Wednesday, June 25, 2008

தென்கரையின் கரங்கரை

njd;fiuapd; fuq;fiu

xU

xsp KjYf;F

tpoh vLf;Fk;

,e;j muq;fj;jpy;

JMf;fisg; g+f;fsha;

Rke;J nfhz;L

mkHe;jpUf;Fk;

ngUe;jifaPH

md;G ]yhk; midtUf;Fk;

cq;fs; tpopfspd; thdj;jpy;

vd; ftpij thpfis

Gy; Gypd; ,wFfsha;

,g;gb tphpf;fpNwd;!!!

v

vq;fs;

NjrKJfpd;

,kag; nghUg;Ng

ep;y;ts fq;ifapd;

rq;fkj; Jiw je;j

tyk;Ghpr; rq;Nf

cq;fsJ ngaH

nrhy;ypf; ftpghl

vd;

ehTf;Fj; Jzpr;rypy;iy !!

vdNt

cq;fis cq;fs; gps;isaha;

tpspj;jJ NghyNt

,d;Wk; tpspf;fpNwd;!!!!

v

Sir….

ePq;fs;

vq;fs; tpbaypd;

re;Njhrr; nrt;thdk; !

vq;fs; ee;jtdj;J

epidTfspd;

,sq;fhiyg; gdpj;Jsp

vq;fs;

,jar; RtHfis

eidj;njhOFk;

,jkhd

kior;rhuy;

epidj;Jg; ghHf;fpNwd;..

1940y;

[{d; khj 24d;

Gjpa nghOnjhd;wpy;

,e;j kz;Zf;F te;jPHfs;

jHfh efhpd;

my;`k;uh

nfhOk;gpd;

]h`puh

je;j mwptpy; tsHe;jPHfs;

NguhrphpaH ,khkpd;

jj;Jtf; flypy;

Kj;njLj;J kPz;BHfs;

v

vbd;gNuhtpd; mofpa R+oypy;

$Jy;FYhgpd;

Mok; mse;jPHfs;

mfyk; fz;BHfs;

vq;fs;

Njrpar; nrhj;jha;

cUkhw;wk;

ngw;wPHfs;

NguhjidapYk;

fsdpf; fyhrhiyapYk;

muG tpUl;rj;jpd;

tpOjha; mike;jPHfs;

cq;fs;

fpisfspy;

gy

FUtpf; $Lfs;

GaYf;Fk; mirahJ

Jzptha;j; njhq;fpd

v

Sir….

ePq;fs;

epidj;jpUe;jhy;

,yq;ifg; gy;fiyf;fof

,uh[ rpk;khrdj;jpy;

,d;W tiu

nfhYtpUe;jpUf;fyhk;

Mdhy;

vq;fs; ,Us; ePf;f

nkOFtH;j;jpaha;

cq;fis cUf;fp

ntspr;rk; je;jPHfs;

v

Sir…..

1963d;

XH mofpa khiap;;;y;

fz;b thtpapd;

ryryg;G rq;fPjj;jpy;

Fapd;]; N`hl;lypd;

,jkhd FspHr;rpap;y;

vq;fs;

mwpTj;je;ijapd;

tpopfsp;y; tpOe;jPHfs;

me;j

tpopfspd; xspaha;

Gj;JUg;ngw;wPHfs;

me;j

ml;ra ghj;jpuj;jpd;

mbj;jskhdPHfs;

v

Sir…..

rilag;g ts;sYf;F

fk;gd; fpilj;jjhy;

jkpOf;F

,uhkhazk; fpilj;jJ

xU

rPjf;fhjpf;F

ckWg; GytH fpilj;jjhy;

vq;fSf;F

rPuh fpilj;jJ

vq;fs;

mwpTj; je;ijf;F

ePq;fs; fpilj;jjhy;

,e;jg;ghiy epyj;Jf;F

[hkpM vDk;

gRk; Gw;jiu fpilj;jJ


Sir…..

vq;fs; [hkpM ehl;fspd;

fhiyg; nghOJfspy;

GyUk; fjputNdhL

ePq;fSk; cjpg;gPHfs;

ehq;fs;

Gy;ypd; gdpj;Jspfsha;

GJg; nghypT ngWNthk;

me;j

Kw;wj;J

igd]; kuq;fSk;

topNahuj;J khkuKk;

vq;fisg; NghyNt

cq;fs;

trd trPfhpg;gpy;

nka;kwe;J

fhw;Wf;Ff; $l

jiyrha;f;f kWj;J tpLk;

Nfl;NghH $l Nkilfspy;

ePq;fs;

Vwpepd;why;

ikjhdj;J

gRk;Gy;Yk;

mikjpaha;f;

fhJjho;j;Jk;

,k;ucy;if]{f;F

Kmy;yfhj;ijg;

ghlkl;Lk;jhd;

Kbe;jJ

cq;fSf;F kl;Lk;jhd;

Kmy;yfhj;ij

vq;fs; ,jaq;fspy;

nfhOtpitf;f Kbe;jJ

Sir….

el;rj;jpuq;fs;

kl;LNk

fz;tpopj;jpUe;j

1980d;

es;spuTg; nghOnjhd;wpy;

ck;uhtpd; czHTfisr;

Rke;J nfhz;Nl

vq;fs; mwpTj; je;ijapd;

tpuy;fs; NfhHj;J

mfy; tpsf;Nfw;wpdPHfs;

Gjpa

ntspr;rk;

vq;fs; rKff; fsj;jpy;

",];yhkpa kWkyHr;rp ,af;fk;"

vd;w Gs;spfNshL

g+hpg;gha; tPo;e;jJ

khlj;jpy; thOk;

Gwhf;fSf;F kl;LNk

kUj;Jt gPlj;jpy;

nghwpapay; Jiwapy;

rpwfbf;f KbAnkd;w

khiaiaf; fpopj;J

Xl;ilf;

$iuahy;

epyj;jpy; tpOk;

epyhf; fjpHfspy;

FWdy; nghWf;Fk;

rpd;dg; Gwhf;fSk;

mq;F

gwe;J kfpo

tpjhdk; mikj;jJ

v

Sir…..

vq;fs; rKff; NfhGuj;jpd;

mj;jpghukha; mike;j

rpj;jpnyt;itAk;

[hahTk;

N]H uhrpf; ghPJk;

gjpAjPd; k`;%Jk;

,e;j kz;zpy; rpe;jpa

tpaHitj; JspfSf;F

tuyhw;Wg; ngWkhdk;

je;j

jq;f g];kk; ePq;fs; jhd;

v

fk;gDk; n\y;ypAk;

,f;ghYk; &kpAk;

NlfhLk; u]Yk;

cq;fs;

Ngdh ikapy; Fspj;J

MSikapy;

jiy Jtl;Lfpd;wdH

jg;]PUk; `jP]{k;

gpf;`{k; j]t;TGk;

tuyhWk; r%ftpaYk;

cq;fs;

tpuy;fs; nfhj;jp

rpl;Lf; FUtpfsha;

rpwfbf;fpd;wd

v

Sir…..

ePq;fs;

vOj mkHe;jhy;

rq;fj; jkpo;

cq;fSf;F

rhkuk; tPRfpd;wJ

ePq;fs;

Ngr vOe;jhy;

,sq;Nfh vOe;J

Fwpg;ngLj;Jf; nfhs;fpwhH!!!

v

Sir….

vq;fs;

tuyhw;W thdj;jpd;

fhH Kfpiyj; Juj;jp

fPw;W Kfpy;fshy;

mjid

myq;fhpj;j

,sNtdpy; ePq;fs; jhd;

G+Nfhs

Ma;tfq;fspy;

,e;j kz;zpd; thridia

Rke;J nrd;w

jhok; g+Tk; ePq;fs; jhd;

kz;Zf;Fs;

kiwe;jpUe;j

vq;fs; tuyhw;W ehtha;fspd;

Rf;fhd; Njb

mtw;Wf;F GJr;rhak;

g+rp

fhyf; flypy;

Xl tpl;l

kPfhkDk; ePq;fs;jhd;


Sir….

,e;j Njrj;jpd;

KJfpy;

ePq;fs; tiue;J

itj;Js;s

mj;jid

rpj;jpuq;fisAk;

,e;j

rpd;d epkplq;fSf;Fs;

vd;dhy;

nghWf;fp tu Kbatpy;iy

kd;dpj;Jf; nfhs;Sq;fs;

v

xd;W kl;Lk; cWjpaha;r;

nrhy;fpNwd;

Sir…..

cq;fs;

,we;j fhyq;fspd;

epfo;fhyk;

ehq;fs; jhd;

vq;fs;

epfo;fhyq;fspd;

vjpHfhyk;

ePq;fs; jhd;

----

epyhf; fpuzq;fspd;

xsp ,Uf;Fk; ehs; kl;Lk;

thdj;J kpd;kpdpapd;

RlhpUf;Fk; ehs; kl;Lk;

Eiuj;NjhLk; miyfspd;

xyp ,Uf;Fk; ehs; kl;Lk;

ePq;fs; ,Uf;f Ntz;Lk; Sir

ePq;fs; ,Uf;f Ntz;Lk;

,e;j muq;fj;ij

myq;fhpf;Fk;

vd;

ee;jtdj;J

Neaq;fspd;

JM ,Jjhd; Sir

JM ,Jjhd;

njd; fiuapd; fyq;fiuNa

,jopy;

ftpijg; g+r;Rke;J

cq;fisr;

Rw;wpg; gwe;j

,e;j tpl;by; g+r;rp

,wFfisr; RUl;bf; nfhz;L

mkHe;J nfhs;fpwJ

cq;fs; xspay; eide;j

jpUg;jpNahL

m\;n\a;f;.vk;.eth]; ]DhHjPd

Friday, June 20, 2008

அமெரிக்காவில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 மாணவிகள் ஒரே நேரத்தில் கருத்தரித்தது எப்படி?

அமெரிக்காவில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 மாணவிகள் ஒரே நேரத்தில் கருத்தரித்தது எப்படி?

கிளாஸ்டர் நகர பள்ளிக்கூடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது
அமெரிக்காவின் மஸச்சுஸெட்ஸ் மாநிலத்தில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 பதின்ம வயது மாணவிகள் ஒரே நேரத்தில் ஏன் கர்பிணியானார்கள் என்று அந்த மாநில அதிகாரிகள் புலன் விசாரணை செய்கிறார்கள்.

இந்த எண்ணிக்கை, கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். அத்துடன் இவர்களில் பலர் பல தடவைகள் கர்ப்பத்தை உறுதி செய்வதற்கான சோதனைகளைச் செய்துகொண்டதுடன், தாம் கர்ப்பம் தரிக்கவில்லை என்று அறிந்தவுடன் அதனால் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், இவர்கள் அனைவரும் தாம் ஒரே நேரத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது என்று ஒரு உடன்படிக்கையை செய்துகொண்டிருக்கலாம் என்று சில அதிகாரிகள் நம்புகிறார்கள்.

அத்தோடு, இந்தக் குழந்தைகளுக்கான தகப்பன்மார் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் புலன்விசாரணை செய்கிறார்கள்.

அவர்களில் சிலருக்கு இருபது வயதுக்கும் குறைவு என்று நம்பப்படுவதுடன், சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும

Wednesday, June 18, 2008

தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதிலும் புலிகளின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும்: இளந்திரையன

[புதன்கிழமை, 18 யூன் 2008, 04:40 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
யாழ். மற்றும் கிழக்குப் போன்று தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.08) அவர் அளித்த நேர்காணலின் எழுத்து வடிவம்:

கேள்வி: மணலாறில் கடந்த வாரம் முதல் பாரிய படை நடவடிக்கை ஒன்றினை சிறிலங்காப் படையினர் ஆரம்பித்து அதில் அவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. அங்குள்ள உண்மை நிலவரம் என்ன?

பதில்: சிறிலங்காப் படையினர் வழமையாகக் கூறும் ஒரு விடயமே இது. தரையைத் தக்கவைப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முன்னேறுகின்றோம் என்று அவர்கள் கூறுவதனையே அகலக்கால் வைக்கின்றனர் என்று நாம் கூறுகின்றோம். அந்த விடயம் பார்வையில் இருக்கின்றது.

அதனைத்தவிர அவர்கள் கூறுவதனைப்போன்று பாரியளவிலான ஒரு முன்னேற்றமோ அல்லது பாய்ச்சல் நடவடிக்கையோ அங்கு இடம்பெறவில்லை. கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தகுந்த பதிலடிகளைக் கொடுத்து வருகின்றோம். அவர்களுக்கு நிறைய இழப்புக்களும் பல தாமதங்களும் ஏற்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் இடம்பெறும் நடவடிக்கைகள் பல மாதங்களாக இழுபட்டு வருகின்றன என்பதுதான் உண்மை.

கேள்வி: மணலாறில் உள்ள வண்-போ (1-4) என்ற முக்கிய முகாம் படையினரின் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவை தாம் நெருங்குவதாகவும் "தினமின" பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கின்றார். இது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில்: வண்-போ (1-4) என்ற முகாம் என்ற கட்டமைப்பு அவர்கள் கூறும் விடயமாகவே உள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் அங்கே அப்படியொரு தளம் இருந்தது. அந்தத் தளம் ஒரு அழைப்பு சமிக்ஞைக்குரிய இடமாகவே தொழிற்பட்டது. அதற்கும் அப்பால் அவர்கள் சித்தரிப்பது போன்று அங்கே ஒரு பாரிய படைக்கட்டுமாணத்தினை- அதுவும் ஒரு எல்லைப் பகுதியிலேயே அதனை அமைத்து வைத்திருக்கின்ற அளவுக்கான சூழ்நிலைகளோ அல்லது அறிவியல் நிலைகளோ அங்கு இல்லை.

அதனைத்தவிர முல்லைத்தீவையும் அவர்கள் நெருங்குவதான ஒரு கருத்தையும் சரத் பொன்சேகா கூறி வருகின்றார். ஓமந்தையில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரம் தெற்கே முன்னேறிவிட்டு நாம் அனுராதபுரத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் என்று கூறினால் அதில் எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கின்றதோ அந்தளவுக்கான உண்மைத்தன்மையே சரத் பொன்சேகா கூறுவதிலும் இருக்கின்றது.

கேள்வி: மணலாறு படை நடவடிக்கை தனது நேரடிக் கண்காணிப்பிலேயே இடம்பெறுவதாக சரத் பொன்சேகா கூறியிருக்கின்றார். சரத் பொன்சேகா நேரடியாகக் கண்காணிக்கும் அளவுக்கு மணலாறின் முக்கியத்துவம் என்ன?

பதில்: அவரின் கண்காணிப்பில் அல்லாமல் இதற்கு முன்னர் பல நடவடிக்கைகள் நடந்ததாகவும் அவர் ஒருபோதும் சொல்லவில்லை. வட போர்முனையில் கூட அவரின் நேரடிக் கண்காணிப்பில், அவரின் மூளையின் குழந்தையாகிய கவசப் படையணி பங்குபற்றிய நடவடிக்கைகள் இடம்பெற்றன.

மணலாறைப் பொறுத்த வரை கரையோரங்களைக் கைப்பற்றிக்கொண்டு வருவதே அவர்களின் தற்போதைய மூலோபாயமாக உள்ளது. அந்தப் பகுதிகளில் அவர்களுக்கு ஒரு ஆழமான ஆசை ஏற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது.

எனினும் எல்லாக்களமுனைகளையும் போலவே மணலாறு களமுனையும் நன்றாகவே எம்மால் எதிர்கொள்ளப்படுகின்றது. பலத்த இழப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்றன.

கேள்வி: 61 ஆவது படையணி களம் இறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் படையணியின் தாக்குதல்களில் புதிதாக ஏதாவது உத்திகள் தென்படுகின்றனவா?

பதில்: அண்மைக்காலமாக அவர்கள் அமைத்து வருகின்ற விகிதத்திற்கு குறைவான அணிகளில் ஒன்றாகவே 61 ஆவது படையணியும் உள்ளது. மற்றும்படி அந்த படையணியில் எதுவித வித்தியாசத்தையும் இதுவரை நாம் களமுனையில் காணவில்லை.

வழக்கமாக ஒரு டிவிசன் என்றால் அதில் அமைய வேண்டிய ஆட்தொகை, அதில் உள்ள பற்றாலியன்களுக்கான ஆட்தொகை, கொம்பனிகளுக்கான ஆட்தொகை, பிரிகேட்டுகளுக்கான ஆட்தொகை என்றெல்லாம் இருக்கின்றது. அவ்வாறான விகிதங்களைக் கைவிட்டு சிறிய, சிறிய அணிகளுக்குப் பெரிய, பெரிய பெயர்களைச் சூட்டியே களத்தில் இறக்குகின்றனர். இது அவர்களின் படைத்துறை தேவையா? அல்லது அரசியல் தேவையா என்பது எமக்குத் தெரியவில்லை.

இந்த 61 ஆவது படையணியும் பத்தோடு பதினொன்றுதான் என்பதனையே எமது களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேள்வி: மன்னார் களமுனையில் மதவாச்சி, அடம்பன், பெரியமடு, மடுப் பகுதிகளில் சுமார் 26 கிலோமீற்றர் தூரம் வரை முன்னேறியிருப்பதாக சிறிலங்கா இராணுவத்தினர் கூறுகின்றனர். மன்னார் களமுனையின் பிந்திய நிலவரம் என்ன ?

பதில்: படை நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற இடங்களின் பரப்பளவுகள் குறித்த தகவல்களை வெளியிடுவதில் படைத்தரப்பு ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டிவருகின்றது. ஒரு அரசாங்கத்தின் படைகள்- ஏனைய நாடுகளின் ஆதரவு பெற்றுள்ள படைகள்- பெரும்பாலும் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தியே போரிடும் உள்ளுர் விடுதலை அமைப்பிடம் ஒரு கயிறு இழுத்தல் போட்டியில் பங்குபற்றுவதனைப் போன்று முன்னே செல்வதனையும் பின்னே வருவதனையும் கணக்கிடுவதானது ஒரு நகைப்புக்கிடமான செயற்பாடகவே கருதப்படுகின்றது.

அவ்வளவு சக்தி, அவ்வளவு வலிமை, அவ்வளவு ஆதரவுபெற்ற படைகளால் இன்னும் ஏன் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. அந்தப் பகுதிகளை கைப்பற்ற விடாதளவுக்கு எமது பலம் இருக்கின்றது. எமது பலத்தைத்தான் இப்போது இடம்பெறுகின்ற சண்டைகள் நிரூபித்து வருகின்றன.

அதுதவிர, ஆரம்பத்தில் காட்டிய வேகத்தை இப்போது அவர்களால் களமுனைகளில் காட்ட முடியவில்லை. பல இடங்களில் சிறு, சிறு சண்டைகளைக்கூட நடத்துவதற்கு அவர்கள் திணறிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் மிகப்பிந்திய களநிலவரம் ஆகும்.

கேள்வி: கடந்த வருடத்திற்குப் பின்னர் மன்னார் களமுனையில் படையினர் பல இடங்களில் முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்ற போது அந்தக்களமுனையில் புலிகள் இன்னமும் பலமாகத்தான் இருக்கின்றனர் என்று எப்படிக் கூறமுடியும்?

பதில்: விடுதலைப் போராட்டம் ஒன்றின் பலத்தையும் பலவீனத்தையும் நிரூபிப்பது கயிறு இழுத்தல் போட்டியில் முன்னே வருதல், பின்னே செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் அல்ல. கொழும்பின் பரப்புரை உண்மையில் எல்லோருக்கும் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு முன்னர் நிகழாத சம்பவம் ஒன்று போன்று கூறுகின்றனர். இவை எல்லாம் முன்பு நிகழ்ந்தவைதான். அதற்கு மறுதலையான சம்பவங்களும் நிகழ்ந்தன.

முன்னர் நான் குறிப்பிட்டது போன்று, ஒரு அரச கட்டுமாணத்தில் இருக்கின்ற, ஆட்தொகை அதிகரித்த, படை வளங்கள் அதிகரித்த படையோடுதான் விடுதலைப் போராளிகளாகிய நாம் மோதி வருகின்றோம். இந்தப் போரை வலு என்ற அடிப்படையையும் தாண்டி உத்திகள் என்ற அடிப்படையிலேயே நகர்த்த வேண்டியதொரு சூழ்நிலை இருக்கின்றது.

"பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது"- என்று வள்ளுவர் கூறியிருக்கின்றார்.

எமது பலம் சரியான தருணத்தில் அங்கே நிரூபிக்கப்படும் என்பதனை உங்களுக்கு உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி: வடபோர் அரங்கில் நாகர்கோவில் முதல் முகமாலை ஊடான கிளாலி வரையான முன்னரங்க நிலைகளின் பிந்திய நிலவரம் எப்படி உள்ளது?

பதில்: 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்தே இப்படியான முயற்சிகளை அவர்கள் செய்துகொண்டு இருக்கின்றனர். அவர்கள் தங்களால் இயன்ற அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி விட்டார்கள். அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி விட்டார்கள். உச்சக்கட்ட வலிமையையும் பயன்படுத்தி விட்டார்கள். உச்சநிலை தளபதிகள் கூட வந்து நின்று குறிப்பாக சரத் பொன்சேகா கூட வந்து நின்று போரிட்டுப் பார்த்தார். ஆனாலும் ஒரு அங்குலத்தைக்கூட இதுவரை அவர்களால் எமது போராளிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இதே நிலமைதான் இப்போதும் தொடர்கின்றது. அண்மைக்காலத்தில் சிறிய தாக்குதல்கள், பெரிய தாக்குதல்கள் என பல வகையான தாக்குதல்களைச் செய்து அந்த முயற்சிகள் தோற்றுவிட்ட நிலையில் மீண்டுமொரு படையெடுப்பிற்கான ஆயத்தங்களை அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற போதும் அத்தகையதொரு படை நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகத்திலும் அவர்கள் தற்போது திணறுவதாகத் தெரிகின்றது.

கேள்வி: கிழக்கில் இப்போது புலிகள் இல்லை. குடாநாடு முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. வன்னியில் நான்கு முனைகளிலும் போர் தீவிரம் பெற்றுள்ளது. அப்படியானால் படைவலுச் சமநிலை மாற்றமடைந்து விட்டது எனக் கூறலாமா?

பதில்: ஆரம்ப காலத்தில் சமச்சீரற்ற ஒரு சமநிலையைத்தான் படையினருடன் பேணக்கூடியதொரு நிலை இருந்தது. ஆனால் மரபுக்களங்களில் மிக நேர்த்தியான சமச்சீருடைய வலுச்சமநிலை நிலவுகின்றது. அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் படைவலுச் சமநிலையிலேயே நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்கபடுத்தக்கூடியதாகவே இருப்பதனை அவதானிக்கலாம்.

தரைப்பிரதேசங்களைத் தக்கவைப்பதற்கு சிறிலங்காப் படையினர் ஆர்வம் காட்டுவதோடு ஏற்கனவே அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கின்ற தாயகப் பகுதிகள் மற்றும் சிறிலங்காவின் பகுதிகளில் அதிகளவான படைகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டு வருகின்றன.

அதேவேளையில் களமுனைகளில் அவர்களுக்கு முன்னர் கிடைத்திருக்ககூடிய சில சாதக நிலைகளை இழந்து மந்தச்செறிவை அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஆட்செறிவை அவர்கள் கூட்டியபோதும் அந்த மந்த செறிவில் இருந்து அவர்களால் மீளமுடியவில்லை. இன்னும் ஆண்டுக்கணக்கில் நடவடிக்கைகள் இழுபடுவதற்கான சாத்தியக்கூறுகளை கொழும்பில் உள்ள ஆய்வாளர்களே தெட்டத்தெளிவாக கூறியிருக்கின்றனர்.

அதேநேரம் சிறிலங்கா கடற்படை அண்மைக்காலமாக கடலில் பரவலாக பலத்த இழப்புகளைச் சந்தித்து வருகின்றது. வலுச்சமநிலையில் சலனத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்வகையான சம்பவங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அது எவ்வகையான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது என்பதனை இப்போதைக்கு கணித்துச் சொல்லமுடியாது.

கேள்வி: இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதி வரை புலிகளின் 207 உடலங்களை சிறிலங்காப் படையினர் கையளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனது உண்மைத்தன்மை குறித்து கூற முடியுமா?

பதில்: சமர்கள் நடக்கும்போது வீரச்சாவுகள் நிச்சயமாக இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எண்ணிக்கை, புள்ளி விபரங்களை பட்டியலிடுவதில் சிறிலங்காப் படையினர் மிகவும் ஆர்வம் உடையவர்களாகக் காணப்படுகின்றனர். விடுதலைப் புலிகள் தரப்பு வீரச்சாவு குறித்த தகவல்கள் புலிகளின் குரல், உள்ளுர் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் ஆகியவற்றின் ஊடாக அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.

இருதரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக சிறிலங்காப் படையினர் தங்களின் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதனை இதுவரை ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் புலிகள் தரப்பில் நிச்சயமாக வீரச்சாவுகள் உள்ளன. ஆனால் அவர்கள் கூறுவது போன்று பெரும் தொகையிலான வீரச்சாவுகள் இடம்பெறவில்லை.

கேள்வி: சிறிலங்காப் படையினருக்கு ஏற்படும் இழப்புகள் தென்னிலங்கை மக்களிடத்தில் பெரியளவில் எதுவித தாக்கங்களையும் உண்டு பண்ணவில்லை. எதிர்காலத்தில் படையினருக்கு ஏற்படும் இத்தகைய இழப்புகள் தென்னிலங்கை மக்களிடத்திலோ அல்லது அரசியல் கட்சிகளிடமோ தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகின்றீர்களா?

பதில்: தென்னிலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் அதனோடு இணைந்த புறச்சூழலோடு இந்த விடயத்தை முதலில் பார்க்க வேண்டும். இழப்புகள் ஏற்படுவதனை மக்கள் உதாசீனம் செய்கின்றனர் என்பது ஒருபுறமிருக்க, அந்த இழப்புக்கள் ஏற்படும்போது அதற்கான விழிப்புச் சக்தியை ஏற்படுத்தும் மாற்றுச் சக்திகள் அங்கே இல்லை.

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை ஒடுக்குவது போன்று சிங்களவர்களையும் ஒடுக்கி வருவதால் அவர்களுக்கு ஊடகச் சுதந்திரம் இல்லை, மாற்றுக்கட்சிகள் வாய் திறந்து பேசுவதற்கு வழி இல்லை. அதாவது, இழப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு அங்கே மார்க்கம் இல்லை.

சிங்கள மக்கள் தாங்கள் ஒரு இருட்டுக்குள் வாழ்கின்றனர் என்ற உண்மையை உணர்ந்த பின்னர், அவர்களின் உண்மையான நிலையை நாம் பார்க்க வேண்டும்.

இதனைத்தவிர படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்பானது முன்னரங்க நிலைகளில் படையினரின் செறிவை கோதாக மாற்றி வருகின்றது. வருடக்கணக்கான போரில் நிலத்தில் முளைக்கின்ற புற்கள் போன்று படையினர் முளைக்க முடியாது.

எமது ஒவ்வொரு அங்குலத்தில் வீரச்சாவடைகின்ற ஒவ்வொரு போராளிக்கும் எதிராக பல கொத்துக்கணக்கான படையினர் அங்கே அழிக்கப்படுகின்றனர், காயமடைகின்றனர், களத்தில் இருந்து அகற்றப்படுகின்றனர்.

எமது தாக்குதல் சம்பவங்கள் குறித்து நாம் ஆதாரங்களுடன் வெளியிடும் தகவல்களைப் பார்த்து நீங்கள் அதனைக் கணித்துக்கொள்ளலாம்.

இத்தகைய சூழ்நிலைகளில் விரித்து வைக்கப்பட்டுள்ள படைச்செறிவு குறைந்த நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. அதன் விளைவுகளை எதிர்காலத்தில் பார்க்கலாம்.

அதேநேரம் படிப்படியாக ஏற்படும் இத்தகைய இழப்புக்கள் திடீர் சூழ்நிலைகளை ஏற்படுத்தும் வாய்ப்புக்களை வரலாற்றில் கண்டுள்ளோம். எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேள்வி: சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியான ஆட்சேர்ப்பிலும் ஆயுதக்கொள்வனவிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற போதும் புலிகள் இதுவரை பாரிய வலிந்த தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பது ஏன் என்று கூறமுடியுமா?

பதில்:
அத்தகைய தாக்குதல்களுக்கான தேவை, அதற்கான சூழல், அதனைத் தொடர்ந்து நிகழும் விளைவுகளின் மதிப்பீடுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே எமது தாக்குதல்கள் முன்னரும் அமைந்திருந்தன. இனிமேலும் அந்த வகையில் அத்தகைய தாக்குதல்கள் அமையும்.

கேள்வி: அண்மைக்கலமாக புலிகளின் ஈருடகப் படையணியின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. புலிகளின் படைத்துறை வளர்ச்சியில் இந்த ஈருடகப் படையணியின் வளர்ச்சியை எவ்வாறு பார்க்க வேண்டும்?

பதில்: தேசியத்தலைவரின் மிக ஆழமான திட்டமிடலின் ஒரு பகுதியாகத்தான் நாம் ஒவ்வொருவரும் அதனைப் பார்க்கின்றோம். பார்த்து வியக்கின்றோம்.

ஏனெனில் குறிப்பிட்ட தாக்குதல் ஒன்றிற்கான- படைக்கட்டுமாணத்திற்கான அந்தச் சிந்தனையை- அதற்கான பயிற்சியை- அதற்கான வலு வளங்களை அவர் ஒழுங்குபடுத்துகின்ற விதம்- பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் அதனைச் செய்திருப்பார்.

திடீரென்று அந்தப் படையானது நடவடிக்கைகளைக் காட்டி வெளியே வருகின்ற போது அதனைப் பார்ப்பவர்களுக்கு அது புதிய விடயமாக இருக்கும். ஆனால் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான திட்டங்களைச் செய்திருப்பார்.

தேசியத் தலைவரின் உத்திப் பரிணாமங்களில் ஒன்றாக, புதிது காண்கின்ற, புதியன புனைகின்ற உயரிய பண்புகளின் ஒரு அங்கமாகவே இவ்வாறான படையணிகளும் தோற்றம் பெற்று களமுனைகளில் பல சாதனைகளைச் செய்து வருகின்றன.

அத்தகையதொரு வளர்ச்சி நிலையில் கடற்புலிகளின் ஈருடகம் சார்ந்த அந்த கொமாண்டோ அணியினர் தங்களின் பணிகளைச் திறம்பட செய்து வருகின்றனர். அவர்கள் இன்னும் அவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கேள்வி: கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் அண்மைக்காலமாக புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து?

பதில்: அவ்வாறானதொரு தோற்றம் அண்மையில் காணப்பட்டிருப்பது உண்மைதான். அங்கு மட்டுமல்ல தமிழர் தாயகம் முழுவதும் எமது நடவடிக்கைகள் இனிமேல் விரிவாக்கம் பெற்று தீவிரமடையும், அதற்கான ஒரு ஆரம்ப நிலைகள்தான் இவையாகும்.

கேள்வி: சிறிலங்கா வான்படை தனது காலைக்கடன்களை கழிப்பது போன்று அன்றாடம் காலையில் வந்துபோவதாக கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறியிருக்கின்றார். இந்த நிலைமையில் அங்குள்ள மக்கள் எப்படி தமது அன்றாட காரியங்களை மேற்கொண்டு வருகின்றனர்?

பதில்: கவிஞர் அதனை அழகாகத்தான் கூறியிருக்கின்றார். காலைக்கடன்களைப் போன்று ஒரு சாதாரண விடயமாகத்தான் மக்கள் இந்த வான் குண்டுத்தாக்குதல்களைப் பார்த்திருக்கின்றனர். எனினும் ஒரு வேதனை அங்கு ஏற்படுவது உண்மைதான். பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும்போது இடம்பெறும் வான்குண்டுத்தாக்குதல்களால் ஒருவித உளநிலை பாதிப்பு ஏற்படுகின்றது. அண்மையில் கூட புதுக்குடியிருப்பில் பாடசாலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு இருந்த சிறிய குழந்தைகளும் பாதிக்கப்படக்கூடிய அளவுக்கு பாடசாலைக்கு அண்மையில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் இந்த மண்ணில் உள்ள மக்களின் சிறப்பு என்னவென்று சொன்னால்,

எவ்வளவு தூரம் எதிரியின் நெருக்கம்,

எவ்வளவு தூரம் எதிரியின் அழுத்தம் அதிகரிக்கின்றதோ

அவ்வளவு தூரம் எமது மக்கள் வீரியமாக எழும்புகின்றனர்.

தமது வாழ்வை இந்த மண்ணில் இருந்தே தேடி எடுப்பதற்காக அவர்கள் நிற்கின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் தருகின்ற உற்சாகம், ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் நாம் பார்க்கின்ற உணர்வு எம்மை மேலும், மேலும் இந்த போராட்டத்தில் பங்களிக்கவும் அதிகமாக போராடவும் தூண்டுகின்றது என்பதே இங்குள்ள நிலைமை.

இங்குள்ள மக்கள் அத்தனை வேதனைகளுக்கு மத்தியிலும் போராட்டப் பாதையில் இருந்து சிறிதும் வழுவாமல் தமது முழுமனதுடன் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்து வருகின்றனர். தமது வேதனைகளை போராட்டத்திற்கான முதலீடாக வழங்கி தோழோடு தோள் நின்று போராடுகின்றனர் என்பதனை பெருமையுடனும் மனநிறைவுடனும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பல்வேறு வகையிலும் தமது பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக பல்வேறு நாடுகளிலும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டிய பரப்புரைகள் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்: பொங்கு தமிழ் என்பது மிகவும் வேண்டப்பட்ட, மிகவும் முக்கியமான, இந்தக் காலத்தின் கட்டயமான ஒரு நிகழ்வு. அது நிச்சயம் நடந்தேயாக வேண்டும்.

அது போராட்டத்தின் ஒரு அங்கம், விடுதலைக்கான பாதையின் ஒரு அங்கம் என்றுதான் இங்குள்ள ஒவ்வொருவரும் நினைக்கின்றோம்.

தமிழர்களின் உணர்வு பொங்கிப் பிரவகிக்கும் நேரம் இங்கே உள்ளவர்கள் அதனைக் களத்தில் காட்டுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் அதனைக்கருத்தில் காட்ட வேண்டும். அதற்கான ஒரு தளம்தான் இந்தப் பொங்குதமிழ் நிகழ்வு.

பொங்கு தமிழ் இடத்தில் நாம் இணைகின்ற போது தனித்தனியே இருந்த சுடர்கள் ஒன்றாக எரிந்து பெரிய அனல் எழுவது போன்று அந்த உணர்வுள்ள தமிழர்கள் ஒன்றாகக் கூடி நின்ற தமது கைகளை உயர்த்தி, குரல்களைச் சேர்த்து, தமிழுக்கான தமது குரலை அவர்கள் வெளிக்காட்டும்போது இந்த உலகமே எமது பக்கம் திரும்பிப் பார்க்கின்றது.

எமது உரிமைக்குரலின் ஓசையை ஒரு தடவை தனது காதுகளால் கேட்கின்றது.

அங்கே எமது பலம், ஒற்றுமையின் அந்தக் கம்பீரம், தேசியத் தலைவரின் கீழ் நாம் அனைவரும் அந்த ஒரே இலட்சியத்திற்காக நிற்கும் அந்தச் செய்தி பொங்கு தமிழ் நிகழ்வின் மூலம் இந்த உலகிற்கு ஆணித்தரமாக அறைந்து கூறப்படுகின்றது.

உலகு எங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கு தமிழ் நிகழ்வில் ஒன்றாகச் சேருகின்ற போது அந்த நிகழ்வின் மூலம் அவர்கள் இங்கே போராடுகின்ற தமிழர்களுக்கு உற்சாகத்தில் மேலும் ஒரு துளியைக் கொடுக்கின்றனர்.

தாயகத்திலும் அனைத்துலகத்திலும் இத்தகைய பொங்கு தமிழ் நிகழ்வுகள் தமிழீழத்திற்கான பாதையை அகலப்படுத்தும், விரைவுபடுத்தும் என்பதே எமது தீவிரமான நம்பிக்கை.

கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் எனும் போது சிறிய ஒரு எண்ணிக்கையிலானோர் இத்தகைய போராட்ட நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர். தமிழ் மக்களின் விடுதலை என்று வரும் போது இப்படி ஒதுங்கி இருப்பவர்களும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: தனது உடலில் தமிழ் இரத்தம் ஓடுகின்ற ஒவ்வொரு தமிழனும் தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய உலகத் தருணம் இது.

இந்த வரலாற்றுத் தருணம் இன்னொரு முறை கிடைக்கப்போவதில்லை.

அவர்களின் பரம்பரைக்கு அதாவது அவர்களின் பாட்டன்களுக்கும் அது வாய்த்தது இல்லை, அவர்களின் பேரன்களுக்கும் அது வாய்க்கப் போவது இல்லை.

தமிழர்களுக்காக உலகு எங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் குரல் கொடுக்கக்கூடிய ஒரேயொரு வாய்ப்பு இந்த தலைமுறையில் - தேசியத் தலைவரின் காலத்தில்தான் கிடைத்திருக்கின்றது.

இதனை ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று தமிழ் என்ற ஒரே உணர்வில் சுதந்திரம் என்னும் அந்த உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

அனைவரும் இந்த வரலாற்றுத் தருணத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே எமது பணிவான கோரிக்கையாக இருக்கின்றது.

Thursday, June 5, 2008

ஓர் இலட்சியப்பெண்ணின் காலடித்தடங்கள்…….

கணவர் ஒரு கண்,காது,மூக்கு அறுவைச்சிகிச்சை நிபுணர் மென்மையான புன்னகை. கண்ணை உறுத்தாத வர்ணத்தில் ஹிஜாப் உடை. ஆர்பாட்டமில்லாத அழகிய இலங்கை ஜமா அதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சந்திப்பதற்காக தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு,தன் துணைவருடன் இலங்கை வந்திருந்த Dr மாரியா மஹ்மூத் அவர்களை மெல்லியதாக பனிதூவும் இளங்காலைப்பொழுதொன்றில் மாவனல்லையில் சந்தித்தோம்.


சகோதரி மாரியா அவர்கள் PAS எனப்படும்Islamic party of Malaysia வின் மத்திய சபை உறுப்பினர். மலேசியப்பாராளுமன்ற அங்கத்தவர். IMWU எனப்படும் சர்வதேச முஸ்லிம் பெண்கள் ஒன்றியத்தின் பிரதி பொதுச்செயலாளர். தொழிலால் ஒரு மருத்துவர்,ஆறு பிள்ளைகளின் தாய் ,இவரது ஆங்கிலம் தெளிவும் தீர்க்கமும் மிக்க கருத்துக்கள். காண்போரை ஒரே வினாடிக்குள் ஈர்த்துக்கொள்ளும் ஆளுமை. இது தான் டொக்டர் மாரியா மஹ்மூத். ஒரு மனிதனை வடிவமைப்பதில் குழந்தைப்பருவத்தின் பங்களிப்பு மகத்தானது. எவ்வாறான ஒரு குழந்தைப்பருவம் உங்களுக்குக்கிடைத்தது என்பதை அறிய ஆவலாயிருக்கிறோம்.

நான் ஒரு பிடிவாதமான குழந்தை(சிரிக்கிறார்) எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனது பெற்றோர் பாஸ் கட்சியின் தீவிர அங்கத்தவர்கள்.
தந்தை ஓர் ஆசிரியர், எனது தாய் மிக கண்டிப்பானவர்.முழுமையான இஸ்லாமிய சூழலில் வளர்க்கப்படோம். எனது அன்னை அந்தக்காலத்திலேயே முழுவதும் மூடிய ஹிஜாப் அணிவார். அவர் என்னை ஹிஜாப் அணியுமாறு சொல்லும் போதெல்லாம் நாம் பிடிவாதமாய்மறுப்பேன்.நான் தொழுவது வழக்கம்.ஏனென்றால் என் தாய் கூறுவார்அல்லாஹ்விடம் எதையாவது கேட்க வேண்டுமென்றால் தொழுது கேட்டால் தான் கிடைக்குமென்று.எனக்கு அதிகமான விடயங்கள் தேவைப்பட்டதனாலேயே நான் தொழுகையைத் தொடர்ந்தேன்.

இஸ்லாத்தை நோக்கிய திருப்பம் எவ்வாறு நிகழ்ந்தது?

15,16 வயதாகும் போது ஒரு கோடைகால முகாமிற்கு(summer camp ) செல்லக்கூடிய வாய்ப்புக்கிடைத்தது.அதை ஏற்பாடு செய்த அமைப்பில் அன்வர் இப்ராஹீம் அவர்களும், இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.என் வாழ்வில் மகத்தான் திருப்புமுனை அது தான்(உணர்ச்சிவசப்படுகிறார்)யான இஸ்லாம் என்றால் என்ன?நான் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தது அங்கு தான்.தொழுகையில் ஓதும் தூய வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்ததும் அப்போது தான். ஒவ்வொரு முறை நான் தொழும் போதும் நான் அழுகிறேன்.(சில மணித்துளிகள் உடைந்து அழுகிறார்……….) இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்(இறைவா நேரான பாதையைக்காட்டுவாயாக)என்ற வாசகத்தை என் நாக்கு உச்சரிக்கும் போதெல்லாம் அழுகையை என்னால் அடக்க முடிவதில்லை.
பெண்கள் பாடசாலையில் தான் படித்தேன் என்றாலும் அல்லாஹ்வின் மீது கொண்ட அச்சம் காரணமாக ஹிஜாப் அணிந்து சென்றேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
நாங்கள் இரண்டே பேர் தான் ஹிஜாப் …(திரும்பவும் விழியில் நீர் ததும்பத்தொடங்குகிறது)


மற்ற மாணவிகள் எங்களைக் கேலி செய்தார்கள்சிரித்தார்கள் நான் தைரியத்தை இழக்கவில்லை.அது மிகவும் கஷ்டமான காலம்,ஆனால் நான் சந்தோசமாயிருந்தேன். பின்னர் சாதாரணதர பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப்பெற்றேன்.அல்ஹம்துலில்லாஹ்.
எகிப்தின் கெய்ரோ பல்கலைக்கழகத்திற்கு ம்ருத்துவம் பயிலச்செல்வதற்கான புலமைப்பரிசில் அப்போதே என்னை வந்தடைந்தது.

பல்கலைக்கழக வாழ்வு உங்களை செதுக்கியதா அல்லது சிதைத்ததா?

கெய்ரோ பழமையும் புதுமையும் கலந்த ஒரு நகரம்.பல்கலைக்கழகத்தில் பலநாடுகளைச்சேர்ந்தவர்கள் ருந்தார்கள்.இஸ்லாத்தை பின்பற்ற தடைகள் இருக்கவில்லை.அப்போது தான் என் கணவர் என்னை சந்தித்தார்.என்னைக் குறித்த அவரின் விருப்பத்தைத் தெரிவித்தார். எனக்கு அப்போது வெறும் 18 வயது தான்.அவருக்கு 19 வயது.அவர் மற்ற ஆண்களை விட கொஞ்சம் நல்லவராக எனக்குத் தெரிந்தார்.என் மனதில் காதல் என்ற ஒன்றே கிடையாது. நான் சரி ,ஆனால் எனது கல்வி முடியும் வரை உங்களை சந்திக்கவோ உங்களோடு பேசவோ முடியாதுஎன்று கூறினேன்.நாங்கள் வீடு சென்று பெற்றோருடன் பேசுவோம்என்று அவர் அபிப்பிராயப்பட்டார்.எனது தந்தை மிகவும் கண்டிப்பானவர் ஆனால் திறந்த மனதுடையவர். விடயம் கேள்விப்பட்டதும் எனது பெற்றோர் நாங்கள் உடனடியாகத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.இஸ்லாம் மிக இலகுவானது.அல்லாஹ்வின் திருப்தியே எல்லாவற்றினதும் பின்னணி என்பதை என் தந்தை எனக்குப் புரிய வைத்தார்.
பல்கலைக்கழக மூன்றாவது ஆண்டில் எனது மகள் பிறந்தாள்.அடுத்த ஆண்டு இன்னுமொரு மகன். வாழ்க்கை மிகவும் ஓய்வின்றிக் கழிந்தது.
பல்கலைக்கழகத்தில் கல்விக்குப் புறம்பாக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட என்னால் முடியாமல் போனது, குழந்தைகளுக்கு கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டதால் மருத்துவராக அல்லாது மருத்துவக்கல்லூரியொன்றில் 8 மணி முதல் 4 மணி வரை விரிவுரையாளராக பணியாற்றினேன்.

உங்கள் அரசியல் நுழைவு திட்டமிடப்பட்டதொன்றா அல்லது தற்செயலானதா?

PAS இரண்டு தளங்களில் செயற்படுகிறது.

1தஃவா
2
அரசியல்
பாஸின் முஸ்லிமா அமைப்பிற்கு(Muslimah wing) என்னாலான பங்களிப்பைச் செய்வதற்காகத்தான் கட்சிக்குள் நுழைந்தேன். தலைமைத்துவத்தில் நான் இருக்கவுமில்லை. அரசியல் பற்றி எதுவுமே அறிந்திருக்கவுமில்லை.அதைப் பற்றிய ஆர்வம் கூடக்கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் நிறைய நிர்வாகப்பயிற்சிகளைப்பெற்றிருந்ததும் நிறுவனரீதியான திறன்களோடிருந்ததும்
முஸ்லிமா பெண்களின் திறன் விருத்தி பயிற்றுவிப்பாளராக இருந்ததும் பின்னாளில் அரசியலுக்கு கட்சி மேல்மட்டம் என்னை உந்துவதற்கு வாய்ப்பளித்திருக்கலாம்.
எது எப்படியாயினும் தலைமைத்துவம் ஒரு பணியைக் கட்டளையிட்டால் எம்மால் அதைச் செய்ய முடியாது என்று மறுக்க முடியாது.இப்படித் தான் என் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.

உங்கள் அரசியல் நகர்வை உங்களது துணைவர் எப்படி எடுத்துக்கொண்டார்?

எனது கடைசிக்குழந்தையும் பாடசாலை சென்ற பின்னரே அரசியலுக்குள் நான் காலடி வைத்தேன். தொழிலையும் ராஜிநாமா செய்து விட்டு முழு நேர இஸ்லாமியப்பணியில் என்னை இணைத்துக்கொண்டேன். எனது கணவரின் உற்ற தோழி நான் தான்.அவருக்கு என்னைத் தவிர வேறு நெருங்கிய நண்பர்கள் கிடையாது. அவர் முழுமையாக என்னில் தங்கியிருந்தார்.அவர் வீட்டை முற்றாக சார்ந்த ஓர் ஆளுமை.கணவரின் அனைத்து வேலைகளையும் நானே என் கைப்படக் கவனிப்பேன். அவரது குடும்ப வியாபாரத்திலும் நான் முழுமையாக கைகொடுத்து வந்தேன். நான் ஜமா ஆவில் இணைந்ததும் அவரின் ஆதரவு இருந்தது. எனினும் எல்லாவற்றிக்கும் நான் இல்லாத குறை அவரை மிகவும் பாதித்தது. சொகுசுகளை இழக்க வேண்டியும் சில விடயங்களிற்கு இயைந்து போக வேண்டிய நிர்பந்தமும் அவருக்கு ஏற்பட்டது. எனினும் கடந்த இரு வருடங்களாக மிகவும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்கிறார் ,அல்ஹம்துலில்லாஹ்.

இலங்கைக்கு வந்திருப்பது இது தான் முதல் முறையா?

ஆம்

இலங்கையைப்பற்றி உங்களுடைய உள்ளம் என்ன சொல்கிறது? இலங்கையின் காலநிலை மலேசியாவுடையது போலவே இருக்கிறது.மழை அதிகமாக பொழிகிறது.
பழங்களின் வகைகளைப்பார்க்கும் போது பிரமித்துப்போய் விடுகிறேன்.வாழைப்பழத்தில் மட்டுமே எத்தனை வகை?மாவனல்லை மிக அழகான இடம்,எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இலங்கைப்பெண்களை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

உண்மையில் எனக்கு அதிகமான இலங்கைப்பெண்களை சந்திக்கக்கிடைக்கவில்லை.
இலங்கை ஜமா அதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சார்ந்த சகோதரிகளையே நான் அதிகம் சந்திக்க நேர்ந்தது, வித்தியாசமான பெண்களின் அறிமுகத்தைப்பெற்றுக்கொண்டேன்.
அவர்கள் அதிர்ந்து பேசாத மென்மையான இயல்பைக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் ஒரு பெரிய குழுவினராக இருக்கிறோம்,நீங்கள் ஒரு சிறிய குழுவினராக இருந்து கொண்டு செய்யும் பணிகளை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.


வரலாறு நெடுகிலும் பெண்கள் மென்மையானவர்களாகவும் இளகிய சுபாவம் உடையவர்களுமாகவே நோக்கப்பட்டு வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
அரசியல் என்பது அதிகாரமும் உறுதியும் தேவைப்படுகின்ற ஒரு துறை.
இதை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்.

இந்தக்கருத்தை நான் ஏற்க மாட்டேன். பெண்கள் எப்போதும் மென்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. இஸ்லாத்தைப் பிழையாக விளங்கியதால் வந்த விளைவு இது. வாழ்க்கையை நோக்கினால் ஒருபெண்ணுக்கு மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய கட்டங்கள் போலவே கடுமையாக் நடந்து கொள்ள வேண்டிய தருணங்களும் வருகின்றன. முக்கியமாக அந்திய ஆண்களுடன் மென்மையாக நடந்து கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை.வயதானவர்களிடமும்,குழந்தைகளிடமும் மிக மென்மையாகப் பழக வேண்டும்.ஆனால் சில இடங்களில் நாம் உறுதியுடனும் ,உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருப்பது அவசியம். எனது மென்மையை நான் என் கணவருக்காக ஒதுக்கியுள்ளேன்.அவருடன் நான் இருக்கும் போது மிக மென்மையான பெண். ஆனால் நான் ஒரு சபையில் இருக்கும் போது நான் உறுதியாக இருந்து என் கருத்துக்களை தைரியமாக வெளியிடுவேன்.

எல்லாப் பெண்களும் பொருளாதார ரீதியான சுதந்திரம் பெற்றிருக்க வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

ஆம்,நிச்சயமாக.


இஸ்லாத்தில் பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு ஆணைச்சார்ந்தது என்பது உண்மை தான்.எனினும் இன்றைய உலகில் அவ்வாறு நடப்பதில்லை என்பதும் அதை விட உண்மை. எல்லாப்பெண்களும் வெளியில் போய் வேலை பார்க்க வேண்டும் என நான் கூறவில்லை.ஆனால் அவளுக்கான பொருளாதார வாழ்வாதாரம் வேண்டும்.தன்னுடைய சொந்தக்கால்களில் சுயமாக நிற்கக்கூடிய துணிவு அவசியம். உங்களுடைய கணவர் உங்களை விட்டு பிரிவது அல்லாஹ்வின் நாட்டமாயிருக்கலாம்;அல்லதுஅவரது மனம் மாறலாம்.எதிர்காலத்தைப்பற்றி ஒன்றும் எம்மால்கூறமுடியாது. இப்படியான இக்கட்டான கட்டங்களில் யாரிடமும் தங்கி நில்லாது குடும்பத்தை கொண்டு செல்லக்கூடிய பொருளாதார பலமும் மனோ வலிமையும் பெண்ணுக்குத்தேவை. வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தே வியாபாரத்தில் ஈடுபடலாம். நாங்கள் அனைவரும் எங்கள் உரிமைகள் என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


உங்களிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கானவை,உங்கள் துணைவரிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கும் அவருக்கும் சொந்தமானவை.உரிமைகள் பொறுப்புக்களோடு சார்ந்தவை என்பதையும் நாம்மறக்கக்கூடாது. பொருளாதார சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு அத்தியாவசியம் என நான் நினைக்கிறேன்.காலம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற ஒரு யுகத்தில் நாம் இருக்கிறோம். அதிகமான பெண்கள் மன அழுத்தம்(stress )பற்றி முறையிடுகிறார்கள்.


ஒரு அன்பான மனைவியாக,அணைக்கின்ற தாயாக,உடல் நலம் பேணும்
மருத்துவராக ,பாரளுமன்ற அங்கத்தவராக நீங்கள் பலபாத்திரங்களை ஏற்று திறம்பட நிர்வகிக்கும் ஒரு பெண்மணி.உங்கள் வாழ்க்கையில் மனஅழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

முதலில் உங்கள் மனதில் உள்ளதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க தயங்கக்கூடாது.
மனதுக்குள் குமையும் எண்ணங்களை உள்ளுக்குள் அடக்கி வைப்பதால் இரத்த அழுத்தம் எகிறுகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது.மனதுள் நினைப்பதை அப்படியே தெரிவித்து விடுங்கள். நான் என் வாழ்வில் முதலில்அதைத் தான் செய்கிறேன்.திட்டமிட்டு ஒழுங்குபடுத்தல் முன்னுரிமைப்படுத்தல் இவை இரண்டின் அடிப்படையிலும் என் பணிகளை மேற்கொள்கிறேன்,அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய ஆட்சியை நோக்கிய பயணத்தில்( Mass media)தொடர்பூடகங்களின் பங்களிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

மிக முக்கியமானது.மீடியா ஒரு சக்தி.நாங்கள் இதனை கவனமாகவும்,மிகுந்த பொறுப்புணர்வுடனும் வினைத்திறனுடனும் கையாள வேண்டும்.பொது உரை அல்லது ஒரு நேர்காணலை வழங்கும் நாம் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து நடக்க வேண்டும். மீடியாவின் நவீன போக்குகளுக்கு ஈடுகொடுக்க கூடிய வகையில் நாங்கள் எங்களைத் தயார்படுத்திக்கொள்ளவதும் எங்களுக்கான தனி மீடியாக்களை உருவாக்குவதும் நாம் செய்ய வேண்டிய பணிகளாகும்.

உங்களைப் போன்ற வெளிநாட்டு பெண் ஆளுமைகளை வரவேற்று சிலாகிக்கின்றஎமது அதே ஆண் சமூகம் தமது பெண்களின் ஆளுமையையும் வெளிப்பிரவேசத்தையும் வரவேற்க இன்னும் பூரணமாகத் தயாராகவில்லை.இதுபற்றி….

இது மிகவும் நிதர்சனமான கருத்து.பாரம்பரிய பழைமைவாத சிந்தனையிலிருந்து ஆண்களும் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.எமது சமூகத்தில் 50% ஆனவர்கள் பெண்கள்.அல்லாஹ்வின் முன்னிலையில் ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்.
ஆனால் ஆண்கள் தாம் சமூகப்பணிகளில் துடிப்போடு செயற்படுவதையும் அதற்கு ஒத்துழைப்பதே மனைவியரின் கடமை என்றும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
ஆண்களைப்போலவே பெண்களிலும் தலைவர்கள் உண்டு.எனினும் ஆண்கள் எப்போதும் பெண்களை வழிநடாத்துபவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.பெண்களின் திறமையை ஏற்றுக்கொண்டாலும் அவர்களை இரண்டாந்தரமாகப்பார்க்கும் போக்கு காணப்படுகிறது.

இந்தப்போக்கு மாற்றமுற வேண்டுமாயின் எவ்வாறான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

ஆண்கள் அதிலும் குறிப்பாக அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோர்,பெண்களை தங்களுக்கு சமனாக மதிக்க வேண்டும் பெண்களுடைய விடயங்களை ஓரக்கண்கொண்டு பார்க்காது நடுநிலையுடன் அணுக வேண்டும். சிலர் நாங்கள் பெண்களை பயிற்றுவிக்கிறோம் என்று இன்னும் கூறிக்கொண்டிருக்கிறார்கள், பயிற்றுவிக்கக்கூடிய திறமையுள்ள பெண்கள் இருப்பதையே மறந்து. இலங்கையிலுள்ள எந்த இஸ்லாமிய இயக்கத்திலும் அதிஉயர்மட்ட முடிவெடுக்கும் குழுவில் பெண்கள் இல்லை.இதனை நான் ஒரு பெரும் குறையாகக்காண்கிறேன்.இது நிறுவனத்தின் சமநிலையைப் பாதிப்பதாகும்.
ஆண்கள் தவறு செய்தால் பெண்களிடம் மன்னிப்புக்கேட்கத் தயங்கக்கூடாது..
இது ரசூலுல்லாஹ்வின் வழிமுறை.சில பெண்கள் ஆண்களை விட அழகான கருத்துடையவர்களாக,திறமையான நிர்வாகிகளாக இருக்கலாம்.இஸ்லாமிய இயக்கம் இதை விளங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் ஈகோ பார்ப்பது இஸ்லாமல்ல.

உங்களுடைய இயக்கத்திலும் இந்த நிலை காணப்படுகிறதா?

நான் ஒரு வட்ட மேஜையில் கலந்துரையாடலுக்காக உட்காரும் போது என்னை கருத்து வெளியிடக்கூடிய நபராகவே பார்க்கிறேன்.,ஒரு பெண்ணாகவல்ல.
எமது அமைப்பிலும் சில வருடங்களுக்கு முன்னர் இதே நிலை காணப்பட்டது.எமது ஆண்கள் எதிர்கட்சி தலைவியுடன் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசுவார்கள்,எமது பெண்கள் ஒரமாக வைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது.அல்ஹம்துலில்லாஹ் இப்போது அந்நிலை மாறியிருக்கிறது.எமது அதியுயர் மட்ட சூறாவில் பெண்களும் அங்கத்துவம் வகிக்கிறார்கள்.


இறுதியாக எமது முஸ்லிம் பெண்களுக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள்?


உங்களது அறிவையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.பொறுப்புக்களை எடுக்கக்கூடிய தகுதியையும் ஆளுமையையும் உங்களில் ஏற்படுத்துங்கள்.உங்கள் குடும்பத்தைப் பற்றி எல்லை மீறிக்கவலைப்பட வேண்டாம்.நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் பயணிக்கும் போது அல்லாஹ் எமது குடும்பத்தைக்கவனித்துக்கொள்வான்.


சகோதரி மாரியா இஸ்லாமியப்பெண்கள் ஹிஜாபுடன் நடத்தும் நெறிப்போராட்டத்துக்கு சிறந்த ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் பிரிய மனமின்றி நமது நாளைய நகர்வை நோக்கிய சிந்தனைகளுடன்
விடைபெற்றோம்.
நேர் கண்டவர் சமீலா யூசுப் அலி

மீள் பதிப்பு அ.அஸ்மின்

Tuesday, June 3, 2008

கிழக்கில் வளர்ந்து வரும் வாகாபிசமும் அதன் பின்னணியும்: "லக்பிம"

கிழக்கில் வளர்ந்து வரும் வாகாபிசமும் அதன் பின்னணியும்: "லக்பிம"
[செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 08:27 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்]
கிழக்கு இலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் உருவாகி வருவது தொடர்பான ஆதாரங்களையும் அதன் பின்னணி தொடர்பான தகவல்களையும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய பகுதிகள்:

வாகாபிசம் கிழக்கில் தலைதூக்குகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வதில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஆனால் அதன் யதார்த்தம் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.

அண்மையில் காத்தான்குடி, ஏறாவூர், ஆரையம்பதி ஆகிய பகுதிகளில் முஸ்லிம் - தமிழ் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்கள் இரு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் போட்டியாகும். துணைப் படைக்குழுவின் பிள்ளையானுக்கும் - ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் ஏற்பட்ட பதவிப் போட்டியே அது.

இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவுகளுக்கும் மத்தியில் அரசியல் வேறுபாடுகள், மற்றும் ஆயுதக்குழுக்களின் பிரசன்னங்களும் அங்கு தோன்றியிருந்தன.

இந்தப் பதற்றமான உறவுகள், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து மேலும் அதிகரித்திருந்தது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பிள்ளையான் குழுவின் முக்கிய உறுப்பினர் சாந்தன்.

அவர்கள் இருவரும் நகரத்தின் மத்தியில் ரி-56 ரக துப்பாக்கியினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் பிள்ளையான் குழுவினர் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

ஏறாவூரில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்களால் இரு முஸ்லிம்கள் கடத்தப்பட்டதனைத் தொடர்ந்து நடந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் இந்த வன்முறைகள் மேலும் 3 நாட்களுக்கு நீடித்திருந்தன.

கடந்த திங்கட்கிழமை முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் தம்மை நோக்கிச் சுட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவங்களை தொடர்ந்து ஏறாவூர் பகுதியிலும் அதனை அண்டிய தமிழ்ப் பகுதிகளிலும் இருந்து 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்கி வருகின்றதா? என்பதே தற்போதைய விவாதம்.

புலனாய்வுத்துறை அறிக்கைகளின் படி வாகாபிசம் சவூதி அரேபியாவில் இருந்தே இங்கு பரவி வருவதுடன், சவூதி ஆரேபியாவின் நிதி உதவிகள் மூலம் அது வளர்ந்தும் வருகின்றது.

இது காத்தான்குடியிலேயே அதிகம் முனைப்பு பெற்று வருகின்றது.

காத்தான்குடியில் பிறந்த ஒரு முஸ்லிம் தலைவர் தற்போது சவூதிஅரேபியாவில் உள்ள கிங் ஹாலிட் அபா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றார்.

அவரே உள்ளுர் வாகாபிசத்துடனும், அதற்கான அனைத்துலக கொடையாளிகளுடனும் தொடர்புகளை பேணி வருகின்றார். சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பும் அதிக எண்ணிக்கையான இளைஞர்கள் இந்த மதவாதத்தை போதித்து வருகின்றனர்.

இந்த தீவிர மதவாதத்தையும், ஆயுதக்குழுவையும் எதிர்த்த ஒட்டமாவடியைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரான கேணல் லற்றீஃப் என்பவர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் மதவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்தப் படுகொலை தொடர்பாக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

சுபைர் எனப்படும் முஸ்லிம் பிரிவினரின் அனைத்து இலங்கை தறீகதுள் முஃப்லிஹீன் எனப்படும் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் வாகாபிசவாதிகளால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகின்றனர்.

2004 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 4 ஆம் நாள் சுபைர் பிரிவு முஸ்லிம் மக்களின் மசூதி ஒன்றிற்கு தீ வைக்கப்பட்டது. இந்த மசூதி அதன் மதத்தலைவர் காலம் சென்ற சியாகூல் முபைஹீன் அப்துல்லாவின் தலைமையின் கீழ் இருந்து வந்தது. அவரைப் பயில்வான் என அழைப்பதுண்டு.

பயில்வான் வாகாபிசத்தை எதிர்த்தவர். இதனைத் தொடர்ந்து சுபைர் பிரிவை சேர்ந்தவர்கள் ஒர்தோடொக்ஸ் பிரிவினாரின் மசூதி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது வாகாபிசவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சுபைர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என சுபைர் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காத்தான்குடியில் மேலும் ஒரு வன்முறை வெடித்தது. அந்தச் சம்பவத்தில் ஒர்தோடொக்ஸ் பிரிவினர் சுபைர் பிரிவினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். பயில்வான் மரணமடைந்ததைத் தொடர்ந்து வன்முறை வெடித்திருந்தது. பயில்வானின் சடலம் புதைக்கப்பட்ட மயானத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என மதவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்தச் சம்பவத்தில் காவல்துறையினருடன் நடைபெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர். வாகாபிசவாதிகள் சுபைர் பிரிவினரின் நூற்றுக்கணக்கான வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் தீயிட்டுக்கொளுத்தியிருந்தனர். அதன் இழப்பு 600 மில்லியன் ரூபாய்களாகும்.

காத்தான்குடியில் இருந்து சுபைர் பிரிவைச் சேர்ந்த 400 குடும்பங்கள் விரட்டியடிக்கப்பட்டன. சிறிலங்கா தலைமை நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அவர்களின் மீள் வரவை வாகாபிசவாதிகள் தடுத்திருந்தனர்.

அமைச்சரான அமீர் அலி என்பவர் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் தெரிவாகி இருந்தாலும் பின்னர் அரசின் சலுகைகளினால் அதன் பக்கம் தாவியிருந்தார். அவரே முஸ்லிம் ஆயுதக்குழு ஒன்றின் உருவாக்கத்திற்கான முக்கிய நபராக இருப்பதாக உள்ளுர்வாசிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

முஸ்லிம் ஆயுதக்குழுவினர் எம்மால் உருவாக்கப்படவில்லை, தாமாகவே உருவாகியவை என தனது பெயரை குறிப்பிட விரும்பாத மற்றுமொரு தமிழ் பொதுமகன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமீர் அலி தனது ஆயுதக்குழுக்களை முஸ்லிம் காங்கிரசை மிரட்டுவதற்கும், கறுவாக்கேணி பகுதியில் கருணா குழுவுடன் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றார்.

எனினும் அமீர் அலிக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் துணைப்படையின் தயவுகள் ஏன் தேவை என்பது முக்கியமான கேள்வி.

மற்றுமொரு தேர்தலில் அரசு தப்பிப் பிழைப்பதற்கு ஆயுதக்குழுக்கள் தேவை.

அவை சிறுபான்மை மக்களின் வாக்குகளை வன்முறையான வழிகளில் பெற்றுக்கொடுக்கக் கூடியவை.

பிள்ளையானுடன் அரசு கூட்டுச் சேர்ந்துள்ளது. ஒரு நேர்மையான தேர்தலுக்கான சந்தர்ப்பத்தை அறவே இல்லாமல் செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 1, 2008

துணைப்படை டக்ளசின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன?:

துணைப்படை டக்ளசின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன?: பட்டியலை வெளியிட்டார் ஆனந்தசங்கரி
[ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 01:20 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் டக்ளஸ் குழுவின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன என்பதனை சிறிலங்கா அரசாங்கத்தின் மற்றொரு ஆதரவாளரான வீ.ஆனந்தசங்கரி அம்பலப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளார்.

தமிழர் தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் வடக்கு - கிழக்கைப் பிரித்த மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள இருவரும் சிங்களவரிடம் விசுவாசமாக இருந்தமைக்காக "அதிகாரம்" தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் மோதிக்கொண்டு வருகின்றனர்.

இம் மோதலின் ஒரு பகுதியாக டக்ளசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு அவரிடம் அதிகாரத்தைக் கையளிக்காதீர்கள் என்றும் 75 வயதான தனியாளாக நிற்கின்ற தன்னிடமே அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதங்களை வீ.ஆனந்தசங்கரி அனுப்பியுள்ளார்.

அதிகார வெறிக்காக தமிழர்களை விலை பேசும் இருவரின் உண்மை முகத்தை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆனந்தசங்கரி எழுதிய கடிதத்தை அப்படியே நாம் வெளியிடுகின்றோம்.

அக்கடிதங்கள்:

26.05.2008

மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
அலரி மாளிகை
கொழும்பு-03

வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழு

பாகம் -01

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழுவை அமைத்தமைக்கு தங்களுக்குரிய கௌரவத்தை கொடுத்து எனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறேன். அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய உரிமையும், நாட்டின் நலன் கருதிய கடமைப்பாடும் எனக்குண்டு.

அவ்வாறு செய்வதற்கு நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் பல என்னிடம் உண்டு. எனது ஆட்சேபனை தாமதமாகியமைக்கு கிழக்கு மாகாண பிரச்சினைகளில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தமையும் எனது ஆட்சேபனைக்குரிய ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் முக்கிய உறுப்பினராகிய செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் படுகொலையும் காரணங்களாகும்.

எதிர்காலத்தில் மீண்டும் ஒரு போராட்டத்தை தொடர இடமளிக்காது எமது இனப்பிரச்சனைக்கு ஓர் நிரந்தர தீர்வே எமக்கு வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு மேல் ஒற்றையாட்சியின் கீழ் காண முடியாத ஓர் தீர்வு இத்தனை உயிரழிவுகளுக்கும், சொத்தழிவுகளுக்கும் பின் காண முடியும் என நான் திடமாக நம்பவில்லை.

இதன் காரணமாகவே நான் சமஷ்டி முறையிலான ஓர் தீர்வை ஆதரிப்பதோடு அதற்கு மாறாக இந்திய முறையிலான தீர்வை மட்டும் ஆதரித்து வருவது தாங்கள் அறிந்ததே.

கடந்த நான்கு ஆண்டுகளாக பல தரப்பட்டவர்களுடன் எனது பிரேரணையை விவாதித்த போது அதிகமானவர்களுக்கு அது ஏற்புடையதாக இருந்ததை அறிந்து கொண்டேன். இதைத் தவிர நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தையும், சமாதானத்தையும், சகஜ வாழ்க்கையையும் ஏற்படுத்துவதோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் பல்லின மக்கள் மத்தியில் சமத்துவத்தையும், நல்லெண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு.

நம் நாட்டின் முதல் தேவைகள் இவையே. இதுவே மக்களினதும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும். ஆனால் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாடு வேறுபட்டதும், வட பகுதி மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பதோடு ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வேறுபட்ட கருத்திருக்க முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேலும் அவரும் அவரின் சகாக்களும் 1990 ம் ஆண்டு முற்பகுதியில் தீவகத்தை தம் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட காலத்திலிருந்து அவர்களின் செயற்பாடுகள் சர்வாதிகாரப் போக்குக் கொண்டிருந்தமையால் வட பகுதி மக்களை மீட்டெடுக்கும் பணியை அவர்களிடம் விட்டுவிட முடியாது.

மாற்றுக் கட்சியினரை தேர்தல் காலத்தில் ஆதரவு தேடும் உரிமையை மறுத்தும், பெருமளவில் ஆள் மாறாட்டம் செய்தும் பாராளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் புதிய ஓர் கலாச்சாரத்தை நம் நாட்டில் ஏற்படுத்தியவர்கள் அவர்களே. ஜனநாயக பாராம்பரியத்துக்கு அவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு விடுதலைப் புலிகளினால் ஏற்பட்டதிலும் பார்க்கக் கூடியதாகும்.

ஜனநாயக கோட்பாடுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் மதிப்பு கொடுத்து வந்தது. பொதுஜன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தின் காலத்தை 1983 ஆம் ஆண்டு அரசு நீடித்த போது தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் எவ்வாறு அதை ஆட்சேபித்து எமது பதவிகளைத் துறந்தோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

உலக யுத்த காலம் தவிர்ந்த வேறு எந்தக் காலத்திலும், எந்த ஜனநாயக நாட்டிலும் இவ்வாறு செய்யும் வழக்கம் இல்லை. இவ்வாறு பதவி துறந்த எங்கள் 17 பேரையும் அரசியல் சாசனத்தில் ஆறாவது திருத்தத்தைக் கொண்டு வந்து வேண்டுமென்றே எம்மை பாராளுமன்றம் செல்ல விடாது தடுத்து, மிதவாதிகளிடமிருந்த தமிழ் மக்களின் தலைமையை பறித்தெடுத்து ஆயுதக் குழுக்களிடம் கையளித்தார் கௌரவ ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள்.

எதிர்கட்சியினர் 6 வருடங்களின் பின் மக்களிடம் ஆணை பெறும் உரிமையை மறுத்து நியாயமற்ற முறையில் மக்களின் புதிய ஆணையை பெறாது மேலும் 6 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். 6 ஆண்டுகள் மட்டும் ஆளும் மக்கள் ஆணை பெற்ற ஓர் கட்சி நியாயமற்ற முறையில் 12 ஆண்டுகள் ஆட்சி நடாத்தியது. நாடளாவிய ரீதியில் சுதந்திரமானதும், நியாயமானதுமான ஒரு தேர்தல் 1977 ஆம் ஆண்டின் பின் இன்று வரை இலங்கையில் நடைபெறவில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைய இந்த நிலைமை பெருமளவு உருவாக காரணமாக இருந்தது வடக்கு கிழக்கு என்பதோடு அதற்குப் பெரும் பங்களிப்புச் செய்தது கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களே.

இந்தக் குழுவினர் 1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டு 9 ஆசனங்களை பெற்றனர்.

அத்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட

இக் குழுவைச் சேர்ந்த 13 வேட்பாளர்களும் 10 தேர்தல் தொகுதிகளில் மொத்தமாக பெற்ற வாக்குகள் 175 மட்டுமே.

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் அவர்கள் மாற்றுக்கட்சியினர் எவரையும் நியமனத் திகதியிலிருந்தே அத்தொகுதியில் கால் வைக்க விடாது மிக மோசமான முறையில் ஆள் மாறாட்டம் செய்து 8,638 வாக்குகளை மட்டும் பெற்றிருந்தனர்.

இவர்கள் அத்தேர்தல் மாவட்டத்தில் 596,366 வாக்காளர்கள் இருந்தும் மிகப் பிழையான முறையில் மிகக்குறைந்த வாக்குகளை பெற்றபோது அரசு அரசியல் சாசனத்தையோ அன்றி தேர்தல் சட்டத்தையோ மாற்றம் செய்து பரிகாரம் செய்யும் என்று எதிர்பார்த்திருந்தேன்.

இதற்குரிய பரிகாரத்தை அரசு அன்று செய்திருந்தால் இன்று பொதுமக்களை அன்றி விடுதலைப் புலிகளை மட்டும் பாராராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் 22 த.தே.கூ உறுப்பினர்கள் தெரிவாகியிருக்க மாட்டார்கள். அடுத்தடுத்து ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள் இவ்வாறு தெரிவாகும் தமிழ் சிறுபான்மை கட்சி உறுப்பினர்களை தமது தேவைகளுக்கு உபயோகித்து ஆட்சியை பிடிக்க அல்லது நீடிக்க செய்தமை துரதிர்ஷ்டவசமானதே.

கடந்த காலத்தில் சில சுயநலமிக்க தலைவர்கள் நாட்டுப்பற்று இன்றி செய்த பாவத்தினாலேயே நம் முழு நாடும் இன்று இவ்வாறு அல்லல்படுகின்றது.

இந்த நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற த.வி.கூ ஆற்றிய பெரும் பங்களிப்பை முழு உலகும் மிகவும் பாராட்டியது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தத் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் இப்போது இல்லை. அவர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் மரணித்து விட்டனர். மற்றும் சிலர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டனர்.

அத்தகைய பழைய தலைவர்களில் இன்றும் அரசியலில் ஈடுபாட்டுடன் இருக்கும் இருவரில் ஒருவர் த.வி.கூ. உருவாக்கிய நற்பெயரை அழித்துவிட்டு, என்னை மட்டும் தன்னந்தனியாக எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வைத்துவிட்டு, தான் மோசடி மூலம் பாராளுமன்றம் சென்று விட்டார்.

எம் தலைவர்கள் காட்டிய வழியிலிருந்து நான் தவறவில்லை.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் எதிர்நோக்கிய தர்ம சங்கடமான நிலைமையும் அவமானங்களும் சொல்லில் அடங்கா.

உலகளாவிய ரீதியில் பிரசுரமாகும் விடுதலைப் புலிகள் சார்பான பல கையடக்கப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் எனக்குக் கொடுத்து எழுதும் அடைமொழிகள் கீழத்தரமானவையும், அவதூறானவையுமாகும்.

அவர்கள் பாவிக்கும் வார்த்தைகள் என் மனதை மிகவும் புண்பட வைத்தன. நான் யாருக்கும் அடிவருடியாக செயல்பட்டவன் அல்ல.

கறுப்பை கறுப்பு என தயங்காது கூறுபவன். எப்போதும் நடுநிலைமையை வகிப்பவன். இருப்பினும் இத்தகைய அவமானங்களை சகிப்பதற்குக் காரணம் நான் என் நாட்டை மிகவும் நேசிப்பதோடு நாட்டுப்பற்றற்ற ஜனநாயக விரோத சக்திகளிடமிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்பதாலேயே.

பயங்கரவாதத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் உங்கள் பணிக்கு எனது பூரண ஒத்துழைப்பு உண்டு.

அந்தப் பணிக்காக என் உயிரையும் தர நான் தயாராக உள்ளேன்.

ஆனால் வட பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் விடுதலைப் புலிகள் மட்டும்தான் என எண்ணாதீர்கள். கிழக்கு மாகாண மக்களைப் போல் வட பகுதி மக்களும் போதியளவு துன்பப்பட்டு விட்டார்கள். போதியளவு இழந்தும் விட்டார்கள்.

தொடர்ந்து நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழ்கின்றார்கள். அவர்கள் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியிலிருந்து நெருப்புக்குள் பாயும் நிலைமைக்கு தள்ளப்பட கூடாது. எதிர்வரும் ஜூலை 15 இல் எனக்கு 75 வயது பூர்த்தியாகி விடும்.

எனக்கு ஏதாவது நடக்கும் முன்பு நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு பகுதியினரும் அடிமைத்தனத்திலும், நிரந்தர பயபீதியிலும், பல ஆண்டு காலமாக அனுபவிக்கும் வேதனைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதே.

எனது எதிர்ப்பு விசேட செயலணிக் குழுவின் அமைப்புக்கும் அக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் ஆகிய இரண்டுக்குமே.

ஏற்கனவே அனுபவிக்கும் மந்திரி பதவியோடு இக்குழுவின் தலைவராக தங்களால் தெரிவு செய்யப்பட்ட கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயற்பாடுகள் பற்றி நான் பலதடவை தங்களுக்கு புகார் செய்துள்ளேன்.

அவரின் மந்திரி பதவி நாட்டுக்கு ஏற்கனவே பாதகமானதும், அரசுக்கு அவர் ஆற்றும் தொண்டுக்கு அப்பதவி மிகவும் போதுமானதுமாகும் ஏனைய இரு உறுப்பினர்கள் பற்றி அவர்களுக்கு வேலைப்பளு கூடிவிட்டது என்பதைத் தவிர வேறு எந்த எதிர்ப்பும் கிடையாது.

இக் குழுவில் பணியாற்ற போதிய நேரம் இருக்காது. இவ்விருவரும் முதல் கூட்டத்துக்கே சமூகம் கொடுக்காதமை இறுதியில் இதுவொரு தனி மனிதனின் அமைப்பாக விளங்கப் போகின்றது என்ற எனது சந்தேகத்தையும் ஈ.பி.டி.பி இயக்கத்தின் அண்மைக்கால வரலாறு அப்பாவி தமிழ் மக்களுக்கு மாறாக மீண்டும் அரங்கேறப்போகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

சந்தர்ப்பம் கிடைத்தால் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவாகள் என்ன செய்வார் என நானறியேன். வடக்கின் அபிவிருத்திக்கு பதிலாக தன் சொந்த நலனுக்காக இப் பதவியை பாவிக்க மாட்டார் என்று கூற முடியாது. சுயநலன் கருதி செயற்பட இவரைச் சுற்றி ஒரு கூட்டம் உண்டு. ஆனால் இவருடைய பணிக்கு பொது மக்களிடமிருந்து எதுவித ஒத்துழைப்பும் கிடைக்கப் போவதில்லை. தலைவர்களை மக்களே தெரிவு செய்ய வேண்டுமே அன்றி தலைவர்களை மக்கள் மீது திணிக்கக்கூடாது.

அவருடன் 1994ம் ஆண்டு தொடக்கம் 14 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து செயற்பட்டும், அமைச்சரவையில் இருவரும் அங்கத்துவம் வகித்த போதும் இவரைப் பற்றியோ இவரின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியோ நீங்கள் அறியாதிருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. இவர் கட்டுப்படுத்தத் தவறிய இவர்களுடைய போராளிகளுடைய மகிழ்ச்சி தராத நடவடிக்கைகளை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகள் இவர்களை மிஞ்சி செயற்பட்டமையால் இவர்களுக்கு ஒரேயொரு ஆசனம் மட்டும் கிடைத்தது. ஈ.பி.டி.பி யினருக்கும் எங்களுக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்கின்ற உரிமை மறுக்கப்பட்டது.

ஈ.பி.டி.பி தமது கடந்த கால அனுபவங்களை வைத்து ஓர் ஆசனத்தை எப்படியோ வென்று விட்டது. அதற்கு முன்பு நடைபெற்ற 2001 பொதுத் தேர்தலில் பிரச்சாரத்துக்காக வேலணைக்குச் சென்ற த.வி.கூ. தொண்டர்களை ஈ.பி.டி.பி யினர் வழி மறித்து துவக்குகளாலும், ஆயுதங்களாலும் தாக்கினர்.

இரு தொண்டர்கள் ஸ்தலத்திலேயே வெட்டிக்கொல்லப்பட்டனர். மற்றும் அனேகர் படுகாயமுற்றனர். ஈ.பி.டி.பி யினர் என்னை எங்கே எங்கே எனக்கேட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

திரு.எஸ்.சோனாதிராஜா தலையில் வெட்டுக்காயமும், திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின காலும் முறிக்கப்பட்டது.

அதற்கு முன் 2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள தனது ஸ்ரீதர் தியேட்டர் காரியாலயத்தில் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இருந்து கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அதே வீதியில் அமைந்திருந்த எனது காரியாலயத்துக்கு ஆர்பாட்டம் செய்யுமாறு அனுப்பியிருந்தார்.

பலர் குடிபோதையில் இருந்தனர். எனக்கு எதிரான சுலோகங்களுடன், எனது கொடும்பாவியை எரித்து காரியாலய பெயர் பலகையையும் உடைத்து விட்டுச் சென்றனர்.

இவ்வாறான பயமுறுத்தல், பயமுறுத்தி சம்மதிக்க வைப்பதும் தேர்தல் குற்றங்களாகும். தேர்தல் சட்டத்துக்கும் முரணானதாகும். இருந்தும் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சர் என்ற காரணத்தினால் பொலிசாரும், இராணுவத்தினரும் எதுவும் செய்ய முடியாத நிலையில் செயலற்று நின்றனர். இப்பொழுது விசேட செயலணி குழு தலைவராக செயற்படும் இவ் வேளையில் அரச ஊழியர்கள் அனேகரை தன் தேர்தல் பிரச்சாரத்திற்கு உபயோகிப்பாரேயானால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் அரச ஊழியர்கள் முதல் நாள் மாலையிலிருந்தே இவருக்காக செயற்பட ஆரம்பித்து விட்டனர். ஈ.பி.டி.பி இனருக்கும் அவர்களிடம் பல விடயங்களை கற்றுக்கொண்ட விடுதலைப் புலிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.

வெளிநாட்டு தூதுவர்களுக்கு 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் திகதி ஈ.பி.டி.பி யினரிடமிருந்து ஊர்காவற்துறை மக்களை விடுவிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிய கடித்தின் ஒரு பகுதியை கீழே குறிப்பிடுகின்றேன்.

"இன்றைய நிலையில் நான் அறிந்த வரையில் ஒவ்வொருவரினதும் கடமை ஊர்காவற்துறை தொகுதி மக்களை குறிப்பாக நெடுந்தீவு மக்களை விடுவிப்பதே. 4100 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட ஊர்காவற்துறையின் ஒரு பகுதியாகிய நெடுந்தீவு இராணுவம், பொலிஸ், கடற்படை ஆகியோர்; கடமையாற்ற இல்லாத வேளையில் அரச சார்பான ஈ.பி.டி.பி என்ற இயக்கம் அப் பகுதி முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.

கடந்த சில வருடங்களாக அப் பகுதி மக்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகி;ன்றனர். 1999ம் ஆண்டு நடந்தேறிய ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க க்கு வாக்களித்தவர்களை ஈ.பி.டி.பி யினர் கடுமையாக அடித்துத் துன்புறுத்தினர். உதவி அரசாங்க அதிபருடைய பெயர் தற்போது பிரதேச செயலளர் என மாற்றம் பெற்றுள்ளது.

அப் பகுதி அரசாங்க நிர்வாகத்துக்கு அவரே பொறுப்பாக இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நெடுந்தீவில் கடமையாற்றிய பிரதேச செயலாளர் ஈ.பி.டி.பி யினரால் அடித்துக் கொல்லப்பட்டார். அரசு இன்றுவரைக்கும் அதற்கொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தக் குடும்பத்தினருக்கு எந்தவித நட்ட ஈடும் வழங்கவில்லை. அடித்துக் கொல்லப்பட்டவரின் பெயர் நிக்லஸ் ஆகும்"

இரு வருடங்களுக்கு முன்பு ஈ.பி.டி.பி யினர் சுருவில் என்ற இடத்தில் மற்றொரு இளைஞரை சுட்டுக்கொன்றனர்.

இது சம்பந்தமாக நான்கு ஈ.பி.டி.பி இனர் மீது ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேக பேர்வழிகள் நெடுந்தீவுக்கு தப்பிச் சென்ற வேளையில் நீதிபதியினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருநதது. பிடியாணையை அமுல்படுத்த முடியாதவேளை காரைநகர் கடற்படை அதிகாரியை நீதிபதி விசாரணை செய்தபோது தனக்கு நெடுந்தீவுக்கு போக அதிகாரம் இல்லையென ஆதாரத்தோடு கூறியிருந்தார்.

அந்த விடயம் அந்த நீதவானின் இடமாற்றத்தோடு முடிந்து விட்டது. ஜனாதிபதி அவர்களே தாங்கள் உட்பட எவரேனும் நெடுந்தீவுக்கு போவதாக இருப்பின் ஈ.பி.டி.பி யினருடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

ஊர்காவற்துறை தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் ஈ.பி.டி.பி யினருடைய ஆயுதம் தாங்கியோர் பல்வேறு முகாம்களை அமைந்திருந்தனர். அப்பகுதி அப்பாவி மக்கள் அவர்களின் அதிகாரத்துக்குட்பட்டே வாழ்கின்றனர். ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில் அப் பகுதியிலுள்ள கடற்படையினர் புலிகளிடமிருந்து ஈ.பி.டி.பி யினரை பாதுகாப்பதும் ஈ.பி.டி.பி யினரிடருந்து பொதுமக்களை பாதுகாப்பதும் அவர்களுடைய கடமையாக இருந்தது. இருப்பினும் ஈ.பி.டி.பி யினரின் அட்டகாசத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. இதில் வேடிக்கை என்னவெனில் நெடுந்தீவு உட்பட ஈ.பி.டி.பி யினருக்கு ஊர்காவற்துறையில் எந்த வேலையும் இருக்கவில்லை. அவர்களுடைய ஆயுதக்குழுவினர் அப்பாவி மக்களை மிரட்டுவதும், பீதியடையச் செய்வதிலுமே ஈடுபட்டிருந்திருந்தனர்.

அரசாங்கம் மக்களின் ஒரு பகுதியினரை ஒரு ஆயுதக்குழு ஏன் துன்புறுத்த அனுமதிக்கின்றது என கேள்வியை எழுப்பலாம். பதில் மிகவும் இலகுவானதே. ஊர்காவற்துறை தொகுதியில் இவ்வாறு பெற்ற வாக்குகளால்தான் 1994ம் ஆண்டுத் தேர்தலில் ஈ.பி.டி.பி இனர் 9 ஆசனங்களை கைப்பற்ற முடிந்தது. இன விகிதாசார அடிப்படையில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் 11 தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த 11 தொகுதிகளில் ஊர்காவற்துறை தொகுதி ஈ.பி.டி.பி இன் முழு கட்டுப்பாட்டில் இருந்தது.

ஏனைய 10 தொகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகும். அதன் விளைவாக 10 தொகுதிகளில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. ஊர்காவற்துறையை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈ.பி.டி.பி 10 ஆசனங்களில் 9 ஐ பெற்றுக்கொண்டது. இதற்கு அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் 10 தொகுதிகளிலும் மொத்தமாக 175 மட்டுமே. ஊர்காவற்துறை தொகுதியில் ஏறக்குறைய 9000 வாக்குகளை பெற்றனர். அதைக்கூட தேர்தல் மோசடி மூலம் பெற்றதாக கண்காணிப்புக்குழு கூறியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லீம் மக்களின் சில ஆயிரம் வாக்குகளால் ஸ்ரீ.ல.மு.கா ஒரு ஆசனத்தை பெற்றது.

இவ்விடயத்தை மீண்டும் பரிசீலிப்பதற்கு போதிய விடயங்களை தந்துள்ளதாக கருதுகிறேன். ஈ.பி.டி.பி இனர் முன்பு செயற்பட்டது போல் இனியும் செய்யமாட்டார்கள் என்று எத்தகைய உத்தரவாதத்தை அரசு கொடுக்கும் என வட பகுதி மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

முன்பு அவர்களிடமிருந்தது ஒரு மாவட்டம். இப்போது அவரிடம் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு மாகாணமாகும் மற்றும் அனேகரைப் போல் நானும் முற்று முழுதாக இப் பிரச்சினையை மறு பரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்படலாம்.

இந் நடவடிக்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. அதற்கு மாறாக இனப்பிரச்சினையை மேலும் விரிவடையச் செய்து பொது மக்களை விடுதலைப் புலிகளை நோக்கி விரட்டிவிடும் நிலை ஏற்படலாம் என கருதுகிறேன்.

எனது விளக்கத்தால் தாங்கள் திருப்தி அடையாதிருந்தால் மேலும் சில விடயங்களை இக் கடிதத்தின் இரண்டாம் பாகமாக விரைவில் அனுப்பி வைப்பேன்.

இப்படிக்கு

அன்புள்ள
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

பாகம் -02

27-05-2008

மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
அலரி மாளிகை
கொழும்பு-03

வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழு

பாகம் -02

இக் கடிதத்திற்கும் இதற்கு முதற் பாகமாக என்னால் அனுப்பப்பட்ட நேற்றைய கடிதத்திற்கும் விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன்.

விடயம் அவசரமானதும், முக்கியமானதுமானதும் ஆகையால் அதை படித்துப் பார்க்க சொற்ப நேரம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கு கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது எதுவித விரோதமும் கிடையாது.

ஊர்காவற்துறை மக்களிடம் ஈ.பி.டி.பி போராளிகள் நடந்து கொண்ட கொடூரமான செயல்கள் இன்னும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை.

அவை மீண்டும் எதிர்காலத்தில் மக்கள் மீது பிரயோகிக்கப்பட மாட்டாது என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. நயினாதீவு என அழைக்கப்படும் நாகதீப உட்பட ஊர்காவற்துறை தொகுதி 09 தீவுகளை உள்ளடக்கியதாகும். இக் கடிதம் வேறு இரு கடிதங்களின் சில முக்கிய பகுதிகளை மட்டும் கொண்டுள்ளது.

ஆனால் இத்துடன் இணைக்கபட்டுள்ள கடிதங்களை முழுதாகப் படித்து ஆராய்ந்து பார்ப்பீர்களேயானால் அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களை தலைவராக கொண்டு இயங்கும் விசேட செயலணி குழு எத்தகைய ஆபத்தான முடிவை எதிர்நோக்கும் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.

அவ்விரு கடிதங்களும் நான் த.வி.கூ பாராளுமன்றகுழு தலைவராகவும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவராகவும் செயற்பட்ட காலத்தில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களுக்கு கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயல்முறை பற்றி முறையிட்ட கடிதமாகும்.

இத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்ற அதன் பிரதி (19-02-2001) இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக இருக்கும்.

"இத்தகைய சம்பவங்களை நாட்டின் எப்பகுதியிலும் ஏற்றுக்கொள்வார்களா?

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே இதை சிங்கள, முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இவ்வாறு செய்வதற்கு தமிழ் மக்களை மட்டும் ஏன் தெரிவு செய்தீர்கள்.

இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்குண்டு அல்லவா?

ஒரு கௌரவமான குடும்பத்தில் பிறந்த கண்ணியமான ஒரு பெண்மணியை இந்த நாட்டின் தலைவியாக பெற நாடு அதிர்ஷ்டம் பெற்றதாக மக்கள் கருதினர்.

தங்கள் கணவர் படுகொலை செய்யப்பட்டவேளை தாங்களும், தங்கள் பிள்ளைகளும் பட்ட துயரை நாமறிவோம். என்னைப் போன்ற பல மக்கள் உங்கள் துயரத்தில் பங்கு கொண்டனர்.

படுகொலை செய்யப்பட்ட உதவி அரசாங்க அதிபர் அவர்களின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஏற்பட்ட உணர்வு தாங்கள் கணவரை இழந்தவேளை ஏற்பட்ட உணர்வுக்கு வேறுபட்டதல்ல. ஒரேயொரு வித்தியாசம் உங்களுக்காக குரல் கொடுக்க பலர் இருந்தார்கள். அவர்களுக்காக பேச அநேகமாக நான் மட்டுமே.

உண்மையாகத்தான் கேட்கிறேன் ஜனாதிபதி அவர்களே உங்களின் ஆட்சிக்கு உட்பட்ட ஒருபகுதி மக்கள் மீது இழைக்கப்படுகின்ற கொடுமைகளை நீங்கள் அறிவீர்களா இல்லையா?.

நீங்கள் அறிவீர்கள் என பெருமளவில் மக்கள் நம்புகின்றார்கள். இவற்றை நீங்கள் அறிந்திருந்தால் ஜனாதிபதி அவர்களே இந்தக் கட்டத்திலேனும் தயவு செய்து தலையிடுங்கள்.

புத்த பகவானின் பேரால் தங்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.

ஈ.பி.டி.பி தலைவர் அவர்களை நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல வடகிழக்கு மக்களுக்கு முடிசூடா மன்னராக ஆக்கியுள்ளீர்கள்.

அவரே அரசாங்க அதிபரையும் பிரதேச செயலாளர்களையும் ஏனைய இலாகா தலைவர்களையும் யாழ்ப்பாணத்தில் நியமிக்கின்றார். அவரது சொற்படி நடக்காதவர்கள் புலி ஆதரவாளர்கள் என குறி சுடப்படுகின்றனர்.

விடுதலைப் புலிகளுடன் எதுவித தொடர்பும் இல்லையென ஒரு அரசாங்க ஊழியரையும் கூற முடியாது. யாழ்ப்பாணம், வன்னி ஆகிய பகுதிகள் 1990 ஆண்டிலிருந்து 1995 ம் ஆண்டுவரை விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. மிகத் திறமையான ஒரு பிரதேச செயலாளருக்கு பதவி நீடிப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த செயலாளர் மிகவும் சிறந்தவர் என பொது மக்கள் அபிப்பராயப்படுகின்றனர்.

நியமனங்கள், இடமாற்றங்கள் அத்தனையும் அவர் சொற்படியே நடக்கின்றது. திறமைக்கு அங்கே இடமில்லை. இரு வருடங்களுக்கு முன்பு ஆசியர் நியமனங்கள் ஸ்ரீதர் படமாளிகையில் இயங்கும் அவரது காரியாலயத்தில் வழங்கப்பட்டது. சுருங்கக் கூறின் எல்லா இலாகாக்களுக்கும் மந்திரியாக அவர் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் யாழ் ஒலி என்ற பிரிவு அவரை மேம்படுத்தியே பிரச்சாரங்கள் செய்தது. ஈ.பி.டி.பி இனருக்கென அரசாங்கம் ஒரு தனி அரசு அமைக்கின்றதா என மக்கள் கேட்கின்றார்கள்."

அக்கடிதத்தில் மேலும் கூறப்படுவதாவது:

"பாராளுமன்றத்துக்கு செல்லுகின்ற தார்மீக உரிமையற்ற ஒரு குழுவினர் சரியோ பிழையோ பாராளுமன்றம் புகுந்து விட்டனர்.

அத்துடன் அவர்கள் திருப்தி அடைந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக அக் குழுவினரின் தலைவரை அமைச்சர் பதவி வழங்கி தேர்தல் நடப்பதற்கு முன்பு பல்வேறு வேலைத் திட்டங்களுக்கென வரவு செலவுத் திட்டத்தில் ஒதுப்படாத பெரும் தொகையான பணத்தை எதுவித கணக்கு வழக்கின்றி யாழ்ப்பாணத்தில் செலவிட வைத்தீர்கள்.

கண்டபடி கேட்டதற்கெல்லாம் கொடுக்கப்பட்ட பெருந் தொகையான பணத்தில் ஒரு பகுதி தனியாரிடம் போய் சேர்ந்தது. இவ்வாறு செலவிடப்பட்ட பெருந் தொகையான பணம் வீடு வாசலை இழந்து, இடம்பெயர்ந்த மக்களுடைய புனர்வாழ்வுக்காக நல்ல உள்ளம் படைத்த பிற நாட்டவர்களால் தாராளமாக வழங்கப்பட்டதே அன்றி மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்காத, ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்படும் சமூக விரோத குழு ஒன்றுக்கு அதன் அரசியல் கட்சியை வளர்ப்பதற்கும், தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவிடுவதற்கும் அல்ல.

இத்தகைய குற்றங்களுக்கு பொறுப்பான அதே பேர்வழியை நீங்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக்கியது மட்டுமல்லாமல் வட கிழக்கிற்கு இந்து சமய கலாச்சார அமைச்சுக்களையும் கையளித்துள்ளீர்கள்.

அபிவிருத்திக்கு பொறுப்பான ரான் அமைப்பும் அவரின் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

பிற நாடுகளால் பெருந்தொகையாக அபிவிருத்திக்காக ரான் அமைப்புக்கு கொடுக்கப்பட்ட பணத்தை ரானில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்களையும் தானே நியமித்து செலவழித்துள்ளார்.

நன்கொடை வழங்கும் நாடுகளில் பணம் மரத்தில் பிடுங்குவதில்லை. பல்வேறு நாடுகளில் வாழும் மக்களின் தியாக உணர்வால் சேர்க்கப்பட்ட பணமே உதவி பணமாக வருகின்றது.

நாம் செலவிடும் ஒவ்வொரு சதத்தையும் நியாயப்படி செலவு செய்ய வேண்டுமேயொழிய பொது நலன் கருதாது தன்னலம் கருதும் ஒரு குழுவினரிடம் ஒப்படைக்க முடியாது.

அண்மையில் ஒரு பத்திரிகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் 400 குடும்பங்களின் புனர்வாழ்வுக்காக 22 மில்லியன் ரூபா ஒதுக்கியிருப்பதாக கூறப்பட்டது.

இதுவொரு நற்செய்தியாக இருந்தாலும் இப் பணத்தைப் பெற்றவர்கள் யார்? எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

கிடைத்த அறிக்கையின்படி நல்லூர், யாழ்ப்பாணம், வலி வடக்கு தெல்லிப்பளை, வலி மேற்கு சுன்னாகம், தீவுப்பகுதி வேலணை கிழக்கு, வலி தெற்கு உடுவில், பருத்தித்துறை ஆகிய பிரதேச சபைகளில் முறையே 110, 95, 69, 11, 04, 80, 33 ஆகிய எண்ணிக்கையானோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் யாரால் என்ன அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள்? இப் பிரதேசங்களில் இவர்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டார்களா?

இன்னுமொரு அறிக்கையின்படி இடம்பெயர்ந்தோரை குடிமயர்த்த காணி வாங்கவும், கட்டிட பொருட்கள் வழங்கவும் ஒரு திட்டத்தை தயாரிக்கும்படி கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.

பார்வைக்கு அது நல்ல திட்டமாக இருந்தாலும் இத்திட்டம் மக்களின் பூர்வீக காணிகளை பறித்தெடுக்கின்ற ஒரு சூழ்ச்சியான திட்டமென அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.

இப்பொழுது உண்மை வெளியாகிவிட்டது. உயர் பாதுகாப்பு வலயத்தில் வாழ்ந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் இருந்து அகற்றி வேறு இடங்களில் குடியேற்றும் திட்டம் அம்பலமாகியது.

ஜனாதிபதி அவர்களே ஹொரகல காணி தங்களுக்கு எவ்வாறு முக்கியமோ அதே போல்தான் மக்களின் பூர்வீக காணிகள் அவர்களுக்கு முக்கியமாகும். ஆகவே இத் திட்டத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் நண்பர்கள் வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் பல ஆண்டுகாலமாக பல கஷ்டங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பது என்றைக்கோ ஒரு நாள் தம்முடைய சொந்த நிலத்துக்கு போவோம் என்ற நம்பிக்கையே அன்றி வேறு இடத்தில் குடியேறுவதற்காக அல்ல. இதுதான் அரசின் நோக்கம் எனில் மக்கள் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கத் தேவையில்லை.

அரசும் யுத்தத்தை தொடருவதாக இருந்தாலும் அல்லது தமிழ் மக்களை அடக்கி வைத்திருக்கின்ற எண்ணமும் இருந்தாலே அன்றி உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே மக்களை குடியேற்ற வேண்டிய அவசியம் இல்லை.

விரைவாக யுத்தத்தை முடித்து அமைதியை ஏற்படுத்தி மக்கள் விரைவில் தங்கள் இடத்தில் குடியேறவும் வழி செய்வீர்கள் என நம்புகிறேன்.

பண மோசடி, தம் ஆதரவாளருக்கு விசேட சலுகை, எதிரிகளை கண்டித்தல் போன்றவையே ஈ.பி.டி.பி இனரால் கையாளப்படுகின்றன. ஆகவே நான் மிகவும் வன்மையாக வற்புறுத்தி கேட்பது பிற நாடுகள் நன்கொடையாக வழங்கும் பணத்தில் ஒரு சதமேனும் அமைச்சரால் தன் இஷ்டப்படியோ அன்றி தன்னால் தெரிவு செய்யப்பட்டவர் மூலமோ இஷ்டப்படி செலவழிப்பதை அனுமதிக்கக் கூடாது.

மேலும் பிற நாடுகளில் இருந்து வரும் பணம் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆலோசனையோடு தெரிவு செய்யப்படும் திட்டங்களுக்கே செலவிடப்பட வேண்டும். ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களை கொண்ட ஓர் ஆலோசனை குழுவை அமைக்கலாம் என ஆலோசனை கூற விரும்புகிறேன்.

என்னால் குறிப்பிடப்பட்ட இந்த விடயங்களை கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு ஊர்காவற்துறை தொகுதியில் வாழும் மக்களை குறிப்பாக நெடுந்தீவு மக்களை அவர்கள் படும் இன்னல்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்"

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களுக்கு 14-05-2001 இல் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்குழு சம்பந்தமாக எழுதப்பட்ட கடிதம் இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமாக இருப்பதால் அதன் சில பகுதிகளை கீழே குறிப்பிடுகிறேன்.

பிரதி இணைக்கபட்டுள்ளது.

"மோசடி மூலம் பாராளுமன்ற ஆசனங்களில் நான்கை பெற்ற ஈ.பி.டி.பி யின் தலைவரை யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமித்தமை எமக்கு விசனத்தைத் தருகிறது.

ஏனைய ஐந்து உறுப்பினர்களும் 54930 வாக்குகள் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவரை தெரிவு செய்கின்ற உரிமை உறுப்பினர்களிடம் விடப்பட்டிருக்க வேண்டும்.

ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் பிழையான வழியில் தாங்கள் தலைவரை தெரிவு செய்தது, தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய எம்மை குறிப்பாக என்னை அவமதிப்பது போலாகும். கடந்த பாராளுமன்றத்திலும் நீங்கள் அவரையே தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.

அக் கட்சியைச் சேர்ந்த 13 வேட்பாளர்களும் 10 தொகுதிகளில் எடுத்த வாக்குகள் 175 ஆக இருந்தும் அவர்களில் 9 பேர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

ஊர்காவற்துறை தொகுதியில் அவர்களுக்குக் கிடைத்த 8000 வாக்குகள் கணக்கில் எடுத்திருக்க முடியாதவையாகும். ஏனெனில் அன்று தொட்டு இன்று வரை ஊர்காவற்துறை தொகுதி மக்கள் ஈ.பி.டி.பி இனரின் இரும்புப் பிடியில் அடிமைகளாக வாழ்கின்றார்கள்.

1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈ.பி.டி.பி இனர் ஒரு மாற்றுக் கட்சி வேட்பாளரரையும் ஊர்காவற்துறை தொகுதிக்குள் போக அனுமதிக்கவில்லை.

நான் மிக ஆர்வத்துடன் ஜனாதிபதியாகிய உங்களை கேட்பது உங்களுக்கோ அல்லது உங்கள் அரசில் வேறு யாருக்குமோ சுதந்திரம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை உண்டா எனக் கேட்க விரும்புகின்றேன்.

வறுமைப்பட்ட எமது நாடு யுத்தத்தினால் மிக வறுமைபட்டுள்ளது. கடந்த வருடம் வேறு எந்த மாவட்டத்திலும் நடைபெறாத வகையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின் அவரை மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு தலைவராக தெரிவு செய்திருக்கிறீர்கள்.

இலங்கை சரித்திரத்தில் இது முன்பு நடைபெறாத ஒன்றாகும். யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய இரண்டு மணிநேர ஒரேயொரு கூட்டத்திற்கு திருகோணமலையிலிருந்து வடகிழக்கு மாகாண சபையின் பிரதான அதிகாரிகள் ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டதால் இந்த அரசுக்கு ஏற்பட்ட செலவை எவ்வளவு என கணக்கிட முடியுமா? இக் கூட்டத்தை கூட்ட வேண்டிய மறைமுக நோக்கம் என்னவெனில் ஊழியர்கள் அனைவரும் அவர்களுக்கு தலை வணங்க வேண்டும் என்பதாலேயே. அவர்களுடைய எண்ணம் பிரயோசனம் அளித்தது. அவருக்காக அரச ஊழியர்கள் தேர்தலுக்கு முதல்நாள் இரவே தமது கடமைகளை செய்யத் துவங்கி விட்டார்கள். திக்கம் வடிச்சாலை அவர்கள் பொறுப்பேற்றிருந்தால் அவர்களின் முயற்சி மிகக் கூடுதலான பலனை தந்திருக்கும்.

யாழ்ப்பாணத்தில் ஏழை வரியிறுப்பாளரின் பணத்தாலும் வடகிழக்கின் தமிழ் பகுதிகளில் தமிழ் அலுவல்கள் அமைச்சர் என்ற பெயரிலும் நீங்கள் மேம்படுத்தி வரும் அக்குழுவினர் தங்களின் உதவியுடன் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியுடன் திருப்தி அடைந்திருக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் அவர்களுக்கு பல பதவிகளை கொடுத்து செலவை கூட்டி வடக்கிலும் கிழக்கிலும் எல்லா விடயங்களிலும் தலையிட வாய்ப்பளித்தீர்கள். தற்போது அமைச்சர் தனது ஸ்ரீதர் படமாளிகை அலுவலகத்துக்கு முன்பாக உள்ள தனது அமைச்சில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை கூட்டுகிறார். பெருமளவில் அவரின் ஆயுதம் தாங்கிய போராளிகள் சூழ்ந்து நிற்கின்றனர். அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நான் 02-09-2001 ஆண்டு உங்களுக்கு அனுப்பிய ஆட்சேபனை கடிதத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன்.

முறைப்படி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எதிர்கால சந்ததியின் நன்மை கருதி ஜனநாயகத்தை பாதுகாக்க என் உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளேன். அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையெனத் தீர்மானித்துள்ளேன்.

ஈற்றில் ஊர்காவற்துறை தொகுதி மக்களை ஈ.பி.டி.பி யினரின் பிடியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுகிறேன். அத்துடன் 12000 சீவல் தொழிலாளர்களுக்கு சொந்தமான திக்கம் வடிசாலையை துப்பாக்கி முனையில் எடுத்தனர். அதையும் திரும்ப கொடுக்கவும். அத்துடன் யாழ் மாநகரசபை நிர்வாகத்தில் கை வைக்க வேண்டாமென பணிக்கவும்".

ஜனாதிபதி அவர்களே மிக இக்கட்டான ஓர் காலத்தில் நாட்டின் தலைமை பதவியை வகிக்கின்றீர்கள் என்பதால் ஒவ்வொரு செயற்பாடும் மிகக் கவனத்துடன் நடைபெற வேண்டும். மனித உரிமை மீறல் விடயத்தில் கூட நீங்கள் ஏன் பழியை சுமக்க வேண்டும்?.

எனது கடிதத்தின் 1ம், 2ம் பாகங்களில் கொடுக்கப்பட்டுள்ள சில பகுதிகள் உண்மையை விளக்குகின்றன. கௌரவ டக்ளஸ் தேவானந்தா போதியளவு அதிகாரத்தையும் பல்வேறு சலுகைகளையும் அவருக்குரியவற்றுக்கு மேலதிகமாக அனுபவித்து விட்டார். தாங்கள் எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போகிறீர்கள் என சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருக்கும் போது மற்றவர்களுடைய தவறால் அரசு தனது நாணயத்தை இழக்கக் கூடாது என்பது என் ஆதங்கமாகும். எனது மக்களுக்கும் பொதுவாக என் நாட்டுக்கும் என் கடமையை செய்து விட்டேன் என்ற திருப்தியுடன் நான் போகிறேன். தங்கள் முயற்சிகள் அத்தனையும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு

அன்புள்ள
வீ. ஆனந்தசங்கரி

தலைவர்- த.வி.கூ.