Friday, August 24, 2007

புஷ் நிருவாகத்தின் பார்வையில் பயங்கரவாதிகளாகும் ஈரானிய அரசபடைகள்

புஷ் நிருவாகத்தின் பார்வையில் பயங்கரவாதிகளாகும் ஈரானிய அரசபடைகள்
[24 - August - 2007] [Font Size - A - A - A]
* தெஹ்ரானுக்கு எதிராக புதிய ஆத்திர மூட்டும் செயல்கள்

- பீற்றர் சைமன்ட்ஸ் -

நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டில் அண்மையில் வந்துள்ள கட்டுரைகளின்படி ஈரானிய புரட்சி காவலர் படைகள் (Iranian Revolutionary Guard Corps - IRGC) முழுவதையுமே

"குறிப்பாக அழைக்கப்படவுள்ள உலகந் தழுவிய பயங்கரவாத அமைப்பு" என்று அதன் உட்குறிப்புகள் முழுவதும் அடங்கிய வகையில், புஷ் நிர்வாகம் முத்திரையிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு செய்கையில் செப்டம்பர் 11,2001 தாக்குதல்களுக்கு பின்னர் அவர் கையெழுத்திடப்பட்ட ஜனாதிபதி ஆணை ஒன்றின் கீழ் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவார்.

மிகவும் ஆத்திரமூட்டும் இந்த முயற்சி தெஹ்ரான் மீது ஆழ்ந்த பொருளாதார அழுத்தத்தை அளிக்கும் அரங்கை அமைப்பது மட்டுமில்லாமல், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு காரணம் கொடுக்கும் செயல்திறனையும் முறைப்படுத்துகிறது.

ஒரு இறைமை பெற்ற நாட்டின் இராணுவத்தின் முக்கிய கிளையை ஒருதலைப்பட்சமாக குற்றவாளித் தன்மை உடையதாக்கும் முடிவு முன்னோடியில்லாதது ஆகும். 1979 ஈரானிய புரட்சிக்குப் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட ஐகீஎஇயில் அதன் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படைப் பிரிவுகளில் 125,000 துருப்புகளும் துணையாளர்களும் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இப்படி பெயரிடுவது IRGC அல்-ஹைடா, லெபனானில் ஷியைட் போராளிக் குழு ஹெஸ்போல்லா மற்றும் பாலஸ்தீனிய ஹமாஸ், மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் குழுக்களுடன் சார்ந்த வகையில் சேர்க்கும்; பிந்தியவை அனைத்துமே அமெரிக்க இராணுவத்தாலோ அல்லது அதன் இஸ்ரேலிய நண்பர்களாலோ தாக்கப்படுகின்றன.அவற்றின் உறுப்பினர்கள் காவலில் வைக்கப்பட்டு "பயங்கரவாதிகள்" என்ற சந்தேகத்தின்பேரில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

IRGC ஈராக், ஆப்கானிஸ்தானத்தில் ""தலையிடுகிறது', மற்றும் ஹெஸ்போல்லா, ஹமாஸ் போன்ற ""பயங்கரவாத குழுக்களுக்கு' ஆதரவு கொடுக்கிறது என்று ஆதாரமில்லாமல் அமெரிக்கா கூறுவதுதான் இந்த நடவடிக்கைக்கு போலிக் காரணம் ஆகும். IRGC , குறிப்பாக அதன் உயரடுக்குச் சிறப்புப் பிரிவான Quds Force, ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப் படைகளை தாக்குவதற்கு ஷியைட் போராளிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்தல், பயிற்சி அளித்தல், இயக்குதல் போன்றவற்றை செய்வதாகக் கூறும் பிரசாரங்களை புஷ் நிர்வாகமும் பென்டகன் அதிகாரிகளும் சமீபத்திய வாரங்களில் முடுக்கியுள்ளன. தலிபான் மற்றும் பிற ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இயக்கங்களுக்கும் ஆப்கானிஸ்தானத்தில் IRGC உதவி வருவதாகவும் வாஷிங்டன் கூடுதல் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை அப்படியே உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும், புஷ் நிர்வாகத்தின் குண்டர்கள் தெஹ்ரானின் இராணுவத்தின் ஒரு பிரிவை பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டு ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தானில் தலையிடுவதற்காக அதைத் தடை செய்வது என்பது பாசாங்குத்தனத்தின் உச்சக் கட்டம் ஆகும். இவ்விரு நாடுகளும் அமெரிக்கத் தலைமையில் வழிநடத்தப்படும் படைகள் ஆக்கிரமித்துள்ள நாட்டின் எல்லைகளில் இருப்பவை. ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்களை அமெரிக்க இராணுவம் கொன்று குவித்துள்ளதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈராக்கையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. நூறாயிரக் கணக்கான ஈராக்கியர்களை அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் படுகொலை செய்துள்ளதுடன், நாட்டை விட்டு மில்லியன் கணக்கான மக்களை வெளியேறவும் செய்துள்ளது. தவிரவும் நாட்டின் உள்கட்டுமானம், சமூகக்கட்டுக் கோப்பு ஆகியவற்றையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் கைது செய்யப்பட்டு, காலவரையறையற்று சிறையில் குற்றச்சாட்டு ஏதும் இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளதுடன், சித்திரவதைக்கும் ஆட்பட்டுள்ளனர்.

"பயங்கரவாத அமைப்பு" என்ற தகுதிக்கு புஷ் நிர்வாகத்தை விட வேறு எதுவும் கூடுதலான பொருத்தத்தை கொண்டிருக்கவில்லை. தன்னுடைய பரந்த இராணுவ மேன்மையை பயன்படுத்தி, புதிய காலனி வகை ஆக்கிரமிப்பிற்கு முறையான எதிர்ப்பை தகர்க்கும் முறையில் ஆப்கான் மற்றும் ஈராக்கிய மக்களை இந்நிர்வாகம் அச்சுறுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க பிரசாரம், 2003 ஆம் ஆண்டு நடந்த ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த முயன்றதற்கு கூறப்பட்ட பொய்களுடன் அச்சம் கலந்த வகையில் ஒத்துள்ளது. இது வெற்றுத்தனமான கூற்றுக்கள் அரைகுறை உண்மைகள், அப்பட்டமான பொய்கள் அனைத்தின் கலவையாகும், சிறிதும் விளக்கப்படாத முரண்பாடுகளை கொண்ட புதிராகவும் உள்ளது. ஈராக்கில் இருக்கும் ஷியைட் போராளிகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஈரான் பலமுறை மறுத்தும்கூட, அமெரிக்கர்களால் எவ்விதச் சான்றும் கொடுக்கப்படவில்லை. அனைத்து ஷியைட்டுகள் மற்றும் குறிப்பாக தெஹ்ரான் ஆட்சியை, அடிப்படை மத கருத்துக்குமாறனவர்கள் என்று கருதும் தலிபான் மற்றும் பிற சுன்னித் தீவிரவாதிகளுக்கு எதற்காக ஈரான் ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்பதை விளக்க எம் முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

அமெரிக்க-ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்களான ஈராக்கிலுள்ள ஷியைட் சக்திகளுக்கு ஒரு வேளை ஆயுதங்களை ஈரான் அளித்திருக்கக்கூடும்; ஆனால் ஈராக்கின் எதிர்ப்பிற்கு பின்னணியில் "மூளையாக" தெஹ்ரான் திகழ்கிறது. அமெரிக்காவிற்கு எதிரான ஒரு மாற்றுப் போராக இதைக் கருதுகிறது என்று புஷ் நிர்வாகம் கூறுவது அபத்தமாகும்; ஏனெனில், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் ஈராக்கிய படைகள் மீதான தாக்குதல்களுக்கு முக்கிய ஆதாரம் சுன்னி தீவிரவாத அமைப்பான அல்-ஹைடாதான் என்ற கூற்றிற்கு இவை முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திரித்துக் கூறப்பட்ட தர்க்கத்தின்படி தங்கள் நாட்டில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த ஈராக்கியரையும்,அவர்கள் வெளிப் பயங்கரவாத சக்திகளின் "ஈராக்கி-எதிர்ப்பு" முகவர்கள் என்ற வரையறுக்கப்பட வேண்டும் போலும்.

ஈரானிய உளவுத்துறை ஒற்றர்கள் ஐயத்திற்கு இடமின்றி ஈராக்கில் தீவிர செயற்பாடுகளை கொண்டிருந்தாலும், அதேபோல்தான் சவுதி, ஜோர்தானிய மற்றும் பிற உளவுத்துறை அமைப்புகளும் உள்ளன. ஈராக்கில் நடக்கும் தற்கொலை படைத் தாக்குதல்களுக்கு ஈரானியர்கள் என்று இல்லாமல் சவுதிக் குடிமக்கள்தான் பெரும்பாலும் காரணமாவர். அணுவாயுத் திட்டம் இருப்பதாக கூறப்பட்டு அதற்காக ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் வேண்டும் என்று கோரியுள்ள புஷ் நிர்வாகம், இப்பொழுதுதான் சவுதி அரேபியா, இஸ்ரேல் இன்னும் பல மத்திய கிழக்கு நட்பு நாடுகளுடன் பல பில்லியன் டொலர் மதிப்புடைய ஆயுதங்கள் ஒப்பந்தத்தை முடித்துள்ளது; இது வெடிப்பான பகுதியில் ஆயுதப் போட்டியை முடுக்கிவிடக்கூடும்.

IRGC "" சிறப்பாக அடையாளம் காணப்பட்டுள்ள உலகந்தழுவிய பயங்கரவாதி' என்று முத்திரையிட்டுள்ளதன் உடனடி விளைவு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும், IRGC க்கு தெரிந்து பொருட்கள் உதவியைச் செய்யும் எந்த அமைப்பும் அல்லது தனிநபரும் குற்றப் பிரிவு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர். IRGC இருப்புகளை கண்டறியும் எந்த அமெரிக்க வங்கியும் அவற்றை அமெரிக்க கருவூலத்துறைக்கு கொடுக்கும் கட்டாயம் உண்டு.

இதன் முக்கிய பாதிப்பு அமெரிக்காவிற்குள் இருக்காது; ஏனெனில் 1981 இல் இருந்தே அது ஈரான் மீது பொருளாதார முற்றுகை நடத்தி வருகிறது; இந்த ஆட்சியை 1984 இலேயே அரசு ஆதரவு பயங்கரவாதம் என பெயரிட்டது; ஆனால், IRGC பரந்த வணிக நலன்களுடன் எந்த உறவையும் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் பாதிப்பை அடையும்.

வாஷிங்டன் போஸ்டின் கருத்தின்படி, புஷ் நிர்வாகம் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா. பொது மன்றத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றிப் பரிசீலித்து வருகிறது. இந்த நேரம் ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய சக்திகளை ஈரானுக்கு எதிரான கடுமையான புதிய பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்பதற்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கும் வகையில் உள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளிடம் ஒரு புதிய ஐ.நா.தீர்மானம் கொண்டுவருவதில் தாமதம் என்ற நிலையில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று கூறியதாகத் தெரிகிறது; இது சீன, ரஷ்ய எதிர்ப்பை ஒட்டிய விளைவு ஆகும். "இம்மக்களுடன் தொடர்பு கொள்ளும் எவரும் தங்கள் நடவடிக்கைகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்" என்று ஒரு அமெரிக்க அதிகாரி வாஷிங்டன் போஸ்டிடம் தெரிவித்தார். "அது ஒன்றுதான் இவர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டிருப்பதற்கான காரணங்களை அகற்ற முடியும்."

இராணுவ வழி மோதல்

ஆனால், அமெரிக்க நடவடிக்கையின் நோக்கம் பெரும் பொருளாதார நலன்கள் ஆபத்திற்கு உட்படக்கூடிய ஈரான் மற்றும் அமெரிக்காவின் ஐரோப்பிய, ஆசியப் போட்டியாளர்களுக்கு பொருளாதார ரீதியாக தண்டிப்பதற்கும் அப்பால் செல்கிறது. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்க இராணுவம் புதைசேற்றில் தள்ளப்பட்டுள்ள போதிலும்,ஈரானுடன் ஒரு இராணுவ மோதல் என்ற நிலைக்கு புஷ் நிர்வாகத்தை ஒரு பைத்தியக்காரத்தனமான தர்க்கம் தள்ளிக் கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் அதன் ஆற்றல் இருப்புகள்மீது தடையற்ற ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற கருத்துடன் முந்தைய படையெடுப்புகளை தொடக்கிய நிலையில், சதாம்ஹுசைன் பாக்தாத்தில் இருந்தும், தலிபானை காபூலில் இருந்தும் அகற்றிய முறையில், தெஹ்ரானின் இரு முக்கிய போட்டியாளர்களை அகற்றியதன் மூலம் அவ்வட்டாரத்தில் ஈரானிய செல்வாக்கை தான் வலுப்படுத்தி விட்டதாகவே புஷ் நிர்வாகம் கருதுகிறது.

IRGC ""பயங்கரவாத் தன்மை உடையது' என்று சிறப்புப் பெயரிட்டுக் காட்டுவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை கொடுக்கும் திறனைக் கொண்டிருப்பினும்,ஈரானுக்கு எதிரான இராணுவ சாகசத்துக்கு ஆதரவாக வெள்ளை மாளிகையில் உள்விவாதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் மற்றுமொரு அடையாளம் ஆகும். கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு ஈரானை தாழ்ந்து மண்டியிடச் செய்வதற்குக் கொடுக்கப்படும் ரைஸின் தூதரக அழுத்தங்கள் மேலோங்கி நிற்கின்றன. ஆனால் நியூயோர்க் டைம்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது போல், ""சமீபத்திய மாதங்களில்,நிர்வாகத்திற்குள்ளேயே தூதரக நடவடிக்கை செயல்படுகிறதா என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது; துணை ஜனாதிபதி செனியின் ஆலோசகர்கள் இராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி இன்னும் கூடுதலான கவனம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

McClatchy செய்தித்தாள்கள் தொகுப்புகள் அனைத்திலும் வெளிவந்த கட்டுரை ஒன்று தெரிவிப்பதாவது;

"ஈரான் கொள்கையுடன் தொடர்பு கொண்டுள்ள இரு அமெரிக்க அதிகாரிகள் ஈரானிய புரட்சிக் காவல் பிரிவின் சிறப்புப் பகுதியான Quds force நடத்தும் சந்தேகத்திற்கு உரிய பயிற்சி முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தலாமா என்று சில வாரங்களுக்கு முன்பு துணை ஜனாதிபதி டிக் செனி திட்டமிட்டார்" அது மேலும் கூறியதாவது, ஈரானுடன் தூதரக நெறி பற்றி சந்தேகத்தையே நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் செனி, ஈராக்கில் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளுக்கு ஈரான் ஆதரவும் உடந்தையாகவும் இருப்பது பற்றி புதிய சான்றுகள் கிடைத்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். உதாரணமாக ஈரானில் இருந்து எல்லை கடந்து ஒரு வாகனம் நிறையப் படையினர்களோடோ அல்லது ஆயுதங்களோ வந்தால் அவ்வாறு செய்யலாம் என்று ஒரு அதிகாரி கூறினார்.

கடந்த வியாழன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜனாதிபதி புஷ் வெளிப்படையாகவே ஈரானை அச்சுறுத்தும் வகையில் நீங்கள் ஆக்கபூர்வமற்ற செயலைச் செய்வதை நாங்கள் பிடித்தோம் என்றால், அதற்குத் தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

No comments: