிக்கொல்லாவயில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற பொதுமக்கள் பஸ் மீதான தாக்குதலாகும்.

சொல்லப்போனால் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல பொதுமக்கள் மீதான புலிப்பயங்கரவாதிகளின் இந்த பயங்கரத் தாக்குதல். அந்த இயக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சகோதரப் படுகொலைகள் துவங்கி விட்டன. தனது கருத்துகளுக்கு எதிர்க்கருத்தினைக் கொண்ட தனது இனத்தவர்களையே கொல்ல ஆரம்பித்த கொலைகாரன் தனது கொலைக் கலாசாரத்தினை திசைகளெங்கும் பரப்பினான்

காத்தான்குடி பள்ளிவாசலில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள், அருந்தலாவ பகுதியில் சிங்களவர்கள் மற்றும் தனது கருத்துகளுக்கு முரணாக செயற்பட்ட தமிழர்கள் என்று இன பேதம் பாராமல் குழந்தைகள், பெண்கள், கற்பிணிகள் மற்றும் வயதானவர்கள் என்று கொன்று குவித்த இரத்த வரலாறு காலங்களெங்கும் நீண்டு கிடக்கிறது.

பொதுமக்கள் மீதான இந்த தாக்குதல்கள் மூலம் புலிப்பயங்கரவாதிகள் எதைச் சாதிக்க நினைக்கின்றார்களோ தெரியவில்லை. ஆனால், அப்பாவி உயிர்களைக் கொல்வதன் மூலம் எதையுமே சாதிக்க முடியாது என்று கெப்பிற்றிக்கொல்லாவ சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார் இந்து மதகுரு ஒருவர்.

இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக கொலையைத்தான் குறிப்பிடுகின்றன. ஆனால், கொலை வெறி பிடித்தலையும் பிரபாகரனுக்கும் அவனால் உருவாக்கப்பட்ட மனநோயாளிகளுக்கும் இந்த அறிவுரையெல்லாம் எடுபடப்போவதேயில்லை. அவர்களின் தீராத ரத்த வெறிக்கு இன்னும் மனித உயிர்கள் பலியாகாமலிருக்க இறைவனைப் பிரார்த்திப்பதைவிட அவனைக் கொல்வதே முழுமையான தீர்விற்கும் வழியமைக்கும்.

தேசிய பாதுகாப்புக் கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் ஒரு சில நடவடிக்கைகளையே மனித உரிமை மீறலென்றும், மனதாபிமானமற்ற செயலென்றும் கூறி, கூக்குரலிடும் புலிப்பயங்கரவாதிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கொலைவெறியில் திருப்தியடையும் ஊடகங்களும் கெப்பிற்றிக்கொல்லாவ சம்பவத்தை வெறும் செய்தியாக மட்டுமே சொல்லியிருக்கின்றன. மனிதாபிமானம் பேசும் நிறுவனங்கள் கூட இவ்விடயத்தில் மௌனிகளாகி விட்டன.

புலிப்பயங்கரவாதிகள் ஆட்டம் காணும் போதெல்லாம் இவ்வாறு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழமையாகக் கொண்டுள்ளதை அதன் கடந்த கால வரலாறுகளை வைத்து நாம் கண்டு கொள்ளலாம். புலிகளின் மறைந்த அதிஉயர் பயங்கரவாதிகளில் ஒருவரான அரசியல் பொறுப்பாளர் எனக்கூறப்படும் சு.ப. தமிழ் செல்வன் அவர் கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்த செய்தியானது இங்கு குறிப்பிடத்த்தக்கது. அதாவது, வடக்கு நோக்கி படையினர் தமது தாக்குதல்களை முன்னெடுத்தால் தெற்கில் ரத்த ஆறு ஓடும் என்று அந்தப் பயங்கரவாதி சொல்லியிருந்தான். அந்த ரத்த ஆற்றைத்தான் இப்போது பொதுமக்கள் மீதான தாக்குதலின் மூலம் பயங்கரவாதிகள் ஓட வைக்க முயற்சிக்கின்றார்கள்.

ஆனாலும், அரசாங்கம் புலிகளின் அனைத்து வகையான தாக்குதல்களையும் முறியடிப்பதற்குத் தயாராகவே இருக்கிறது. இதற்கு பொதுமக்களும் முழு அளவில் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். தற்போது இடம்பெறுவது புலிப்பயங்கரவாதிகளுக்கும், படையினருக்குமிடையிலான மோதல்கள் அல்ல! பயங்கரவாதிகளுக்கும் நாட்டுக்குமிடையில் நடைபெறும் யுத்தமாகும். எனவே, நாட்டை வெற்றி பெற வைப்பதற்கும், அதனூடாக நாட்டின் பிரஜைகளாகிய நாம் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவதற்கும் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை படையினருக்கு அறியத்தருதல், அவர்களைக் காட்டிக்கொடுத்தல், பயங்கரவாதிகள் இவ்வாறு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது மனிதநேய அடிப்படையி;ல் நடந்து கொள்ளுதல் என்று இவ்வாறான நமது ஒவ்வொரு செயற்பாடு மூலமாகவும் நாம் நாட்டின் வெற்றிக்கு உதவ முடியும்.

பயங்கரவாதிகள் இன, மத, மொழி, உறவுகள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அவர்களின் இலக்கை அடைந்து கொள்வதற்காக தமது குடும்ப உறவுகளைத தவிர எதையும் பலியிட அவர்கள் தயாராகவே இருக்கின்றனர். எனவே, இவ்வாறான தாக்குதல்களைக் கண்டிப்பதன் மூலம் நாளை இடம்பெறவுள்ள அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான பங்களிப்பினை நாம் ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.

கடந்த வருடமும் கெப்பிற்றிக்கொல்லாவையில் பொதுமக்கள் பஸ்மீது புலிப்பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவு மனித உயிர்கள் பலியாகியிருந்தன. கைக்குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் கொல்லப்பட்டோரில் அடங்குவர். இப்போது மீண்டும் ஒருமுறை புலிகள் தமது இரத்த வெறியை அப்பிரதேசத்தில் அரங்கேற்றியுள்ளனர்.

யால சரணாலயப் பகுதியிலும் அப்பாவிச் சிங்கள மக்களை அண்மைக் காலமாக புலிகள் கொடூரமான முறையில் கொன்று வருகின்றனர். மனித உறுப்புகளை துண்டம் துண்டமாக வெட்டியெறிந்து கொல்லும் புலிகளின் வெறித்தனத்தினூடாகவே அவர்களின் மனநோயினைப் புரிந்து கொள்ளலாம். ஆம், துப்பாக்கிச் சத்தங்களும், இரத்தமும், அழுகை ஒலிகளுமே பங்கருக்கள் இருக்கும் கொலைகாரனைச் சந்தோசப்படுத்தும். இந்த சந்தோசம் என்பது ஒரு வகையான மனநோய்தான். ஆக, இந்த நோயாளர்களின் ஆபத்திலிருந்து ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாப்பதற்கான உச்சக்கட்ட நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது.

குறிப்பாக சிங்கள மக்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதன் மூலம், அந்த மக்களைக் கோபப்படுத்த பயங்கரவாதிகள் நினைக்கின்றனர். இந்த கோபம் தமிழ் மக்கள் மீது திரும்ப வேண்டும் என்றும், அதனூடாக இனக் கலவரமொன்று உருவாக வேண்டுமென்றும் பயங்கரவாதிகள் ஆசைப்படுகின்றனர். அவ்வாறானதொரு கலவரத்தினூடாக அனுதாபம் தேடுவதற்கு புலிகள் முயலுவார்கள். ஆனால், புலிகளின் இந்த தந்திரம் பற்றியெல்லாம் அனைத்துத் தரப்பினரும் அறிந்தே வைத்துள்ளதால், அவ்வாறு எதுவும் நேரப்போவதில்லை.

மேலும், பொதுமக்கள் மீது இவ்வாறு புலிகள் மோசமான தாக்குதல்களை நடத்தும் வேளைகளில் சகல இன மக்களும் நிதானத்துடனும், புத்திசாதுர்யத்துடனும் நடந்து கொள்ள வேண்டுமென மதத்தலைவர்களும், சமூகப் பெரியார்களும் வேண்டுகோள் விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகள் தோற்றுவருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. கொலைகாரனான பிரபாகரன் பதுங்கு குழிக்குள் ஓடி ஒழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது அவருக்கான இறுதித்தருணம். மாவீரர் தினம் என்று அவர்களால் கூறப்படும் பிரபாகரனின் பிறந்த நாள் தினத்தன்று அவர் ஆற்றிய உரையைக் கவனித்தால் அவர்களின் தோல்வி பற்றிப் புரிந்து கொள்ளலாம். இது பற்றி பாதுகாப்பு பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறும் போது, பிச்சை கேட்கும் நிலைக்கு பிரபாகரன் தள்ளப்பட்டுள்ளதையே அவரின் அந்த உரை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக, அத்திவாரம் ஆட்டம் காணும் இந்த நிலையில், தாம் தப்பித்துக் கொள்வதற்காகவும் தங்களது கோபத்தினைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டும் புலிகள் நடத்தும் இவ்வாறான மிருகத்தனமான தாக்குதல்கள் அவர்களை இன்னும் அதல பாதாளத்தில் வீழ்த்துமே தவிர வேறெதையும் அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்காது!
vizhippu.net

No comments: