Sunday, August 5, 2007

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு பள்ளிவாசல்களில் வைத்து புலிப்பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவு கூரும் முகமாக நேற்று கிழக்கு மாகாணம் பூராகவும் கடைகள், வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டு தேசிய ஷûஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.காத்தான்குடி பள்ளிவாசல்களில் வைத்து 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி 103 முஸ்லிம்கள் புலியின் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை நினைவுகூரும் முகமாக வருடா வருடம் தேசிய ஷஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை அனுஷ்டிக்கும் முகமாக நேற்று அம்பாறை மாவட்டத்தின் சகல முஸ்லிம் பிரதேசங்கள் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில் கடைகள், வர்த்தக நிøலயங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன பூட்டப்பட்டு இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான வைபவம் காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்றதால் இப்பிரதேசங்களில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் அரச காரியாலயங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. வீதிகள் எங்கும் வெள்ளை நிறக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.

உள்ளூர் வாகனப்போக்குவரத்தும் இடம்பெறவில்லை. இதனால் முஸ்லிம் பிரதேசங்களின் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

No comments: