Friday, September 21, 2007

இனப்பிரச்சினை தீர்வுச் செயன்முறையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் துறைசார் நிபுணர்கள் கருத்து

இனப்பிரச்சினை தீர்வுச் செயன்முறையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் துறைசார் நிபுணர்கள் கருத்து
22 September 2007

* செய்திகள்

Thaj_Samudra_Hottel.jpgஇனப்பிரச்சினை தீர்வுச் செயன்முறையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர் அல்லது அனுசரணையாளரின் செயற்பாடு இன்றியமையாதது. முரண்பட்டுள்ள தரப்புகள் பொதுவான நடுநிலையான செயற்பாடுகளை முன்னெடுக்க மூன்றாம் தரப்பின் பிரசன்னம் அவசியமானதாகும் என்று துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சமாதான தினத்தையொட்டி முரண்பாட்டுக் கற்கைகளுக்கான பேர்கொப் நிறுவனம் மற்றும் இனக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் என்பன இணைந்து நேற்று கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே நிபுணர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.

இந் நிகழ்வில் பேர்கொப் நிறுவன இயக்குனர் கலாநிதி நோபேட் போப்பஸ், இனக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இயக்குனர் கலாநிதி ரமாமணி, மூலோபாய கற்கைகளுக்கான பிராந்திய இயக்குனர் கலாநிதி றிபாட் ஹுஸைன், லக்பிம நியூஸ் பிரதம ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க, அமால் ஜயசிங்க, சாந்தி சச்சிதானந்தன் உள்ளிட்டோர் சமாதான செயற்பாட்டில் மூன்றாந் தரப்பின் செயற்பாடு தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.

இன முரண்பாட்டுக்கான தீர்வுச் செயன்முறையின் போது ஒரு தரப்பிடமுள்ள அதிகாரங்கள் மற்றைய தரப்பிடம் பகிர்ந்து வழங்கப்படுவதே இறுதி முடிவாக அமையும்.
உலகில் எந்த தரப்பும் அதிகாரங்களை தாமாகவே முன்வந்து மற்றைய தரப்பிடம் வழங்க முன்வருவதில்லை. பொதுவாக இன முரண்பாடுகளானது அதிகாரப் பரவலின்மை காரணமாகவே உருவாகின்றது.

எனவே இன முரண்பாட்டுக்கு தீர்வு காணும்போது அதிகாரம் பகிரப்படுவது முக்கியமானது. எனவே இச்செயன்முறைக்கு அனுசரணையாளராகவோ அல்லது மத்தியஸ்தராகவோ செயற்படுவதற்கு மூன்றாம் தரப்பின் பங்குபற்றுதல் அவசியமானது.

இனப்பிரச்சினை விடையத்தில் பிரதான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன் அதன் மூலம் உருவான சிறிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஏனெனில் இச்சிறிய முரண்பாடுகளே சமாதானச் செயற்பாட்டிற்கான சுமூகமான சூழலை உருவாக்குவதற்கு பெரும் தடைக்கல்லாக உள்ளன.

இச் செயன்முறையில் மூன்றாந் தரப்பினால் காத்திரமான மாற்றத்தை உருவாக்க முடியும். எனினும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தரின் நடுநிலைத்தன்மை, வினைத்திறனான செயற்பாடு என்பன முரண்பாட்டு தீர்வு செயன்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இம் மூன்றாந்தரப்பினர் தமது சுயலாபங்களுக்காகவும், தமது நாட்டின் பிராந்தியத்தின் நலன்களையும் கருத்திற்கொண்டே செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

எனினும் முரண்பட்டுள்ள இரு தரப்பினர் தமக்கிடையிலான பிரச்சினைகளை தம்மால் தீர்க்க முடியாத நிலையிலேயே மூன்றாந் தரப்பு மத்தியஸ்தத்தை நாடுகின்றனர்.
இம் மூன்றாந் தரப்பு தனது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முரண்பட்டுள்ள தரப்புகளின் மீது பொருளாதாரத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்தலாம். இதற்கு அவர்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற்றுக் கொள்ளவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

Wednesday, September 12, 2007

பிரபாகரனின் நண்பர் கைது பாங்காக் நகரில் சர்வதேச போலீஸ் அதிரடி


பிரபாகரனின் நண்பர் கைது பாங்காக் நகரில் சர்வதேச போலீஸ் அதிரடி
12 September 2007

* கட்டுரைகள்

K_Pathmanathan_0.jpgPrabaharan_family.jpgபுலிப்பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்கி கடத்தி வந்தவரும், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிக நெருங்கிய நண்பரும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நெருங்கிய தொடர்புடையவர் என்று கருதப்படுபவருமான "கே.பி.' என்ற குமரன் பத்மநாதன் பாங்காக்கில் சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் கடத்தலுக்காகவும் தேடப்பட்டு வந்த "கே.பி.' கைது செய்யப்பட்டுள்ளது புலிகளுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"கே.பி.' என்கிற குமரன் பத்மநாதன் புலிகளின் மிக முக்கிய நபராக கருதப்படுபவர் சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்கிற குமரன் பத்மநாதன். இவர் சர்வதேச போலீசாரால் நேற்று பாங்காக்கில் கைது செய்யப்பட்டார். இது குறித்து தாய்லாந்து பத்திரிகைகள் தெரிவித்துள்ள செய்தி வருமாறு:

புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதில் மிக முக்கியமானவராக கருதப்படும் குமரன் பத்மநாதன் பல்வேறு நாடுகளில் தங்கியிருந்து போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வந்தார். பெருமளவு போதைப் பொருட்களை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் ஆயுதங்களை வாங்கி புலிகளுக்கு கடத்துவது இவரது முக்கிய பணியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளிலிருந்து புலிகள் இயக்கத்திற்கு பெருமளவில் பணம் வசூலித்து அனுப்பும் பொறுப்பையும் அவர் மேற்கொண்டிருந்தார். தாய்லாந்து குடியுரிமை பெற்றிருந்த பத்மநாதன், போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தலுக்காக சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்தார். தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் மாறி மாறி வசித்து வந்த "கே.பி.' என்று புலிகளால் மிகவும் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் லண்டன், பிராங்பட், டென்மார்க், ஏதன்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்து செயல்பட்டு வந்தார்.

மேலும் ரங்கூன், சிங்கப்பூர், ஜோகன்னஸ்பர்க் ஆகிய நகரங்களிலும் இவருக்கென பெரும் கட்டமைப்பு இருந்து வந்தது. சுமார் 200 பாஸ்போர்ட்களுடன் பல்வேறு நாடுகளுக்கும் தங்கு தடையின்றி பறந்து, புலிகளுக்கு பெரும் பண வசூலிலும் அவர் ஈடுபட்டு வந்தார். 1991ம் ஆண்டு டோங்நோவா என்ற கப்பல் புலிகளுக்கு ஆயுதங்களை கடத்திச் செல்ல முயன்றபோது சென்னை அருகே பிடிபட்டது. அதிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஆயுத கடத்தலிலும் குமரன் பத்மநாதன் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடி வந்தனர். இது தொடர்பாக சர்வதேச காவல் துறையின் ஒத்துழைப்பையும் தமிழக போலீசார் கோரியிருந்தனர்.

இத்தகைய முக்கியமான புலிகளின் நெருங்கிய பிரமுகர் பாங்காக்கில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இத்தகவலை இலங்கை பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இவரது கைது புலிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், புலிகளின் ஆயுத சப்ளைக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அடியாகவும் கருதப்படுகிறது.

புலிகளுக்கான ஆயுத கடத்தல் விசாரணையில் மிகப் பெரிய திருப்பமாக இதை சர்வதேச போலீசார் கருதுகின்றனர். மேலும் இது குறித்து நடந்து வரும் புலன் விசாரணையில், ஆயுத கடத்தல், பணபரிமாற்றம், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதையடுத்து இலங்கை அரசு அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்று வலியுறுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மட்டுமல்லாமல் அவரது மனைவி மதிவதனிக்கும் மிக நெருங்கிய நண்பர் என்ற முக்கிய தகவலும் ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப் பட்டவர் என்ற அதிர்ச்சி தரும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

கே.பி. கைது செய்யப்பட்டுள்ள தகவல் புலிகளின் சர்வதேச கட்டமைப்புக்கு மிகப் பெரிய இடியாக இறங்கியுள்ளது என்றும், வன்னியிலுள்ள புலிகள் முகாமில் பெரும் மாரடைப்பு போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் புலிகளின் வேவு பிரிவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கூறியதாக தாய்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
யார் இந்த பத்மநாதன்? பரபரப்பு தகவல்கள்

புலிப்பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் மற்றும் ஆயுத சப்ளை செய்து வந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. புலிகளுக்கான ஆயுதங்களை கடத்தி வந்த அந்த மூலகர்த்தா பற்றிய தகவல்கள் வருமாறு: சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்கிற குமரன் பத்மநாதன் என்கிற "கே.பி.' (வயது 49). புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதக்கடத்தல் பிரிவின் மிக முக்கிய புள்ளியாவார்.தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் வசித்து வந்த அவர், சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்த மிகக் கொடிய பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம்பெற்றவராவார்.

பல பயங்கரவாத செயல்கள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் என்று கருதப்படுகிறது. பல பெயர்களை கொண்ட பத்மநாதன், 200க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்களை வைத்திருந்தார். மேலும் லண்டன், பிராங்பர்ட், ஏத்தேன்ஸ், அவுஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய இடங்களில் அவருக்கு வங்கி கணக்குகளும் உள்ளன.

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மட்டுமல்லாமல் அவரது மனைவி மதிவதனிக்கும் மிக நெருங்கிய நண்பராவார் இந்த கே.பி. புலிகளின் சர்வதேச குழுவில் மதிவதனியுடன் செயல்பட்டு வந்தார். பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமான கே.பி., புலிகளுக்கு ஆயுத சப்ளையும் மற்றும் பணசப்ளையும் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான ஆயுதங்கள், வெடி மருந்துகளை மட்டுமல்லாமல், தொழில் நுட்பத்தையும் அளித்து வந்த புலிகளின் ரகசிய சர்வதேச நடவடிக்கைகளின் மூலகர்த்தாவான பத்மநாதனின் நடவடிக்கைகள் "கே.பி. பிராஞ்ச்' என்ற சங்கேத குறியீடு மூலம் செயல்பட்டு வந்தது சர்வதேச போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் புலிகளின் போர்க்குழுவில் இடம்பெற்றிருப்பவர்களைப் போல வெளியுலகுக்கு அதிகம் தெரியமாட்டார்கள். புலிகளின் மற்றய பிரிவுகள் போல் இல்லாமல் "கே.பி. பிராஞ்ச்' சுதந்திரமாக இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. கே.பி. பிராஞ்ச் ஆயுதங்களை சிறிய அளவிலும், பெரிய அளவிலும் கடத்தி கடற்புலிகளுக்கு அளித்து வந்தது. ஆயுத சப்ளைக்காகவே மிகப் பெரிய ரகசிய கப்பல் கம்பெனியே இயங்கி வந்தது என்பது பிரமிப்பூட்டும் விஷயமாகும்.

இந்த கப்பல்கள் பெரும்பாலும் சரக்கு கையாளுவதை முக்கிய நடவடிக்கையாக கொண்டிருந்தன என்பதும், இதன் மூலம் திரட்டப்படும் பணத்தை கொண்டு ஆயுத சப்ளையும் செய்து வந்தன என்பதும் கூடுதல் தகவல்களாகும்.

மியான்மார், புக்கெட் எனப்படும் தாய்லாந்து தீவு ஆகியவற்றை தளமாக கொண்டு இந்த கப்பல்கள் செயல்பட்டு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஹெராயின் எனப்படும் போதைப் பொருள் கடத்தலிலும் இந்த கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில் இந்த கப்பல்கள் இயக்கப்படுவது வழக்கமாகும்.

1997ஆம் ஆண்டு தான்சானியாவிலிருந்து இலங்கை ராணுவத்திற்காக கொண்டு செல்லப்பட்ட நவீன ஆயுதங்களை மிக சாதுர்யமாக அப்படியே புலிகளுக்கு கடத்தியது கே.பி. பிராஞ்சின் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக தாய்லாந்தை தலைமையிடமாக கொண்டு புலிகள் செயல்பட்டு வந்துள்ளதும் பெரும் கட்டமைப்பை அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்ததும் சர்வதேச போலீஸ் நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, புலிகளின் கிழக்கு ஆசிய கட்டமைப்பு தளமாக கம்போடியாவையும் அவர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
யார் இந்த பத்மநாதன்? பரபரப்பு தகவல்கள்

புலிப்பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் மற்றும் ஆயுத சப்ளை செய்து வந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. புலிகளுக்கான ஆயுதங்களை கடத்தி வந்த அந்த மூலகர்த்தா பற்றிய தகவல்கள் வருமாறு: சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்கிற குமரன் பத்மநாதன் என்கிற "கே.பி.' (வயது 49). புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதக்கடத்தல் பிரிவின் மிக முக்கிய புள்ளியாவார்.தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் வசித்து வந்த அவர், சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்த மிகக் கொடிய பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம்பெற்றவராவார்.

பல பயங்கரவாத செயல்கள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் என்று கருதப்படுகிறது. பல பெயர்களை கொண்ட பத்மநாதன், 200க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்களை வைத்திருந்தார். மேலும் லண்டன், பிராங்பர்ட், ஏத்தேன்ஸ், அவுஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய இடங்களில் அவருக்கு வங்கி கணக்குகளும் உள்ளன.

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மட்டுமல்லாமல் அவரது மனைவி மதிவதனிக்கும் மிக நெருங்கிய நண்பராவார் இந்த கே.பி. புலிகளின் சர்வதேச குழுவில் மதிவதனியுடன் செயல்பட்டு வந்தார். பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமான கே.பி., புலிகளுக்கு ஆயுத சப்ளையும் மற்றும் பணசப்ளையும் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான ஆயுதங்கள், வெடி மருந்துகளை மட்டுமல்லாமல், தொழில் நுட்பத்தையும் அளித்து வந்த புலிகளின் ரகசிய சர்வதேச நடவடிக்கைகளின் மூலகர்த்தாவான பத்மநாதனின் நடவடிக்கைகள் "கே.பி. பிராஞ்ச்' என்ற சங்கேத குறியீடு மூலம் செயல்பட்டு வந்தது சர்வதேச போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் புலிகளின் போர்க்குழுவில் இடம்பெற்றிருப்பவர்களைப் போல வெளியுலகுக்கு அதிகம் தெரியமாட்டார்கள். புலிகளின் மற்றய பிரிவுகள் போல் இல்லாமல் "கே.பி. பிராஞ்ச்' சுதந்திரமாக இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. கே.பி. பிராஞ்ச் ஆயுதங்களை சிறிய அளவிலும், பெரிய அளவிலும் கடத்தி கடற்புலிகளுக்கு அளித்து வந்தது. ஆயுத சப்ளைக்காகவே மிகப் பெரிய ரகசிய கப்பல் கம்பெனியே இயங்கி வந்தது என்பது பிரமிப்பூட்டும் விஷயமாகும்.

இந்த கப்பல்கள் பெரும்பாலும் சரக்கு கையாளுவதை முக்கிய நடவடிக்கையாக கொண்டிருந்தன என்பதும், இதன் மூலம் திரட்டப்படும் பணத்தை கொண்டு ஆயுத சப்ளையும் செய்து வந்தன என்பதும் கூடுதல் தகவல்களாகும்.

மியான்மார், புக்கெட் எனப்படும் தாய்லாந்து தீவு ஆகியவற்றை தளமாக கொண்டு இந்த கப்பல்கள் செயல்பட்டு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஹெராயின் எனப்படும் போதைப் பொருள் கடத்தலிலும் இந்த கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில் இந்த கப்பல்கள் இயக்கப்படுவது வழக்கமாகும்.

1997ஆம் ஆண்டு தான்சானியாவிலிருந்து இலங்கை ராணுவத்திற்காக கொண்டு செல்லப்பட்ட நவீன ஆயுதங்களை மிக சாதுர்யமாக அப்படியே புலிகளுக்கு கடத்தியது கே.பி. பிராஞ்சின் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக தாய்லாந்தை தலைமையிடமாக கொண்டு புலிகள் செயல்பட்டு வந்துள்ளதும் பெரும் கட்டமைப்பை அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்ததும் சர்வதேச போலீஸ் நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, புலிகளின் கிழக்கு ஆசிய கட்டமைப்பு தளமாக கம்போடியாவையும் அவர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

Monday, September 10, 2007

நவாஸ் ஷரீப் அவர்களின் அரசியல் வாழ்வில் சென்றது முதல் வந்தது வரை...

நவாஸ் ஷரீப் அவர்களின் அரசியல் வாழ்வில் சென்றது முதல் வந்தது வரை...
11 September 2007

* கட்டுரைகள்

Navas_Sarif_1.jpg1949 ஆம் ஆண்டு லாகூரில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) கட்சித் தலைவர் மியான் முகமது நவாஸ் ஷரீப்புக்கு மகனாகப் பிறந்தார் நவாஸ் ஷரீப். இளமையிலேயே அரசியலில் அதிக ஈடுபாடாகத் திகழ்ந்தார். நீண்டகாலம் அரசியல் பணியாற்றினாலும் 1981 ஆம் ஆண்டு தனது 30-வது வயதில்தான் முழு நேர அரசியல் பணியில் நவாஸ் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் அவர் தேசிய அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. மாகாண அரசியலில்தான் தீவிரம்காட்டினார்.

அந்தவகையில், பஞ்சாப் மாகாணத்தின் நிதி அமைச்சராக முதலில் பதவி வகித்தார். பின்னர் அம்மாகாணத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து, தேசிய அரசியலில் குதிக்க முடிவு செய்த அவர், தேர்தலில் போட்டியிட்டு 1990 ஆம் ஆண்டு நவம்பர் 1-ல் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார் மூன்றாண்டுகள் வெற்றிகரமான பிரதமராக பணியாற்றிய நவாஸ் ஷரீப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது தெரியவில்லை.

1993 ஆம் ஆண்டு ஜூலை 18-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் அப்போதைய அதிபர் குலாம் இசாக்கினால் களைக்கப்பட்டது. இதனால் தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் ராஜிநாமா செய்யவேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு நவாஸ் ஷரீப் தள்ளப்பட்டார்.

இதையடுத்து, இரண்டாவது தடவையாக 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி நவாஸ் ஷரீப் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். ஆனால் இந்தத் தடவையும் அவரால் தனது பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யமுடியவில்லை. 1999-ம் ஆண்டு அக்டோபர் 12-ல் முஷாரபினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் நாடு கடத்தப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் முதன் முறையாக நாடுகடத்தப்பட்டு, தற்போது பாகிஸ்தான் திரும்பியது வரை அவர் தனது வாழ்வில் ஏராளமான இன்னல்களையும், திருப்புமுனைகளையும் சந்தித்துள்ளார்.

அவை வருமாறு:

அக்டோபர் 12, 1999: ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த முஷாரபை பிரதமராக இருந்த நவாஸ் ஷரீப் பதவி நீக்கம் செய்ய முயற்சித்தார். இதையறிந்த முஷாரப் சுதாகரித்துக் கொண்டு ராணுவ பலத்தின் மூலம் நவாஸ் ஷரீப்பை பதவியை விட்டுத் தூக்கியெறிந்தார். உடனடியாக நாட்டை தன் கட்டுப் பாட்டுக்குள்ளும் கொண்டுவந்தார்.

அக்டோபர் 15, 1999: பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ராணுவத் தலைமைத் தளபதியான முஷாரப், நாட்டின் அதிபராகவும் தனக்குத்தானே முடிசூடிக் கொண்டார்.

நவம்பர் 10, 1999: தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக நவாஸ் ஷரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

நவம்பர் 18, 1999: நவாஸ் ஷரீப் முறைப்படி கைது செய்யப்பட்டு கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஜனவரி 19, 2000: நவாஸ் ஷரீப், அவரது சகோதரர் ஷபாஸ் உள்பட 7 பேர் மீது பயங்கரவாதம், கடத்தல், கொலை முயற்சி ஆகிய செயல்களில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது

ஏப்ரல் 6, 2000: நவாஸ் ஷரீப்புக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது சொத்துக்கள் முழுவதையும் முடக்க அரசு உத்தரவிட்டது.

மே 12, 2000: ஊழல் விசாரணை நீதிமன்றத்தில் நவாஸ் ஷரீப் மீதான ஊழல் வழக்கு விசாரணை தொடங்கியது.

ஜூன் 2, 2000: நவாஸ் ஷரீப்புக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்தல், வருமான வருவரி காட்டாமல் ஏமாற்றியது ஆகிய குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.

ஜூலை 22, 2000: ஊழல் குற்றச்சாட்டு நிருபணமானதையடுத்து, 21 ஆண்டுகள் எந்த ஒரு அரசியல் பதவியையும் நவாஸ் ஷரீப் வகிக்கக் கூடாது என நீதிமன்றம் தடைவிதித்தது. அத்துடன் ரூ.17 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

டிசம்பர் 10, 2000: நவாஸ் ஷரீப் தான் செய்த அனைத்து குற்றங்களுக்காவும் மன்னிக்கப்பட்டார். குடும்பத்துடன் சவூதி அரேபியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

பிப்ரவரி 12, 2001: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நவாஸ் ஷரீப்பிடம் சவூதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டது.

ஜூலை 7, 2005: முஷாரபுடன் ரகசிய உடன்பாடு ஏற்படுத்தியுள்ளதாக எழுந்தக குற்றச்சாட்டை நவாஸ் ஷரீப் திட்டவட்டமாக மறுத்தார்.

ஜூலை 29, 2005: நவாஸ் ஷரீப்பின் சகோதரர் ஷபாஸ் நாட்டைவிட்டுச் செல்ல பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டது.

நவம்பர் 7, 2006: நோய்வாய்ப்பட்ட தனது மகனுடன் லண்டனுக்குச் செல்ல நவாஸ் ஷரீப்புக்கு பாகிஸ்தான் அரசு பாஸ்போர்ட் வழங்கியது.

ஜூலை 20, 2007: முஷாரபினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முகமது இப்திகாரின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன் அவரை மீண்டும் தலைமை நீதிபதியாக நியமித்தது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.

ஆகஸ்ட் 3, 2007: தான் மீண்டும் தாயகம் திரும்புவதற்காக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நவாஸ் ஷரீப் நாடினார்.

ஆகஸ்ட் 23, 2007: நவாஸ் ஷரீப் தாயகம் திரும்ப உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆகஸ்ட் 30, 2007: தான் செப்டம்பர் 10 ஆம் தேதி பாகிஸ்தான் திரும்பப் போவதாக நவாஸ் ஷரீப் வெளிப்படையாக அறிவித்தார்.

செப்டம்பர் 7, 2007: ஷபாஸ கொலை குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நவாஸ் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கக் கோரி அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

செப்டம்பர் 10, 2007: நவாஸ் ஷரீப் தான் முன்னதாக அறிவித்திருந்தபடி, லண்டனில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் வந்தடைந்தார். விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே, அவர் கைது செய்யப்பட்டு ஜெட்டாவுக்கு மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.

நவாஸ் ஷெரீப் மீண்டும் நாடு கடத்தப்பட்டார்

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்ற அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிப் அவர்கள் சில மணி நேரத்திலேயே, மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.

1999 இல் இராணுவ புரட்சியின் மூலம் தன்னைப் பதவி விலக்கிய, தற்போதைய பாகிஸ்தானிய அதிபர் பர்வேஸ் முஷாரப் அவர்களை எதிர்கொள்வதற்காக, அவருக்கு ஒரு சாவாலாகவே பாகிஸ்தானுக்குத் திரும்பும் முடியை நவாஸ் எடுத்திருந்தார். எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவர் நாடு திரும்பலாம் என்று பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றம் அறிவித்த சில வாரங்களின் பின்னர் அவர் லண்டனில் இருந்து பாகிஸ்தான் சென்றார்.


இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இறங்கிய தருணத்தில்
இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இறங்கிய தருணத்தில்
பாகிஸ்தானுக்கு தான் திரும்பிச் செல்லும் இந்த முயற்சியை சர்வாதிகாரத்துக்கு எதிரான ஒரு ஜனநாயக முயற்சியாக அவர் வர்ணித்திருந்தார்.

இருந்த போதிலும் தான் அங்கு சென்று இறங்கும் போது கைது செய்யப்படலாம் என்பதை நவாஸ் ஷெரீப் அறிந்தே இருந்தார்.

அவரது நாடு கடத்தலை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட பொலிஸார் அவர்களை கலைத்தனர்.

இப்படியான ஆர்ப்பாட்டங்கள் இஸ்லாமாபாத்திலும், ராவல்பின்டியிலும், அட்டாக்கிலும் கூட நடந்ததாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் கூட நடந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

இன்று மாத்திரமல்லாமல் கடந்த 5 நாட்களாக நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியின் பல தலைவர்கள் உட்பட சுமார் மூவாயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக அந்தக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் முஷாரப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக திகழ்வார் என்ற காரணத்தினாலே நவாஸ் ஷெரீப் அவர்கள் மீண்டும் நாடுகடத்தப்பட்டதாக முஸ்லீம் லீக் கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறாகள். ஆனால் பாகிஸ்தானின் மதவிவகார அமைச்சர் இஜாஸ் அல் ஹக் அதனை மறுக்கிறார்.


நவாஸ் ஷெரீப்பின் ஆதர்வாளர்களை பொலிசார் கலைத்தனர்
நவாஸ் ஷெரீப்பின் ஆதர்வாளர்களை பொலிசார் கலைத்தனர்
எப்படியிருந்த போதிலும் நவாஸ் ஷெரீப் நாடுகடத்தப்பட்டதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

அவரை நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தமையானது, நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அது மாத்திரமன்றி அவர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டதன் மூலம் பல அரசியல் லாபங்களையும் அவரது கட்சி பெறமுயலக்கூடும். அவரை ஒரு அரசியல் மாவீரராக அவரது கட்சியினர் முன்னிலைப்படுத்த முனையலாம்.

ஆகவே நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தியமை இந்தப் பிரச்சினையின் முடிவாக இருக்கப்போவதில்லை, சட்ட ரீதியாகக் கூட அதிபர் முஸாரப் பலவீனமாக இருப்பதாகவே தென்படுகிறது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

அத்தோடு அதிபர் முஸாரப்புக்கு எதிரான நவாஸ் ஷெரீப்பின் போராட்டமும் நாட்டுக்கு வெளியே இருந்த வண்ணம் தொடரத்தான் போகிறது.

Sunday, September 9, 2007

பல தடவை தவறாக உரையாற்றி பரபரப்பை ஏற்படுத்திய புஷ

பல தடவை தவறாக உரையாற்றி பரபரப்பை ஏற்படுத்திய புஷ்
[09 - September - 2007] [Font Size - A - A - A]
ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டில் (ஏ.பி.இ.சி.) பங்கேற்க சிட்னி வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி புஷ், ஒரு கூட்டத்தில் பங்கேற்ற போது பல முறை தவறுதலாக பேசினார். இது கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிட்னியில் நடந்த தொழிலதிபர்கள் கூட்டத்தில் புஷ் பேசுகையில்; `என்னை அறிமுகப்படுத்திய அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவர்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல ஓ.பி.இ.சி. மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.

புஷ் ஏ.பி.இ.சி. மாநாடு என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால், தவறுதலாக, மசகு எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓ.பி.இ.சி. மாநாடு என்று கூறிவிட்டார். இதைக்கேட்டதும் கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிந்து விட்டனர். உடனே சுதாரித்துக் கொண்ட புஷ், `அடுத்த ஆண்டு நடக்கும் ஓ.பி.சி. மாநாட்டில் பங்கேற்கும்படி எனக்கு அவுஸ்திரேலியா பிரதமர் அழைப்பு விடுத்தார்' என்று சமாளித்தார். ஆனால், ஓ.பி.இ.சி. அமைப்பில் அவுஸ்திரேலியா உறுப்பினராக இல்லை என்பதையும் அவர் மறந்துவிட்டார். தொடர்ந்து பேசிய புஷ், `ஈராக்கில் உள்ள ஆஸ்திரிய நாட்டு இராணுவ வீரர்களை சந்திக்க அவுஸ்திரேலிய பிரதமர் சென்றார். என்று குறிப்பிட்டார். ஈராக்கில் ஆஸ்திரிய நாட்டு இராணுவ வீரர்கள் இல்லை அவுஸ்திரேலிய இராணுவ வீரர்கள் ஆயிரத்து 500 பேர் உள்ளனர். அவுஸ்திரேலியா என்று கூறுவதற்கு பதிலாக ஆஸ்திரியா என்று கூறி மீண்டும் புஷ் தவறு செய்தார். இதனாலும் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. புஷ் இப்படி தப்பு தப்பாக பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதம் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வரவேற்பு நிகழ்ச்சியில் ராணியை 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, September 8, 2007

நோர்வே அரசியலில் தமிழ்ப் பெண்கள் பிரவேசம்- நோர்வேயின் அணுசரனையின் பின்புலம்-





நோர்வே அரசியலில் தமிழ்ப் பெண்கள் பிரவேசம்
[வெள்ளிக்கிழமை, 7 செப்ரெம்பர் 2007, 17:29 ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்]

நோர்வேயில் எதிர்வரும் திங்கட்கிழமை (10.09.07) நடைபெறவுள்ள நகர சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்ப் பெண்கள் முதற்தடவையாக போட்டியிடுவதன் மூலம் நோர்வே அரசியலில் பிரவேசிக்கின்றனர்.

நோர்வேத் தமிழ்ச் சமூகத்தின் 2 ஆம் தலைமுறையைச் சேர்ந்த

ஹம்சாய்னி குணரட்ணம் ஒஸ்லோ நகரசபைக்காகவும்

துஸ்யந்தி கணேசந்திரா ஒஸ்லோவின் 15 உள்ளுராட்சி சபைகளில் ஒன்றான Grorud உள்ளுராட்சி சபைக்காகவும்

சுமதி விஜயராஜ் Stovner உள்ளுராட்சி சபைக்காகவும்

திலகவதி சண்முகநாதன் ஒஸ்லோவை அடுத்துள்ள லோறன்ஸ்கூ நகரசபைக்காகவும்

வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

தொழிற்கட்சி சார்பில் போட்டியிடும் இந்த நால்வரும் சமூகப் பொறுப்புணர்வுடைய ஆளுமை மிக்க பெண்கள். தமது சமூகச் செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்கள்.


ஹம்சாய்னி குணரட்ணம்


துஸ்யந்தி கணேசந்திரா

நோர்வே வாழ் தமிழ் மக்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்பதோடு தாயக உணர்வினைத் தாங்கியவர்களாக செயற்படுபவர்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழர்களின் புகலிட அரசியல் வரலாற்றில் இந்த நான்கு பெண்களின் அரசியல் பிரவேசம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற முற்போக்கான நிகழ்வாகவும் அமைகின்றது.

ஏனைய புலம்பெயர் நாடுகளின் தமிழ் மக்களின் சமூக-அரசியல் ஈடுபாட்டுக்கு உந்துதலாக அமைகின்ற விடயமாகவும் நோக்கப்படுகின்றது.

இவர்களைத் தவிர ஒஸ்லோவிலும், ஏனைய நகரங்களிலும் வெவ்வேறு கட்சிகளின் சார்பிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தமாக நோர்வேயின் 6 நகர சபைகளில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 6 பேர் பெண்கள் என்பதோடு இவர்களில் நான்கு பெண்கள் 2 ஆம் தலைமுறையைச் சேர்ந்த இளையோர்கள் என்பதும் இங்கே பதிவு செய்யப்படத்தக்கதாகும்.

நீண்டகால அடிப்படையில் புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் இருப்பின் வேர்கள் பதியம் போடப்படவுள்ளது என்ற யதார்த்தப் புறநிலையில் நோர்வே அரசியலில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகின்றது.

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகர சபைகளுக்கான தேர்தலில் ஒஸ்லோ நகர சபையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக யோகராஜா பாலசிங்கம் (பாஸ்கரன்) போட்டியிட்டார். இவர் ஓஸ்லோ வாழ் தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டி, அரசியல் தளத்தில் நின்று செயலாற்றியமை பலரும் அறிந்ததே.

இந்த முறை இவர் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆன போதும், நான்கு பெண்களின், குறிப்பாக இளைய தலைமுறையினரின் அரசியல் பிரவேசத்திற்கான காத்திரமான பணியினை ஆற்றியுள்ளார்.


சுமதி விஜயராஜ்


திலகவதி சண்முகநாதன்

நோர்வே தேர்தல் நடைமுறை

நோர்வே நாட்டில் 2 தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலும், 4 ஆண்டுகளுக்கொரு முறை நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்படுகின்றன.

இறுதியாக செப்ரெம்பர் மாதம் 2005 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலின் பின்னர் தொழிற்கட்சி, சோசலிச இடதுசாரிக் கட்சி மற்றும் மத்திய கட்சி ஆகியன இணைந்த இடதுசாரிக் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நோர்வே நாடாளுமன்றம் 169 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நோர்வேயில் 434 மாநகர சபைகளும் அவற்றின் கீழ் உள்ளூராட்சி சபைகளும் உள்ளன.

இன்னொரு வகையில் கூறுவது எனில் 2 ஆண்டுகளுக்கொரு முறை நோர்வே மக்கள் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர் எனலாம்.

வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்களின் அரசியல் பங்கேற்பு

ஐரோப்பிய நாடுகள் பலவற்றைப் போல் நோர்வேயும் ஒரு பல்லின மக்களைக் கொண்ட நாடாக இருப்பதால் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட மக்கள் சமூகங்களின் அரசியல் பங்கேற்பு என்பது இன்றியமையாத ஒன்றாகவே நோக்கப்படுகின்றது. குறிப்பாக ஒஸ்லோவின் மொத்த மக்கட் தொகையில் 20 விழுக்காடு வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்கள் ஆவர்.

வெளிநாட்டுச் சமூகங்கள் அரசியலில் பங்கேற்பதன் மூலமே இணைவாக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சிறந்த முறையில் வழிவகுக்க முடியும் என்பதோடு வாய்ப்புக்களையும், நலன்களையும் உரியமுறையில் பேண முடியும். அரசியல், சமூக, பொருளாதார, வாழ்வியல் விடயங்கள் சார்ந்த முக்கிய முடிவுகளிலும் தீர்மானங்களிலும், காத்திரமான கருத்துக்களை முன்வைக்க முடியும் என்பதும் யதார்த்தமாகும்.

Friday, September 7, 2007

சிலாவத்துறை சிறிலங்கா இராணுவத்தினர் சுதந்திரமாக நடமாடிய பகுத-சிலாவத்துறைப் பிரதேசத்தில் ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கவில்லை. ???பூசசாண்டி


சிலாவத்துறை சிறிலங்கா இராணுவத்தினர் சுதந்திரமாக நடமாடிய பகுதி: கொழும்பு ஆங்கில நாளேடு
[வெள்ளிக்கிழமை, 7 செப்ரெம்பர் 2007, 08:35 ஈழம்] [பி.கெளரி]

சிலாவத்துறை சிறிலங்கா இராணுவத்தினரின் சுதந்திர நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனினும் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து படையினர் தமது சுற்றுக்காவல் பணிகளை நிறுத்தியிருந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த அந்த நாளேட்டின் முக்கிய பகுதிகள்:

மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறை, அரிப்புப் பகுதிகளை கடந்த புதன்கிழமை (05.09.07) இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதற்கான திட்டம் வவுனியா, மன்னார் தளங்களில் பல வாரங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதிகளால் விவாதிக்கப்பட்டிருந்தது.

சிலாவத்துறை மீது மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தாக்குதல் திட்டத்தை படையினரின் சிறப்புப் படை பிரிகேட்டின் கட்டளை தளபதியான கேணல் நிர்மல் தர்மரட்ன 9 ஆவது கெமுனுவோச், 8 ஆவது சிங்க றெஜிமென்ட் போன்றவற்றின் கட்டளை அதிகாரிகள் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கும் கடந்த ஓகஸ்ட் 31 ஆம் நாள் விளக்கி கூறியிருந்தார்.

மறுநாள் அதிகாலை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் எம்.ஐ-17 உலங்குவானூர்தி வவுனியா இராணுவத் தலமையகத்தில் தரையிறங்கியது. அவர் வன்னி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் பாலசூரியவினால் வரவேற்கப்பட்டார். படை நடவடிக்கைக்கான இறுதித் திட்டங்களை வகுப்பதற்கே தளபதி அங்கு வந்திருந்தார்.

அதற்கு முன்னர் இரு வாரங்களாக விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்கு அண்மையாக ஊடுருவிய இராணுவத்தின் சிறப்பு படையணிகள், கொமோண்டோக்கள் அங்குள்ள விடுதலைப் புலிகளின் நடமாட்டங்கள் குறித்த தகவல்களை வவுனியா கட்டளை மையத்திற்கு தெரிவித்திருந்தனர்.

பின்னர், கடந்த சனிக்கிழமை (01.09.07) அன்று இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. சிறப்புப படையணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குழுவினர் முருங்கன் இராணுவ முகாமில் இருந்து சிலாவத்துறை நோக்கி முன்னேறினர்.

விடுதலைப் புலிகளின் எதிர்ப்புக்கள் அங்கு இருக்கவில்லை. சிலாவத்துறையில் இருந்து இராணுவத்தினர் சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள அறிவுப் பாலத்தை அடைந்த 30 நிமிடத்தில் விடுதலைப் புலிகள் 122 மி.மீ ரக எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

பாலத்திற்கு அண்மையில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளால் முன்னேறிய சிறப்புப் படையினர் பாதுகாப்பு தேடி ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. மடுப்பகுதியில் இருந்து மன்னார்-வவுனியா வீதிக்கு மேலாக 20 எறிகணைகளை விடுதலைப் புலிகள் ஏவியிருந்தனர்.

இதேசமயம் 8 ஆவது சிங்க றெஜிமென்ட் அணியைச் சேர்ந்த பல இராணுவ குழுக்கள் அதன் கட்டளைத் தளபதியான லெப். கேணல் ரமேஸ் பெர்ணான்டோ தலைமையில் அனுராதபுர வானூர்தி நிலையத்தில் இந்த நடவடிக்கையில் சேர்ந்து கொள்வதற்காக காந்திருந்தனர். அவர்கள் குடும்பிமலையில் இருந்து அனுராதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர்.

சிறிலங்கா வன்படையின் எம்ஐ-17 ரக ஐந்து போக்குவரத்து உலங்குவானூர்திகள் இவர்களை சிலாவத்துறையின் கிழக்குப் பகுதியில் தரையிறக்கியது. இந்த பகுதி அதற்கு முன்னதாக சிறப்புப் படையினராலும், கொமோண்டோக்களினாலும் சுத்திகரிக்கப்பட்டிருந்தது. முதலில் அவர்கள் கடலினூடாக சிலாவத்துறையில் தரையிறங்குவதாகவே திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் திட்டம் மாற்றப்பட்டடு அவர்கள் வான்வழி மூலம் நகர்த்தப்பட்டனர். சிலாவத்துறை - முருங்கன் வீதி, சிலாவத்துறை, கொண்டச்சி வீதிகளை பாதுகாப்பதே அவர்களின் பிரதான நோக்கம்.

தரையிறங்கிய 8 ஆவது சிங்க றெஜிமென்ட் படையினர் முருங்கனில் இருந்து முன்நகர்ந்த சிறப்புப் படையினருடன் ஒரு மணிநேரத்தில் இணைந்து கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது சிறப்புப் படையினர் தப்பிச் செல்லும் விடுதலைப் புலிகளின் வழிகள் எனக் கருதும் பாதைகளில் தடுப்புக்களை ஏற்படுத்திய போதும் அங்கு விடுதலைப் புலிகளை அவர்களால் காண முடியவில்லை.

நடவடிக்கை ஆரம்பித்த போதே அவர்கள் கடல் மற்றும், தரை வழிகளால் வெளியேறி விட்டனர். விடுதலைப் புலிகளின் சில பிரிவினர் பறையனாலங்குளம் பகுதிக்கும் சென்று விட்டனர். அது மன்னர் - வவுனியா வீதிக்கு அண்மையான பகுதியாகும். அதன் ஊடாக மடுவை கடந்துவிடலாம்.

முதல் நாள் நடவடிக்கையில் இராணுவத்தினர் சிலாவத்துறை, அரிப்பு, கொண்டைச்சி ஆகிய பகுதிகளை கைப்பற்றினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சிலாவத்துறை மற்றும் அரிப்பு பகுதிகளை அண்டிய பகுதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அங்கு எந்த விதமான எதிர்ப்பையும் விடுதலைப் புலிகள் காண்பிக்கவில்லை. அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை அந்த பகுதிகளை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இராணுவத்தினர் கொண்டுவந்த பின்னர் இராணுவத்தினரின் வாகனங்களும், காலாட் படையினரும் அப்பகுதிக்கு நகர்ந்தனர்.

அந்தப் பகுதியில் வாழ்ந்த 6,000-7,000 பொதுமக்கள் படை நடவடிக்கை ஆரம்பமாகியதும் அங்கிருந்து வெளியேறி முருங்கன், நானாட்டான் நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்திருந்தனர். அவர்களில் சிலர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருப்பதாக நானாட்டான் பிரதேச செயலாளர் நடராஜா திருஞானசம்பந்தர் தெரிவித்துள்ளார். அவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் வேலைகள் அடுத்த சில வாரங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை இராணுவத்தினர் பலப்படுத்தி வருவதுடன், குதிரைமலை முனைப்பகுதிக்கும் அவர்கள் பிரவேசிக்கக்கூடியதாக உள்ளதாக மூத்த படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரின் தெற்குப் பகுதியை கைப்பற்றியது வவுனியா - மன்னார் வீதியின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் கடல் வழி ஊடாக ஆயுதங்களை தருவிப்பதையும் தடுத்துள்ளது.

இந்த பகுதியில் இருந்தே விடுதலைப் புலிகள் கொழும்பு துறைமுகம் மீது மூன்று தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இந்த தாக்குதல்களுக்கான வழங்கல் தளங்களாக சிலாவத்துறை, குதிரைமலை ஆகிய பகுதிகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருந்தனர்.

கற்பிட்டியில் உள்ள விஜயா கடற்படைத் தளத்தை தவிர மன்னாருக்கும் கொழும்பு துறைமுகத்திற்கும் இடையில் பிரதான கடற்படைத் தளம் எதுவும் இல்லை. கடற்படையினர் கரைக்கு அண்மையாகவும் சுற்றுக்காவல்களிலும் ஈடுபடுவதில்லை, ஏனெனில் அந்த பகுதியின் கடலின் ஆழம் கடற்படை கப்பல்கள் பயணிப்பதற்கு ஏற்றதல்ல.

அங்கு ஒரு பிரிக்கேட் படையினரை நிலைநிறுத்துவதுடன், மன்னார் தொடக்கம் புத்தளம் வரையிலும் கடற்படைத் தளம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

சிலாவத்துறையின் இராணுவ சரித்திரம்

1991 ஆம் ஆண்டு சிலாவத்துறை மற்றும் கொக்குப்படையான் பகுதிகள் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தன. இந்த இரு பகுதிகளிலும் இராணுவத்தினர் பெரும் முகாம்களை கொண்டிருந்தனர்.

எனினும் 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் நாள் விடுதலைப் புலிகள் கடல் மற்றும் தரை வழியாக பெரும் அதிர்ச்சிகரமான தாக்குதலை சிலாவத்துறை தளம் மீது தொடுத்திருந்தனர். அப்போது அங்கு 6 ஆவது கஜபா றெஜிமென்ட் நிலைகொண்டிருந்தது. அந்தக் காலப்பகுதியில் முன்னாள் இராணுவத் தளபதியான சிறிலால் வீரசூர்ய அந்தப் பகுதிக்கான பிரிகேட் தளபதியாகவும் பணியாற்றி இருந்தார்.

அதேசமயம் விடுதலைப் புலிகள் கொக்குப்படையான் இராணுவத் தளத்தின் மீதும் தாக்குதலை தொடுத்திருந்தனர். விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த சிலாவத்துறை மற்றும் கொக்குப்படையான் தளங்களை மீட்பதற்காக காலம் சென்ற மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் வழிநடத்தலில் மேஜர் பராக்கிரம பன்னிப்பிட்டியவின் தலைமையில் (தற்போது இவர் மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ளதுடன், கிழக்கு மாகாண இராணுவத் தளபதியாக கடைமையாற்றி வருகின்றார்) "புலி அலை" எனும் பெயரிடப்பட்ட இராணுவ நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நான்கு நாள் சமரின் பின்னர் விடுதலைப் புலிகள் சமரை நிறுத்தியிருந்தனர். இந்த மோதல்களில் 80 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் அங்கிருந்த படையினர் படை நடவடிக்கைகளுக்காக வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டதனால் அங்கு இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட்டிருந்தது. எனவே அங்கு விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

எனினும் படையினர் தமது சுதந்திர நடமாட்டங்களை அந்தப் பகுதிகளில் பேணி வந்திருந்தனர்.

2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து விடுதலைப் புலிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ சிலாவத்துறை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த படையினரின் சுற்றுக்காவல் பணிகளை நிறுத்தியிருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.