Friday, August 17, 2007

கடற்புலித் தளபதி சூசையின் இடத்துக்கு புதியவர் நியமனம் வெளிச்சமாகியது உள் முரண்பாடு

புலிப்பயங்கரவாதிகளின் கடற்புலித் தளபதி சூசையின் இடத்துக்கு புதியவர் நியமனம்! வெளிச்சமாகியது உள்முரண்பாடு இவ்வாறு கூறுகின்றன ஊடகச் செய்திகள்

புலிகள் இயக்க கடற்புலிகளின் புதிய தளபதியாக காலார்த்தன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெடி விபத்தொன்றில் கடற்புலிகளின் தளபதி சூசை மிக மோசமாகக் காயமடைந்ததாகவும், அவரின் மகன் சங்கரன் என்பவர் இறந்ததாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் சூசை ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திட்டமிடப்பட்டு இவ்வாறு சூசை குண்டுத் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார் என்றும், சூசை படுகாயங்களுடன் நினைவிழந்த நிலையில் உள்ளதாகவும் சில இணையத்தளங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.

புல்மோட்டை கடற்பரப்பில் சில தினங்களுக்கு முன்னர் கடற்படையிருக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலொன்றின் போது கடற்புலிகளின் மூன்றாம் நிலைத் தளபதி, இணைத் தளபதி மற்றும் உயர் நிலையிலுள்ள ஆறு பேர் பலியாகியிருந்தனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் முல்லைத்தீவில் புலிகள் நடத்திய அஞ்சலி நிகழ்விலேயே புலிகளின் புதிய கடற்புலித் தளபதியாக காலார்த்தன் என்பவர் கலந்து கொண்டதாய் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சூசைக்கும் புலிகளின் தலைவருக்குமிடையிலான பிரச்சினை வெளிப்படையாகியுள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் சூசை, புலிகளின் தலைவருடன் முரண்பட்டுக் கொண்டு அவரது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றமை யாவரும் அறிந்ததே. அதன் பிறகு ஏற்பட்ட சமரசங்களின் பின்னர் சூசை கிளிநொச்சி திரும்பியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் புலிகளின் பல முக்கிய தலைவர்கள் உள்முரண்பாடுகள் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புலிகளின் முன்னாள் பிரதித் தலைவர் மாத்தையா, புலிகளின் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சில காலங்களுக்கு 1994)ல் கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

No comments: