Friday, June 20, 2008

அமெரிக்காவில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 மாணவிகள் ஒரே நேரத்தில் கருத்தரித்தது எப்படி?

அமெரிக்காவில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 மாணவிகள் ஒரே நேரத்தில் கருத்தரித்தது எப்படி?

கிளாஸ்டர் நகர பள்ளிக்கூடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது
அமெரிக்காவின் மஸச்சுஸெட்ஸ் மாநிலத்தில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 பதின்ம வயது மாணவிகள் ஒரே நேரத்தில் ஏன் கர்பிணியானார்கள் என்று அந்த மாநில அதிகாரிகள் புலன் விசாரணை செய்கிறார்கள்.

இந்த எண்ணிக்கை, கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். அத்துடன் இவர்களில் பலர் பல தடவைகள் கர்ப்பத்தை உறுதி செய்வதற்கான சோதனைகளைச் செய்துகொண்டதுடன், தாம் கர்ப்பம் தரிக்கவில்லை என்று அறிந்தவுடன் அதனால் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், இவர்கள் அனைவரும் தாம் ஒரே நேரத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது என்று ஒரு உடன்படிக்கையை செய்துகொண்டிருக்கலாம் என்று சில அதிகாரிகள் நம்புகிறார்கள்.

அத்தோடு, இந்தக் குழந்தைகளுக்கான தகப்பன்மார் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் புலன்விசாரணை செய்கிறார்கள்.

அவர்களில் சிலருக்கு இருபது வயதுக்கும் குறைவு என்று நம்பப்படுவதுடன், சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும

No comments: