Tuesday, November 6, 2007

ஊடக விபசாரம்பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து சென்னையில் வைகோ, திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலையைக் கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று முற்பகல் 11:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பிரிகேடியர் தமிழ்ச்செலவனின் பெரிய திருவுருவப் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்வின் தொடக்கத்தில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு 2 நிமிட நேரம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களின் செயலாளர்கள், இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பசீர் முகமது வட தென் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் கடலூர் வேலூர் விழுப்புரம் செயலாளர்கள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

No comments: