Sunday, July 27, 2008

இலங்கயும் இனக்கலவரங்களும்


1883ம் ஆண்டு தலைநகரமான கொழும்பில் பௌத்தர்களும் கத்தோலிக்கர்களும கலவரத்தில் ஈடுபட்டார்கள். பிரித்தானியர்களின் ஆதரவான அதிகாரம் கொண்ட மேலாதிக்க வாதிகளுக்கும், பௌத்த சிங்களப் பேரின வாதிகளுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டது. பிரித்தானியர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக் கலவரத்தை அடக்கினார்கள். இக் கலவரத்தில்த் தங்கள் நன்மைக்காக அதிகாரத்துக்கு வருவதற்கும் - உயர் கல்வி கற்பதற்கும் - கொழும்பைத் தங்கள் தங்கள் பிரதேசமாகக் கருதியவர்களும், மதம் மாறிய யாழ் மேட்டுக் குடியினர்களும் பாதிக்கப்பட்டார்கள்.

இக் கலவரத்தில் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களின் ஆதரவும் இருந்தது. கத்தோலிக்கர்களுக்கு எதிராக இவர்கள் நடந்து கொண்டார்கள். அரசாங்கப் பிரதி நிதிகளாகவும் அரசு சேவையிலும் 1915 ம் ஆண்டு வரை கரையோரச் சிங்களவர்களில் ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும் புரட்டஸ்தாந்து மதத்தை சார்ந்தவர்களாகும்.

சாதாரணமான ஏழைச் சிங்களத் தமிழ் மக்களின் யதார்த்தமான (பிரித்தானிய அரசுக்கும், அதிகார மேலாதிக்கச் சக்திகளுக்கும் எதிராகப் போராட்டங்கள் உருவாகிய காலம்) பிரச்சனைகளைத் திசை திருப்புவதற்காக மதம் கொண்ட தேசிய வாதத்தை உருவாக்கினார்கள். இக் கலவரத்தை உருவாக்குவதற்குத் தலைமை தாங்கியவர்கள் அனாகரிக தர்மபாலாவும் ஹரிச்சந்திராவும் ஆகும்.

1914-15 ம் ஆண்டு காலப் பகுதியில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனக்கலவரம் உருவாகியது. அங்காடி வியாபாரத்தின் முரண்பாட்டால் உருவானது. இலங்கை முழுவதிலும் முஸ்லீம்கள் தான் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். இக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பௌத்த சிங்களப் பேரின மேலாதிக்கச் சக்திகளும், யாழ் இந்து மேட்டுக் குடி மேலாதிக்கச் சக்திகளும் ஆகும்.

இக்கலவரம் பிரித்தானியர்களின் ஆட்சிக்குக் குந்தகமாக அமைந்தது. இதனால் அன்று சமூக சீர்திருத்த வாதியாகவும் தொழிற்சங்க முன்னோடியாகவும் சகல மக்களாலும் மதிக்கப்பட்ட சேர். பொன்னம்பலம் அருணாச்சலத்தின் மூலமாக இக் கலவரத்தைச் சமாதானம் செய்து வைத்தார்கள். இச்சமாதானம் சிங்கள முதலாளிகளுக்குச் சாதகமாக அமைந்தது. இதனால் முஸ்லீம் மக்கள் தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.

அனாகரிக தர்மபாலா இம் முஸ்லீம்களைப் பார்த்துத் தென்னிந்தியத் தெருப் பொறுக்கிகள் என்று விளித்தார். இவர் அதேபோல் மலையகத் தமிழ் மக்களைப் பார்த்துத் தென்னிந்தியக் கீழ்ச் சாதிக் கூலிகள் என்றும் விளித்தார். பௌத்த சிங்களப் பேரினவாதிகளும், யாழ் இந்து மேட்டுக் குடி மேலாதிக்க வாதிகளும், மலையக மக்களின் தலைவர்களாக விளங்கிய கங்காணிப் பரம்பரையில் வந்தவர்களும் இந்தப் பொறுக்கித்தனமான வாக்கியத்தைக் கூறுவார்கள். (இக் கங்காணிகள் தான் தென் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இம் மக்களைக் கொண்டு வந்தவர்கள்.)

பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் பரிணாம வளர்ச்சி தான் யு. என். பி. க் கட்சியாகும். யாழ் மேட்டுக் குடித் தலைமையும், கங்காணித் தலைமையும், முஸ்லீம் தலைமையும் யு. என். பி. க் கட்சியின் விசுவாசிகள். (ஓர் உயிர் இரு உடல் மாதிரி)

1890 ம் ஆண்டு தொடக்கம் 1930 ம் ஆண்டு வரையில் தொழிலாளர்களின் இடையே இன ஒற்றுமை பலம் வாய்ந்ததாக இருந்தது. இதற்குப் பொதுவுடைமை வாதிகளினதும், மார்க்சிய இடது சாரிகளினதும் உழைப்பாகும்.

ஏ. ஈ. குணசிங்கா ஏற்படுத்திய இனவாதம் (மலையாளத் தொழிலாளர்களுக்குத் எதிராக) தான் இன்றைய இனவாதமாகும் (தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகப் பரிணர்மித்தது.)

1956 ம் ஆண்டு தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிராக இனக் கலவரம் உருவாகியது.
பண்டாரநாயக்கா தான் ஆட்சியைப் பிடிப்பதற்குக் கூறிய வாக்கியம் தான் அவரை இனவாதியாகச் சித்தரித்தது. சிறி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் உருவான இனக் கலவரம் பண்டா - செல்வா ஒப்பந்தம் மூலம் விஸ்வரூபம் எடுத்தது. இக்கலவரத்தை உருவாக்கியவர் ஜே. ஆர். தான் இதற்கு இராஜரட்ணமும் ஆதரவாக இருந்தார்.

சிங்களம் மட்டு தான் இலங்கை அரச மொழியாக இருக்க வேண்டும் என்று ஜே.ஆர் யு. என். பி க் கட்சி யாப்பில் முதன் முதல்க் கொண்டு வந்தவர். (1944 ம் ஆண்டு.). பின்னர் டொனமூர் கமிசனுக்கு முன்னாலும் வலியுறுத்தியவர். (1947 ம் ஆண்டு).

மார்க்சிய இடது சாரிகள் சம உரிமை என்ற நிலைப்பாட்டைக் கொண்டு இருந்தார்கள். (1890 ம் ஆண்டு தொடக்கம் 1969 ம் ஆண்டு வரை இதன் பின் சுயநிர்ணய உரிமை என்று கூறத் தொடங்கி விட்டார்கள்.)

சிறி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் தமிழ் மேலாதிக்க வாதிகள் சிங்களச் சிறி பொறித்த வாகனத்திலும், இடது சாரிகள் ஆங்கில எழுத்தில் சிறி பொறித்த வாகனத்திலும், பண்டாரநாயக்கா தமிழ்ச் சிறி பொறித்த வாகனத்திலும் பவனிவந்தார்கள்.

யாழ் மேட்டுக் குடிச் சிந்தனையை மையமாக வைத்துத், தேசிய முதலாளித்துவ அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடக்கி இனக் கலவரங்களைப் பௌத்த பேரினவாதிகள் (யு. என். பி.) மூலம் இனக்கலவரங்களை உருவாக்குவார்கள். யு. என். பி. ஆட்சி காலத்தில் அவ்ஆட்சியுடன் சங்கமம் ஆகிவிடுவார்கள்.

யு. என். பி. யின் படுதோல்வி, யாழ் இந்து மேட்டுக் குடித் தலைமையின் தோல்விகள் தான் ஈழப் போராட்டம் ஆரம்பமாகியது. இலங்கையின் தேர்தல் வரலாற்றைச் சரியான முறையில் கணிக்காமல் ஆயுதப் போரட்டத்தை இந்த யாழ் ‘மோட்டுக்’ குடித் தலைமை துடங்கியது அவர்களையே அழித்தது.

1977 ம் ஆண்டு யு. என். பி. ஆட்சி ஸ்த்திரமாக இருப்பதற்கும், உலக முதலாளித்துவம் உலக மயமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவற்குற்மாக ஆக இனக் கலவரங்கள் 1977 ம் ஆண்டு தொடக்கம் 1983 ம் ஆண்டுவரை தொடச்சியா நடத்தப்பட்டது. இதன் ஊடாக உலக வர்த்தக வலையத்தை அறிமுகப் படுத்தினார்கள். இங்கு தொழிலாளர்கள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள்.

1983 ம் ஆண்டு மிகப் பெரிய இனக் கலவரம் தொடங்குவதற்கான வேலைகளை யு.என.பி க் கட்சியின் முக்கிய தலைமைகள் செயல்ப்பட்டுக் கொண்டு இருந்தது. பிரேமதாச, சிறிமத்தியூ, ரணில், லலித் இவர்கள் இனக் கலவரத்தின் சூத்திரதாரிகள். யாழ் நூலகத்தை எரித்தவர்களும் இவர்கள் தான்.

இச்சமயத்தில் சிறையில் உள்ள ஈழப் போராளிகளைச் சிறை மீட்பது என்ற திட்டத்தை ஒப்பிரேதேவன் மூலம் நடைமுறைப்படுத்தச் சகல ஈழ அமைப்புக்களும் (புலி உள்ப்பட) ஒப்புக் கொண்டு செயல் திட்டத்தில் இறங்கினார்கள். புளொட் சிறையை உடைத்து அவர்களை வெளியில் கொண்டுவருவது என்றும் ஈ.புp.ஆர்.எல.எஃவ் வும் புலிகளும் இலங்கை இராணுவம் வருவதைத் தடுப்பது என்றும், ரெலோ இவர்களை இந்தியாவுக்குக் கொண்டு செல்வது என்ற செயல்ப்பாட்டுத் திட்டத்தில் செயல்ப்பட்டார்கள். வெசாக் அன்று இத் திட்டத்தை அமுல்படுத்துவதாக இருந்தது. 5 நாளைக்கு முன்னர் புலிகள் இத் திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்கள்.

இதன் பின் இராணுவ முகாங்களில் இருந்த சகல ஈழப் போராளிகளை வெளிக்கடைச் சிறைச்சாலைக்கு அவசர அவசரமாகச் கொண்டு வரப்பட்டார்கள். இவர்கள் அனைவரையும் சிறையில் வைத்துக் கொலை செய்வது என்று பிரேமதாச மூலம் திட்டம் தீட்டப்பட்டது.

1983 - 07 - 23 ம் திகதி திருநெல்வேலியில் வைத்து 13 இராணுவத்தைக் கொன்றார்கள். இதே சமயம் இலங்கையில் உள்ள பிரதான நகரங்களில் யு.என்.பி. க் குண்டர்கள் இனக் கலவரங்களைத் தொடங்குவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தார்கள். 24 ம் திகதி இறந்த இராணுவத்தின் உடல்கள் கொழும்புக்குக் கொணடு வரப்பட்டவுடன் இனக் கலவரம் உருவாகியது.

25 ம் திகதி வெலிக்கடைச் சிறைச் சாலையில் வைத்து 25 போராளிகள் கொல்லப்பட்டார்கள். 27 ம் திகதி 18 ஈழப் போராளிகள் கொல்லப்பட்டார்கள். மிகுதியானவர்களை மட்டக்களப்புச் சிறைச்சாலைற்குப் பாதுகாப்புக் கருதி மாற்றப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில்த் தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், இராசுந்தரம், அனபழகன், ரொபேட் போன்றவர்கள் ஆகும். ரெலோத் தலைவர்கள் வெளிவருவதைப் பிரபாகரன் விரும்பவில்லை. இவர்களைக் காட்டிக் கொடுத்தவர் பிரபாகரன் தான்.

இக்கலவரத்தில் அகதி முகாம்களில் (கொழும்பில்) இருக்கும் தமிழ் மக்களை கொல்வதற்கு ஜே. ஆர் திட்டம் தீட்டி இருந்தார். (தமிழ் மக்களைப் பயமுறுத்துவதற்காக) அச்சமயம் சில சிங்கள இளைஞர்கள் செட்டித் தெருவைத் தாக்க முற்ப்பட்டார்கள். (இத் தெருவுக்கு ஜே. ஆர் தகுந்த பாதுகாப்புக் கொடுத்திருந்தார்.) இது ஜே.ஆர்ருக்குக் குழப்பத்தை உண்டுபண்ணியது. ஜே. ஆர் உடனே அவசரகாலச் சட்டத்தை கொண்டுவந்து தமிழ் அகதிகளை (இந்தியாவின் உதவியுடன்) யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார். தமிழ் மேலாதிக்கத் தலைமைகள் இந்தியா சென்று விட்டார்கள். தருமரும், ஆலாலும் இந்தியா செல்லவில்லை. யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிட்டார்கள்.

இதன் பின் ஈழ விடுதலை அமைப்புக்கள் வளச்சியடையத் தொடங்கியது.

No comments: